Monday, August 27, 2018

ராமானந்தர் --பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்-9

  ராமானந்தரின்  ஆளுமை  தாராள  மனப்பான்மை.

சமுதாயத்தில் எவ்வித அனுகூலமற்ற தன்மையை  ஏற்கவில்லை.  அவர் மனிதநேயமிக்க சாது என்பதே  உண்மை.   பிறப்பின் அடிப்படையில்   உயர்வு -தாழ்வு என்ற எண்ணத்தை  கடுமையாக  எதிர்த்தார்.
  அவர்  சமுதாயத்திலும் மத நோக்கத்திலும்  ஒதுக்கப்பட்ட  மேலும்  சுரண்டப்பட்ட  மனிதர்களின்  முன்னேற்றத்திற்காக
நன்மைக்காக  உறுதி பூண்டார்.
   பக்தி ரசம்  எல்லாவித
ஏற்றத்தாழ்வையும் போக்கமுடியும்
என்று சொன்னார்.
  அந்த ஒரு கால கட்டத்தில்
குற்றங்களைத்தடுக்க ,
 மனிதநேயம்  வளர்க்க
சரியான நடவடிக்கைதான்.
ஆனால்  துணிச்சலான காரியம்.
 அவரைப்போன்ற   உறுதியும்  துணிச்சலும்
  மிக்க சிந்தனையாளரால் தான் முடியும்.
   
        ராமானந்தரின்  சீடர்களில்
உருவமற்ற இறைவனை
   வழி  படுபவர்களும்,
உருவமுள்ள இறைவனை
 வழிபடுபவர்களும்  இருவகையினருமே
 இருந்தனர்.

ஆனால் அவர்கள் ராமானந்தர் சீடர் ஆனதும்
ராமர்  என்பதே  கடவுள் என்று  ராமநாமம் ஜபித்து
புகழ் பரப்பினர். கபீர் உருவ வழிபாட்டிற்கு எதிரி.
ஆனால்  அவரும்  ராம நாமத்தை ஏற்றார்.
துளசிதாசர்  உருவ வழிபாட்டை  விரும்புபவர்.
அவரும்  ராமரின் பக்தர்.
கபீரின் ராமர் அளவில்லா சக்தி கொண்டவர்.
துளசரின் ராமர்  தசரதரின் புத்திரர்.
 மனித அவதாரங்களின்
கஷ்டங்களை  அறிந்தவர்.
கபீரின்  ராமரின் கரங்கள்  எண்ணிக்கையில்   எல்லை கடந்தது.  துளசியின்  ராமர்  இருகரங்கள் .


ராமானந்தர் ராமரின் உருவமற்ற உருவமுள்ள தன்மை

இரண்டுமே  ஏற்றார்.

 ராமானந்தர்  குரு ராகவானந்தரிடம்  யோகா கல்வி பயின்றார்.

  அந்தக்காலத்தில் இருந்தே ஹிந்துக்களின் எண்ணம் ஹிந்து
முஸ்லீம்  ஆகலாம். ஆனால் முஸ்லீம் ஹிந்து ஆக முடியாது.
ராமானந்தர் ஹிந்துக்களின் இந்த எண்ணத்தை மாற்ற முயன்றார்.  அவர் முஸ்லீம் ஹிந்துக்களை சாஸ்த்திர ரீதியில்
மீண்டும் ஹிந்துக்களாக்கினார். ஆயிரக்கணக்கான   மதம்
மாறிய  ஹிந்துக்களை மீண்டும் ஹிந்துக்களாக்கி புரட்சி செய்தார் . அயோத்தியா அரசர் ஹரிசிங்கின் தலைமையில் முஸ்லிமாக மாறிய 35 ஆயிரம் ஹிந்துக்களை பராபரிவர்த்தன்  மறு மாற்றம் என்ற உரையில் தாயமாதத்திற்கு மாற்றினார். இதை ஸ்வதர்மம்  என்கிறார்.
தாய் மதம் மாறிய ஹிந்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தார். வீடு திரும்புதல் என்ற முறையில் அவர் சிஷ்யர்கள்  மதம் மாறிய இந்துக்களை மீண்டும் ஹிந்துக்கள் ஆக்கி  வைஷ்ணவ தர்மத்தை ஏற்கும்படி  செய்தனர்.அவர்கள் கையில் துளசிமாலை ,நெற்றியில் வைஷ்ணவ நாமம்  ,நாவில்    ராமநாமம்  இதுவே
மதம் மாறிய   முஸ்லிம்களின் ஹிந்து  மத சன்னமாகியது.
இந்த முறையால்  இந்துக்களிடம்  தன்னம்பிக்கை ,ஹிந்துத்தப் பற்று உறுதியாகியது.

  ராமானந்தரின்  மிகப்பெரிய மாற்றம்  ஹிந்தியில்
 தர்ம   நூல்களை எழுதியதாகும் . மக்கள் தேவவாணி சம்ஸ்கிருதம் விடுத்து மக்கள் பேசும் மொழியை ஏற்றனர்.
வாலமீகி ராமாயணத்தைவிட துளசி ராமாயணம் ஒவ்வொரு வீட்டிலும்  பாராயணம்  செய்யப்பட்டது.
மக்கள் மொழியில்  பக்திநூல்கள் எழுதியதால் ராமனந்தர் வையகப் புகழ்பெற்றார். அவர் ஜகத்  குருவாக வாழ்ந்தார்.






       

No comments: