Thursday, August 23, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்.4. புத்தர் வேற்றுமைக்கு எதிரானவர்

  புத்தரின்  காலம்  விக்கிரமி வருடம் .மு 509-430 ;கி.மு.566-487.

மனித  துன்பங்கள் மற்றும்  மற்றவர்களின்
 இன்னல் கண்டு உருகுகின்ற  மஹான்களில்
 பகவான் புத்தரின் பெயர் மிகவும்  உயர்ந்தது.
மகத்துவம் நிறைந்தது.
 அவர் ஏசுவிற்கு முன் பிறந்தார்.
பகவான் புத்தரின்  இதயத்தில்
மனிதர்களின் வேறுபாட்டை ஏற்படுத்தும்
 மனிதத் தன்மை யற்ற  அவமானத்தைக்கண்டு   துன்பப்பட்டது.  அவர் அரசகுமாரர் .
அவர் அரசகுடும்பத்தை விட்டு விட்டு
பேசாமல் வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். 
 துறவறம் பூண்டு  வீடுவீடாக பிக்ஷை எடுத்து
 வாழ்க்கைக்கு ஆதாரமாக்கினார்.
அவர் ஜாதிவேறுபாடாற்ற ஒரு புதிய சமுதாய
 தத்துவத்தை மக்களுக்கு முன் வைத்தார்.
அவர் தன்  முதல் உபதேசத்தை காசியில் (சாரநாத்)தொடங்கினார்.
இதற்குப்பிறகு அவர் 44 ஆண்டுகள்
 தொடர்ந்து உபதேசித்துக் கொண்டே  இருந்தார்.
கௌதம் புத்தரும்  சுனீத்தும் :-
சுனித்   தாழ்ந்த வஞ்சிக்கப்பட்ட 
ஜாதியைச் சேர்ந்த இளைஞன்.
சாலையைக் கூட்டிக்கொண்டிருந்தான்.
புத்தர்  அவ்வழியில் வருவதைப்  பார்த்து
விலகி நின்றான்.
அவனை  புத்தர் தீண்டக் கூடாது என்று
நினைத்தான் .
பகவான் புத்தர் அவனுக்கு
 அருகில் சென்று  கேட்டார் :-
நீ வேலையை விட்டுவிட்டு
என்னுடன் வர தயாரா ?
தீண்டப்படாத சுநீத்திற்கு  மிகவும் ஆச்சரியம்.
இதுவரை அவனிடம் இப்படி யாரும்
நடந்து கொண்டதில்லை.
அவன் புத்தரிடம் சொன்னான்---
நீங்கள் தான் என்னிடம் அன்பாக
நடந்துகொள்ளும் முதல் மனிதர்.
நீங்கள் அடைக்கலம் கொடுத்தால்
உங்களிடம்  பணியாற்றுவதை என்னுடைய
சௌபாக்கியமாக உணர்கிறேன்.புத்தர் சுநீத்திற்கு
தீக்ஷை அளித்தார். அவனை புத்த சங்கத்தின்
அங்கத்தினர் ஆக்கினார்.
 ஆனந்தனும் சூத்திர பெண்ணும் :-
 கௌதமபுத்தரின் சகோதரர் ஆனந்தர்,
சிற்றப்பா மகன்.அவர் புத்தரின் மிகவும் அன்பான சீடர்.
சிராவஸ்தியில் பிக்ஷை வாங்கிய பின் விஹாருக்கு திரும்பிக்கொண்டிருந்தார் .அந்த நேரம் ஒரு பெண் தண்ணீர்
கிணற்றில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தாள் .ஆனந்தர்  அவளிடம் தண்ணீர் கேட்டார் .அந்தப்பெண் தான்  சூத்திரர் என்று  தண்ணீர் கொடுக்கத்  தயங்கினாள். ஆனந்தர் அவளிடம்  தண்ணீர் தானே கேட்டேன் . உன் ஜாதி கேட்கவில்லையே என்றார் .என் தாகம்  தணிய தண்ணீர் கேட்கிறேன். ஆனந்தர் தண்ணீர் குடித்தார். பின்னர் அந்தப் பெண் மற்ற பெண்களுடன் பௌத்த சங்கத்தில் சேர்த்துக்கொண்டாள் .
 பகவான் புத்தர் சொன்னார்--"ஜாதியின் அடிப்படையில் யாரும்  சிரியவரோ பெரியவரோ ஆக முடியாது.
இந்த பழைய சமுதாய முறைதான் இந்த அநியாயத்தை அன்னை  என்று  புத்தர் நினைத்தார். ஆகையால் அவர் இந்த முறையை எதிர்த்தார்.
ஜாதி -இனம் -சம்பிரதாய மில்லா
 ஒரு  புதிய சமுதாயத்தை
அமைக்க முயற்சி செய்தார்.
  நடைமுறையில் இருந்த கர்மகாண்டங்கள் ,
உருவ வழிபாடு போன்ற வற்றை கடுமையாக 
உறுதியாக எதிர்த்தார்.
புத்தர் ஜாதி வேறுபாட்டை ஒழித்து
ஒரு புதிய சமுதாய முறையை உருவாக்கினார்.
 ஜாதி முறைக்கு புதிய விளக்கமளித்தார்.
அவர் தன்னுடைய சம்பிரதாயத்திற்கு
தலைவராக  இருந்தார்.அநேக அரசர்கள்,உயர் ஜாதியினர்,
பணக்காரர்கள் அவரை வழிபட ஆரம்பித்தனர்.
அன்றைய கால கட்டத்தில் அவர் மிக
அதிக பணிவான கருணை நிறைந்தவராக இருந்தார்.
   "நான் நோயாளிகளுக்கு வைத்தியன்,மனிதனுக்குநண்பன் ,
மிகப்பெரிய ஏழை மனிதன். ஜீவன்களிடம் கருணை இருக்கிறது. அதனால் நான் அறிவுப் பார்வையால் உலகத்தை  சோதித்தறிந்தேன்.  தூய மானமுள்ள மனிதர்களுக்கு  பஞ்சமில்லை. " என்று புத்தர் சொல்லிவந்தார்.  ஸீடன் ஆனந்தர் அவர்
 இறப்பதற்கு முன் சங்க ஒழுங்கு முறையை
எப்படி  பாதுகாப்பது என்று வினவினார்.
அதற்கு புத்தர் சங்கத்தைப் பற்றி ஏன்  ஆலோசனை வழங்க வேண்டும்?
பின்னர்  அவரே  தன்  உபன்யாசத்தில் சொன்னார் --"ஆனந்தா !ஆத்மதீபோ  பவ ." அதாவது  நீ உன் ஆள்
மனதில் ஒளி மயமாக இரு. அந்த இதய ஒளியில் நீயே உன்வழியை  விரிவாக்கு .  பௌத்த தர்மத்தில் எல்லாவித வேற்றுமைகளுக்கு  மேல் எழுந்து மனித அளவில் அன்பு மற்றும் கருணை பெறுவதற்கு வலியுறுத்தினார்.
ஆணவம்  என்ற  பொய்யான சுவர்களை தகர்த்தெறிய வேண்டும் என்றார்.
கௌதம் புத்தரும் ஜாதி வேறுபாடும் :-
பகவான் புத்தரும் எவ்வித ஜாதி
சம்பிரதாய வேறுபாடுகளை ஏற்கவில்லை.
"மன்ஜிம்  நிகாய"  என்ற  நூலில் 
 ஒரு நிகழ்ச்சிபற்றிய வருணனை வருகிறது.
காசியில் உள்ள அந்தணர்கள் ஆஸ்வலயன்  என்ற
பண்டிதரை ஒரு குழுவுடன்  புத்தரிடம்
பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்கள்.
அந்தணர்களின் மேன்மை பிறப்பால்
 ஏற்படுகிறது என்பதை  உறுதி படுத்த வந்தனர் .
புத்தருடன் இவர்கள் செய்த  சர்ச்சை
 மிகவும் ருசிகரமாக  இருந்தது.
பகவான் புத்தர் பிறப்பால் அந்தணர் உயர்ந்தவர் என்பதை மறுத்தார். அந்தணர்கள் கூற்றை ஏற்கவில்லை.

புத்தர் :--அந்தணர் மற்றும் சூத்திரரின் பிறப்பு ஒரே வீதமாகத்தானே  ஏற்படுகிறது ?
ஆஸ்வலாயன் :- ஆம் !பகவானே!ஒரேவிதமாகத்தான் .
பகவான் புத்தர் :-எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும் திருடாமல் , பொறாமை ,வெறுப்பு ,பேராசை இன்றி
நடந்துகொண்டால் ,ஸ்வர்கத்தில் பிறப்பார்கள் அல்லவா ?
ஆச்வலாயன்:-ஆம்! பகவானே!
பகவான் புத்தர்:-அந்தணர்கள் சந்தன விறகை எரிக்கிறார்கள். சூத்திரர்கள்   ஆமணக்கு விறகை எரிக்கிறார்கள். அதன் எரிவதால் உண்டாகும் தணலில்
தன்மையில் ஏதேனும் வேறுபாடு உண்டா ?
ஆஸ்வலாயன்  :- எந்த வேறுபாடும் இல்லை, பகவானே!
புத்தர்;-   ஒருமனிதன்  ஒழுக்கமுள்ளவன் .மற்றவன் ஒழுக்கமற்றவன் .அவர்களில் உயர்ந்தவன் யார் ?
ஆஸ்வலாயன் :--ஒழுக்கமுள்ளவனே !பகவான்!
 அப்பொழுது  புத்தர்  பிறப்பால் ஜாதியின் மதிப்பற்ற
சாரமற்ற தன்மையை விளக்கி வாழ்க்கையின் தூய்மை
பற்றி உபதேசமாளித்தார்.
  சம்ஸ்கிருத மொழிக்கு பதிலாக  கிராமத்தில் நடைமுறையில் இருந்த பாலி  மொழியில்  புத்தர்
நூல்களை இயற்றத்  தொடங்கினார்.
தர்மம் என்ற சமமான சொல்  தம்மம்  . அதிலிருந்து
பௌத்த தம்மம் ஸ்தாபிக்கப்பட்டது.
சிறப்பான  அறிவுத்திறன் ,கருணை மற்றும் அன்புநிறைந்த
நடவடிக்கையால்  லக்ஷக்கணக்கான மக்கள் அவரின் சீடர்களாகி  புத்தரைப் பின்பற்றத்  தொடங்கினார்கள்.
சில நூல்களில்  சூத்திரர்கள் வேதம் படிப்பது கூடாது. அவர்கள்  ஒதுக்கப்பட்டவர்கள்  என்று எழுதப்பட்டுள்ளது.
புத்தர் தர்ம நூல்கள் மற்றும் மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்று  அறிவித்தார்.
 தன்  அனுபூதியால் உண்மையை ஆராய்ச்சி செய்யுங்கள்.
அதன்  அஸ்திவாரக்கற்கள் அதன் முழு தத்துவமும் நடைமுறையும் ஒவ்வொரு மனிதனையும் சமமாக கருதுவதில் தான் எழுப்பப்பட்டுள்ளது.
 அதற்கும் ஹிந்துத்துவத்தின்  சொந்த
உண்மையான எண்ணங்கள்  அப்படியே உள்ளன. அவருடைய எண்ணங்கள் வேகமாகப் பரவியது.
 உலகின் பல நாடுகளில்  பரவி   பின்பற்றப்பட்டது.
ஹிம்சை மற்றும் சுயநல மனித சமுதாயத்தில்  இது ஒரு
புதிய சூரியோதயமாக பிரகாசித்தது.
புத்தமதக் கொடி  எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள்
பலநாடுகளுக்குச் சென்றனர். அங்கே அவர்களுக்கு நம்பியதைவிட  அதிக வெற்றி கிடைத்தது.
புத்தமதம்  சங்கடத்தில் :- ஹிந்து சமயத்தின் மாற்றமும் எண்ணங்களின் சுதந்திரமும் புத்த மதத்தைப் பல பிரிவுகளாக பிரிந்துவிட்டது. புத்தமதத்தில்  மகாயானம் ,ஹீனாயானம் ,வஜ்ரயானம் ,சஹஜயானம் என்ற பல வழி
பிரிவுகளாக்கியது. அஹிம்சை அதிகமாக இருந்ததும் ,
ஒழுங்கற்ற நிலை ,கர்மகாண்டங்கள் அதிகரித்தது,
அதனால் போராட்டங்கள் அதிகமாயின. தங்களுடைய  தவறுகளைப்  போக்கி பழைய வேதகால பரம்பரையை மீண்டும் கொண்டுவருவது சரியென சமுதாயத்திற்குத் தோன்றியது. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு  சில விசித்திரமான மாற்றங்கள் உண்டாகத்தொடங்கின .
புத்தமத  நூல்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதத்  தொடங்கினர்.
குமாரலிபட்டர் புத்த குருமார்களிடம் இருந்து சம்ஸ்கிருதத்திலேயே கல்வி பயின்றார். புத்தர் உருவ வழிபாட்டிற்கு எதிரானவர். ஆனால் அவர் மரணமடைந்த ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் அவருடைய சிலைகள்  அவரின் சீடர்களால்  உருவாக்கப்பட்டு வழிபடத்தொடங்கப்பட்டது.
இது மாற்றமடையும் காலமாக மாறியது. ஆனால் புத்தமதம் பல வெளிநாடுகளில் வேரூன்றி இன்றும் பின்பற்றப்படுகிறது.
பாரத தேசசெதேசீயக்கொடியின் நடுவில் இருக்கும் சக்கரம் புத்தமத ஸ்தூபியின் வடிவமே.அது தர்ம  சக்கரமாக விளங்குகிறது. காந்தீஜியின் அஹிம்சை செய்தியும் புத்தரிடமிருந்தே பின்பற்றப்பட்டது. டாக்டர் அம்பேத்காரும் அன்பின் அடிப்படையில் சமத்துவம் என்பதை  பகவான் புத்தரின் தத்துவத்திலிருந்துதான் ஏற்றார். நான் சுதந்திரம் ,
சமத்துவம் ,பந்துத்துவம் போன்றவற்றை பிரஞ்சு  புரட்சியில் இருந்து அல்ல ,பகவான் புத்தரின் எண்ணங்களில் இருந்து தான் பெற்றேன் பகவான் புத்தர்   கருணை , அன்பு,தயை மற்றும் அன்பின் பிரதிபிம்பமாக இருந்தார்.



















No comments: