Tuesday, August 28, 2018

பாரத சாது பரம்பரை

   பவித்திரம் ,பரோபகாரம் ,நல்லொழுக்கம்  என்ற விரிவான பொருள் தான் சந்த்  / சாது.  சாது என்பதன்  பொருள்
சாது ,தியாகி , மஹாத்மா ,ஈஷ்வர்  பக்தர், தார்மீக புருஷர்  என்று பரந்து  விரிந்த  பொருள்.
   சாதுக்கள் உலகத்தின் கஷடங்களைப் பொறுத்துக்கொண்டு  மற்றவர்களின் கஷ்டங்களைப்  போக்குபவர்கள்  என்றுதான்  மக்கள் கருதுகிறார்கள்.
சாதுக்கள் புனிதமானவர்கள்.எல்லா இடங்களிலும் ,எப்பொழுதும்  எளிதாக சந்திக்க  முடியும். அவர்கள்
எல்லோரையும் சமமாகக்  கருதுபவர்கள்.
பக்தர்கள்  சாதுக்களை    சாஃஷாத்  கடவுளின் உருவமாகக்
கருதினர்.

  இந்த பூமியில் கடவுளின் அவதாரம்
எப்பொழுதாவது  ஒருமுறை தான்   எடுப்பார்.
ஆனால்  சாதுக்கள் தினந்தோறும்  அவதாரம் எடுப்பவர்கள்.
சாதுக்கள் சமுதாயத்தில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களின்  சுக துக்கங்களை
பங்குபோடுகின்றனர். ஒரு  எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ தூண்டுகின்றனர்.   மேலும்  எல்லோருக்கும் அன்பின் செய்தியை அளிப்பார்கள்.



      

No comments: