Saturday, August 25, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் ஸ்ரீ ராமானந்தர் --8

  வட பாரத பக்திப்  புரட்சியில் ஸ்வாமி ராமானந்தரின்  பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அவர் பிறந்தவருடம் விக்கிரமி வருடம் 1356இல் இருந்து 1505 அதன்படி வருடம் கிபி 1356 இல் இருந்து 1505 வரை. அசாதாரண ஆளுமை ,நன்னடைத்தை பலம்  ஆகியவை ஹிந்து தர்மத்தில் மிகுந்த வலிமை ஏற்படுத்தியது .அனைத்து இடங்களிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
  ராமானந்தர் அவரது  காலத்தில் செல்வாக்குள்ள வழிகாட்டியாகத் தோன்றினார். அந்தக்காலத்திய எல்லா சாதுக்களும் இவரது தாக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். இவர் பிரயாகையில் பிறந்து பன்னிரண்டு வயதிலேயே காசியில் இருந்து  சாஸ்த்திரங்களைப் பயின்றார். திருமணம்  செய்துகொள்ளவில்லை.ஸ்ரீ ராகவானந்தா விடம்  தீக்ஷை பெற்று  காசியில் பஞ்ச கங்கைக்  கரையில் தவம் நிறைந்த வாழ்க்கையை ஆரம்பித்தார்.
உயர்ந்த  துறவியான ஸ்ரீ ராமானந்தர் முழு மனிதத்துவம் ,நாடு ,ஹிந்து சமுதாயம் ஆகியவற்றைக்  காக்க வாழ்க்கை முழுவதும்   துறவு வாழ்க்கையை ஏற்றார்.
 அவர் தன சீடர்களுக்கு செய்த உபதேசம் --
"எல்லோரும்   ராமர் புகழ் பாடுங்கள்.எல்லோருக்கும் பக்தி பாராயணம் கற்றுத்தருங்கள்.
  நூற்றுக்கணக்கான சாதுக்களை  -மஹாத்மாக்களை
ஒன்று திரட்டி பக்தி  விழிப்புணர்வு,உலக அமைப்பு .சமுதாய ஒற்றுமை ஆகிய மகத்துவம் நிறைந்த பணியில் ஈடுபட்டார்.
 வட  பாரதம் ,வங்காளம் ,மஹாராஷ்ட்டிரம் ,அசாம் முதலிய இடங்களில் தொடர்ந்து பக்தியின் பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது.  இதற்கு மிகவும் அதிக பொறுப்பேற்றவர்  ராமனந்தர்.
பக்தி தெற்கு பாரதத்தில்  பிறந்தது. அதை வட  பாரத்தில் கொண்டுவந்து வளர்த்தவர் ராமானந்தர்.இந்த பக்திப்  புரட்சி
அரசியல் மற்றும் சமுதாயத்தில் புதிய புரட்சியைத் தோற்றுவித்தது. ஸ்ரீ ராமநந்தரின் தூண்டுதலால் ஹிந்து மத சாதுக்களும் துறவிகளும்  சமுதாயத் தீமைகளையும் ,முகலாயரின் கொடுமைகளையும் ஒழித்து  வெற்றிபெற
எதிரிகளைத் தோற்கடிக்கத் தயாராயினர்.

No comments: