Wednesday, March 29, 2023

துளசிதாசர் இராமாயணம்-சுந்தர காண்டம்-பகுதி--இரண்டு-2-

 துளசிதாசர்  இராமாயணம்-சுந்தர காண்டம்-
பகுதி--இரண்டு-2-

ஹனுமானி்ன்  அறிவுரையால் இராவணன் அதிக கோபம் அடைந்தான். அங்குள்ளவர்களிடம் சொன்னான்---அடே!இந்த முட்டாளின் உயிரை உடனே எடுத்து விடுங்கள். இராவணனின் கட்டளையைக் கேட்டதுமே அரக்கர்கள் ஹனுமானைக் கொல்ல ஓடினர்.அப்பொழுது அங்கே விபீஷணன் தன் அமைச்சர்களுடன் வந்தான்.
அவன் இராவணனின் முன் தலைகுனிந்து பணிவாக வணங்கி கூறினான்--" தூதனைக் கொல்வது 
நீதிக்குப் புறம்பானது. அரசே! வேறு ஏதாவது தண்டனை கொடுங்கள். அவையில் உள்ள அனைவரும் 
விபீஷணனின் ஆலோசனையை சரி என்று ஆமோதித்தனர். 
இதைக் கேட்டதும் இராவணன் சிரித்துவிட்டு  குரங்கின் உடலை சின்னாபின்னமாக்கி அங்க ஹீனனாக 
அனுப்பலாம்.  குரங்கி்ற்குத் தன் வால் தான் மிகவும் பிரியம். எண்ணெயில்  துணியினை முக்கி நனைத்து 
அதன் வாலில் சுற்றி தீ  வைத்து விடுங்கள். வாலில்லா  முட்டாள் குரங்கு தன் தலைவனிடம் ்சென்று 
தன் தலைவனை   அழைத்துக் கொண்டுவரும். அது தன் தலைவனை அதிகமாகப் புகழ்ந்தது
நான் தலைவனின் சாமார்த்தியத்தை பார்க்கிறேன்.

இராவணனின்  சொற்களைக் கேட்டு ஹனுமான் புன்னகை பூத்தார். சரஸ்வதிதேவி இவனுக்கு 
இத்தகைய அறிவை  அளித்துஇருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். இராவணனி்ன் கட்டளையை ஏற்று அரக்கர்கள் வாலில்  நெருப்பு வைக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினர். வாலில் சுற்றத் துணியும்
எண்ணெயும் வாங்கியதில் இலங்கையி்ல்  தீர்ந்துவிட்டது.ஹனுமானின்  வால் நீண்டு கொண்டே சென்றது. நகர மக்கள் வேடிக்கை பாரக்கக் கூடினர். அவர்கள் அனுமானை காலால் உதைத்தனர்.
அவரை மிகவும்  கேலியும் கிண்டலும் செய்தனர். முரசு  அடித்தனர். கை தட்டினர். அனுமானை ஊர் முழுவதும் வலமாக அழைத்துச் சென்று பிறகு நெருப்பு வைத்தனர்.நெருப்பு எரிய ஆரம்பித்ததும் உடனே ஹனுமான் சிறிய உருவமெடுத்தார். கட்டிலிருந்து விடு  பட்டு மாடிகளில் ஏறினார்.பெண்கள் அனைவரும் பயந்தனர். ஹனுமான் அட்டகாசத்துடன்  கர்ஜித்துக் கொண்டே   ஆகாயத்தில் மறைந்துவிட்டார்.அவர் உடல் பெரிதாக இருந்தது. ஆனால் லேசாக சுறுசறுப்பாக இருந்தது.
அவர் ஒரு மாளிகையில் இருந்து மற்றொரு மாளிகைக்குத் தாவினார்.நகரமே பற்றி எரிந்தது.
மக்கள் நிலை மோசமாகியது. நெருப்பு ஜுவாலைகள் கோடிக் கணக்கில்  பரவிக் கொண்டிருந்தன.
நாலாப் பக்கங்களில் இருந்தும் "ஐயோ!அம்மா! என்ற கூக்குரல்கள் எழுந்தன. நம்மை யார் காப்பாற்றுவார்கள்? நாங்கள் முதலிலேயே சொன்னோம்.இது குரங்கல்ல.குரங்கு வடிவத்தில் வந்த தேவன் என்று. சாதுவை  அவமானம் செய்ததின் விளைவு ஒரு நொடியி்ல் நகரமே எரிந்துவிட்டது.
விபீஷணனின் வீடு மட்டும்  எரியவில்லை.
சிவன் பார்வதியிடம் கூறினார்--" தேவி பார்வதி! நெருப்பைப் படைத்தவனின் குமாரன் ஹனுமான்.
அதனால் தான் ஹனுமான்  நெருப்பில் எரியவில்லை.ஹனுமான் இங்கும் அங்கும் பாய்ந்து இலங்கையை எரித்துவிட்டான். பிறகு சமுத்தரத்தில் குதித்தார்.
 
வாலில் உள்ள நெருப்பை அணைத்து விட்டு தன்னுடைய உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு மீண்டும் 
சீதையின் முன் இரு கரங்கள் கூப்பிக் கொண்டு நின்றார். பிறகு சீதையிடம் ஸ்ரீராமர் கொடுத்தது
போல் எனக்கு ஒரு அறிமுக அடையாளச் சின்னம் கொடுங்கள். 
சீதை உடனே தன்னிடம் இருந்த சூடாமணியை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார். 
அனுமான் அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார்.
சீதை ஸ்ரீ ராமருக்கு தன் செய்தியாகக் கூறினார்---என் வணக்கத்தைக் கூறுங்கள்.பிரபு உங்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது. இருப்பினும் ஏழைகள் மீது இரக்கம் காட்டுவதில் நீங்கள் புகழ் பெற்றவர்.நான் ஏழை. அந்த புகழை நினைவுப் படுத்தி நிலை நாட்ட என் பெரும்  துன்பத்தைப் போக்குங்கள். என்று என் சார்பாகக்  கூறுங்கள். 
மகனே! அவருக்கு இந்திரனின் மகன்  ஜயந்தனின் கதையைக் கூறவும். அவனுடைய பாணத்தின் மகிமையை நினைவு படுத்தவும். ஒரு மாதத்தி்ல் பார்க்க வரவில்லை என்றால் என்னை உயிரோடு பாரக்க
முடியாது என்பதையும் கூறவும். 
மகனே! நான் எப்படி உயிரோடு இருப்பேன்.நீ வந்ததால்  மனம் குளிர்ந்தது. அவர் வருவார் என்று கூறுகிறாய். அவர் வரும்வரை எனக்கு இரவும் பகலும் ஒன்றே.
ஹனுமான் சீதைக்கு பலவிதங்களில்  தைரியம் கூறி ஸ்ரீராமருக்கு தகவல் கூறச் சென்றார்.
போகும் போது ஹனுமான் செய்த கர்ஜனையால் பல கர்பவதி அரக்கர்களின் கர்பம் கலைந்தது.
கடலைத் தாண்டி கடற்கரையை அடைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்.மற்ற வானரங்கள் 
ஹனுமானைப் பார்த்து மகிழந்தனர். ஹனுமானின் முகத்தில் மகிழச்சியைக் கண்டு அவர் ராமரின் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டதை அறி்ந்து கொண்டனர்.  துள்ளும் மீன்களுக்கு தண்ணீர் கிடைத்தது  போல் மகிழ்ந்தனர். மகிழ்ச்சி அடைந்து  இலங்கை சம்பவங்களைக்  கேட்டுக் கொண்டே
அனைவரும் இராமரிடம் தகவல் சொல்ல சென்றனர்.

வழியில் மதுவனத்தை அடைந்தனர்.அது சுகரீவனின அழகான தோட்டம்.அதில் ருசிமிக்க இனிப்பான நறுமணமுள்ள பழங்களும் , பூக்களும் நிறைந்து இருந்தன.கிஷ்கிந்தாவின்  இளவரசனான  அங்கதனிடம் அனுமதி கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அரசனின் தோட்டத்தை
காவல் காப்பவர்கள்  பழங்கள் சாப்பிடுவதைத் தடுத்தனர். அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஓடும் வரை  அடித்தனர். மது வன காவலர்கள் தங்கள் அரசன் சுக்ரீவனிடம் வந்து இளவரசன்  மதுவனத்தை  சிதைத்துக் கொண்டிருப்பதாக புகார் அளித்தனர்.   கேட்டதுமே வானரங்கள் வெற்றியுடன் ராமரின்  பணியை முடித்துவிட்டனர் என முடிவெடுத்து சுக்ரீவன் மகிழ்ச்சி  அடைந்தார்.
சீதை எங்கு இருக்கிறாள் என்பதைக் கண்டு பிடிக்காமல் அவர்கள் பழங்கள் சாப்பிடுவதை நினைத்துக் கூட இருக்கமாட்டார்கள்  என்று சுகரீவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இப்படி காரணங்களை அரசன் சுக்ரீவன்  நினைத்துக் கொண்டிருக்கும் போதே வானரங்கள் அவர் முன் கூடினர்.
அவர்கள் அரசனின் பாதங்களில் விழுந்து வணங்கினர். வானரங்களின் அரசன் அவர்களை மனதார வரவேற்றான். அவர்களின் நலம் பற்றி விசாரித்தான்.  அப்பொழுது  வானரங்கள் கூறினர்--உங்கள் பாத தரிசனத்தால் எல்லோரும் நலமாக இருக்கிறோம். ஸ்ரீ ராமனின் கிருபையால் நாங்கள் எங்கள் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். ஹனுமான் எளிதாக பணியினை முடித்து அனைத்து வானரங்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டார்.சுக்ரீவன் அனைத்து விவரங்களையும் கேட்டு மகிழ்ந்தார்.அனைத்து வானரங்களுடன் சுக்ரீவன் ஸ்ரீ ராமனை சந்திக்கச் சென்றார்.இராமர் சுக்ரீவனையும் மகிழ்ச்சியோடு வந்த  வானரங்களையும் பார்த்து 
பணியை முடித்து விட்டனர் என்று புரிந்து கொண்டார். இரண்டு சகோதரர்களும் குகையில் இருந்து வெளியே வந்து பளிங்குக் கல்லில் அமர்ந்தனர். அரசன் சுக்ரீவனும் மற்றவானரங்களும் இராமனை வணங்கினர். 
கருணைக்கடலான இராமர் அனைத்து வானரங்களையும்  மகிழ்ச்சியாகசந்தித்து நலம் விசாரித்தார்.
வானரங்கள் அனைவரும் உங்கள் தாமரைப் பாதங்களை தரிச்சனம் செய்து நாங்கள் நலமாக இருக்கிறோம். ஜாமவந்தன் சொன்னான்--ரகுநாதரே! எங்கள் தலைவரே! உங்கள் அருள் பெற்றவர்கள் 
எல்லோருமே நிரந்தரமாக  எப்பொழுதும் நலமாகவும் சௌக்யமாகவும் உள்ளனர். தேவர்கள்,மனிதர்கள் ,
முனிவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர். அவன்  வெற்றி பெறுபவனாகவும்,பணிவுள்ளவனாகவும் குணமுள்ளவனாகவமெ ஆகிவிடுகிறான். அவனுடைய புகழ் மூன்று உலகங்களிலும் பரவுகிறது.பிரபுவின் கிருபையால் எல்லா பணிகளும் வெற்றிகரமாக முடி்ந்துவிட்டது.இன்று  எங்கள் பிறவி வெற்றிபெற்றுவிட்டது. நாதா! வாயு புத்திரன் ஹனுமான் இன்று செய்த பணியை ஆயிரம் வாய்களாலும் வர்ணிக்க முடியாது. ஜாம்பவான் ஸ்ரீராமரிடம்  ஸ்ரீஹனுமானின் பணிகளையும் குண நலன்களையும்  கூறினான். அவன் பணிகளை எல்லாம் கேட்டு இராமர்  மகிழ்ந்தார்.
அவர்  அனுமானை ஆரத்தழுவி ,சொல்!சீதை எப்படி இருக்கிறாள்?தன் உயிரை எப்படி காத்துக் கொள்கிறாள்? 
ஹனுமான் சொன்னார் _--உங்கள் பெயர் இரவும் பகலும் காவல் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் தியானம் தான் கதவாக காக்கிறது. கண்கள் உங்கள்  பாதங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது.அது தான் பூட்டு. அப்படி இருக்கும் போது உயிர் எந்த வழியில் போகும்?வரும் அவர் எனக்கு சூடாமணி கொடுத்தார். அதை அவர் தன் தலையி்ல் இருந்து எடுத்துக் கொடுத்தார்.உடனே ஸ்ரீராமர் அதைவாங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.
ஸ்ரீஹனுமான் சீதை கண்ணீரோடு இராமரு்க்கு சொன்ன செய்தியைச் சொன்னார்---எனதுபணிவான நமஸ்காரத்தை பிரபுவிற்கும் அவரது சகோதரருக்கும் அவர்களது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கவும்.
எனது இரக்கமுள்ள பிரபுவே! ஏழைகள் மற்றும் இன்னல்கள்அனுபவிப்போரின் இன்னல்களைப் போக்குபவரே!நான் சொற்களாலும்,மனதாலும் ,செயல்களாலும் உங்களது பாதாரவிந்தங்களை
காதலிக்கிறேன்.என்ன காரணங்களால் என்னைத் துறந்தீர்கள்?என்னை வன்முறையால் கடத்தப்பட்ட போதே உங்களைப் பிரிந்ததால் உயிரை விடாதது என் தவறு. என் பிடிவாதமான நம்பிக்கையுள்ள கண்கள் என் உயிரைப் போக்க அனுமதிக்கவில்லை.உன்னுடைய பிரிவு என்னைச் சுட்டெரிக்கும் தீ.
என் மூச்சு வீசும்  காற்று.அது உடனடியாகத்  தீயைப் பற்றிஎரியவைக்கும். என்உடல் எரியும் பஞ்சுக் குவியல்.எளிதில் தீ பற்றக் கூடியது.என் பிடிவாதமான கண்களில் இருந்து நீர் ஊற்று போல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உங்களுடைய பாதாரவிந்தத்தைப் பார்க்க மிகவும் பிடிவாதமாக இருப்பதால் உடலில் இருந்து உயிர் பிரியவில்லை .உங்களை  மீண்டும் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் உயிர் வாழ்கிறேன். பிரிவுத்துயரத்தின் ஜ்வாலை இன்னும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. என்று சீதை கூறியதை அப்படியே அறிவித்து விட்டு ஹனுமான் தன் எண்ணங்களைக் கூறினார்---
சீதையின் ஆற்றொனாத் துயரத்தை  வர்ணிக்க முடியாது. தாங்கள் வேதனைப் படுவோர் மீது இரக்கப் படுவீர்கள்.இதற்கு மேல் எள்னால் எதுவும் வர்ணிக்காமல் இருப்பதே எனக்கு நல்லது. 

ஹனுமான் கூறினார்--நீங்கள் இரக்கத்தின் கருவூலம்.தாங்கள் வல்லமை மிக்கவர்.மதிப்பிற்குரிய பிரபுவே! உடனே  படை எடுத்துச் செல்ல வேண்டும்.உங்கள் புஜ பலத்தால்அந்த பொல்லாதவர்களை
வென்று சீதையை மீட்டு அழைத்து வரவேண்டும். ஹனுமானின் மூலம் சீதையின் துயரங்களை அறிந்து கமலக் கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.நினைவாலும்,சொல்லாலும்,செயலாலும் 
என்னை முற்றிலும் சார்ந்திருப்பர்களுக்கு கனவிலும் துயரம் வரக்கூடாது. 
 பிரபுவே ! பேரிடரில் பிரபுவை நினைக்காதவர்கள். தீயவர்கள்.அரக்கர்கள்.தங்கள் முன்னால் நிற்க அருகதை அற்றவர்கள். நாம் அவர்களை போரில் வென்று சீதையை மீட்டு வருவோம். 
ராமர்  சொன்னார்---ஹனுமானே கேள்! உனக்கு சமமான அருட்கொடையாளர் வேறு ஒருவரும் இல்லை.
வாழும் மனிதன்,கடவுள்.ரிஷி. உன்னுடைய கடமை உணர்விற்கானதை நான் எப்படி திருப்பி செலுத்துவேன்.உன்னை எதிர்கொள்ள நான் நாணம் அடைகிறேன்.  மகனே!மீண்டும் மீண்டும் சிந்தித்து
 நீ செய்த கடமை உணர்விற்கான கடனை நான் திருப்பிசெலுத்த வழி தெரியவில்லை.
பிரபு இராமர் ,கடவுள்களைக் காப்பவர். இன்று ஹனுமானுக்கு உதவி செய்ய அவரை மீண்டும் மீண்டும் பார்த்தார். இராமரின் கண்களில் அன்புக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் உடலும் மனதும்    உதவிசெய்ய துடித்தன.
இராமர் சொல்வதைக் கேட்டு ஹனுமான் மிகவும் மகிழந்தார்.மிகவும் மகிழ்ச்சியில் ஹனுமான் இராமரின் காலில் விழுந்து வணங்கி  ஆனந்தக் கண்ணீர் விட்டார். பிரபுவே! என்னைக் காப்பாற்று!என்னைக் காப்பாற்று என்றார்.
மீண்டும் மீண்டும்ஸ்ரீராமர் அனுமானை உயர்த்த விரும்பினார். ஹனுமான் பிரபுவின் அன்பில் மூழ்கிவிட்டார்.அவர் தன்னை உயர்த்துவதை விரும்பவில்லை.ஹனுமான் தலையில் தன் தாமரைக் கரங்களை வைத்து இராமர் ஆசிர்வாதம் செய்தார்.கௌரியின் பிரபு சிவன் ஹனுமான் உணர்ச்சிவசப்பட்ட நிலையை அடைந்தார். தன் உணர்ச்சி வசப்பட்ட நிலை சரியானதும் 
பார்வதியிடம் அந்த அழகான கதையைத் தொடர்ந்தார்.
பாதாரவிந்தங்களில் விழுந்து வணங்கிய ஹனுமானை ஸ்ரீராமர் தன் கைகளாலேயே தூக்கி மார்புடன் ஆரத்தழுவினார். இராமர் அவரின் கைகளைப் பற்றி தன் அருகில் அமரவைத்தார். 
பிரபு ஸ்ரீ ராமர்  ஸ்ரீஹனுமானிடம் நீ இலங்கையை எப்படி எரித்தாய்? ஆற்றல் மிக்க இராவணனின் 
காவல் கடுமையானது .மேலும் கோட்டைக்குள் நுழைய முடியாது. 
இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததை  அறிந்து ஸ்ரீஹனுமான் எவ்வித கர்வமுமின்றி பேசினார்---
வானரங்களின்  மிகப்பெரிய சொத்தே எளிதாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் எளிதாகத் தாவுவதே. அந்தத் திறமையைப் பயன்படுத்தி பெருங் கடலைத் தாண்டினேன். ஸ்வர்ண இலங்கையை எரித்தேன். மரங்களை வேரோடு பிடுங்கி  அசோகவனத்தை அழித்தேன். அப்படியே  அரக்கர்களைக் கொன்றேன். இதெல்லாம்  தங்கள்  அருளாலும் தெய்வீக ஆற்றலாலும் நிகழ்ந்தவை.இதில் என்னுடைய மகத்துவம் எதுவும் இல்லை. பிரபுவே! உங்களுடைய கிருபை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்த பணியும் கடினமல்ல. உங்களது சக்தி செய்வதற்கு அரிதான எந்த ஒரு செயலையும் 
எளிதாக்கிவிடும்.ஒரு சிறிய பஞ்சில் தீ பற்றினால் பெருங்கடல் நீர் முழுவதும் ஆவியாவது  போல.
ஸ்ரீஹனுமான் இராவணனிடம்  வேண்டினான்---தங்கள் பாதாரவிந்தங்களி் ல் அமைதியான பக்தியை  அருளுங்கள். அது தான் தங்களின் உயர்ந்த ஆசிகளுக்கு வளமாகும்.
பகவான் சிவன் பவானியிடம் சொன்னார்---இந்த எளிய ஆழ் மன வேண்டுகோளால் மகிழ்ந்து அப்படியே ஆகட்டும் என்று பிரபு ஸ்ரீஹனுமானை ஆசிர்வதித்தார். அன்பு உமா! இராமனின் இயற்கை குணம் அறிந்தவர்கள் அவர் மீதான பக்தியைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பமாற்றாகள்.ஆழ்மன உணர்ச்சிமிக்க பக்தி நிறைந்த வழிபாட்டைத் தவிர வேறு ஒரு ஆசையும் இருக்காது.இராமருக்கும் ஹனுமானுக்கும் நடந்த உரையாடலை ஆழ்ந்து புரிந்து கொண்டவர்கள் இராமரின் அருளாசி பெறுவார்கள். 
ஸ்ரீஇராமரின் வார்த்தைகளைக் கேட்டு கூடியிருந் வானரங்கள் மகிழ்ச்சி ஆராவரம் செய்தனர்.
குரங்குகளும் கரடிகளும் வருக! வருக! என்று கூறி எங்கள் மகிழ்ச்சிக்கு பெரிய வளமே ஸ்ரீஇராமர் என்றனர்.
பிறகு ஸ்ரீராமர்  வானரங்களின் தலைவனும் கிஷ்கிந்தாவின் மன்னனுமான சக்ரீவனை அழைத்து உடனே இலங்கை மீது போர் தொடுக்க படைகளைத் திரட்டச் சொன்னார். மேலும் தாமதிக்க வேண்டாம் என்றார்.
ஆர்வமுள்ள தேவர்கள் விண்னில் இருந்து பூமாரி பொழிந்துவிட்டு விண்னுலக மாளிகைக்குத்
திரும்பினர்.

வானரங்களின் அரசன் அனைத்துவித தலைமை சேனாதிபதிகளுக்கும்  தங்கள் தங்கள் படைகளைத் திரட்டும் படி  அழைப்பாணை விடுத்தான். குரங்குப் படைகளும் கரடிப் படைகளும் அதிக எண்ணிக்கையில் மகிழ்ச்சியுடன் வந்தனர். அவர்கள் பல விதமாகவும் பல நிறங்களிலும் இருந்தனர்.
அவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர்.
குரங்குகளும் கரடிகளும்  ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை வணங்கினர்.இராமர் அனைத்து வித படைகளையும் ஆய்வுசெய்தார்.அவைகளின் எண்ணிக்கை மற்றும் வலிமையை மதிப்பீடு செய்தார்.
அவைகளை மேலும் வலிமைப் படுத்த தன் கமலக் கண்களால் தன் அருட் பார்வையால் நோக்கினார்.
இராமரால்  ஊக்கம் பெற்றதும் குரங்குகள் தங்களை இறக்கையுள்ள  மலைகளாகக் கருதினர்.
தேவர்கள் இராமருக்காக போராட வானரங்களாகவும் கரடிகளாகவும் மாறுவேடமிட்டு வந்தனர்.
அவர்கள் முன்னால் நடந்த போரி்ல் இராவணனால் தோற்கடிக்கப்ப்டவர்கள். இப்பொழுது ஸ்ரீராமரின் அருள் பெற்று தைரியமும் வீரமும் உள்ளவர்களாகவும்  மலை போன்று அசையாமல் இராவணனுக்குஎதிராக போரிட முடியும் என்று நினைத்தனர்.ஸ்ரீஇராமுடன் மகிழ்ச்சியோடு இலங்கையை நோக்கி போரிடச் சென்றனர். அந்த நேரத்தில் அனேக  நல்ல சகுனங்கள் ஏற்பட்டன.
ஸ்ரீராமரின்  மதிநுட்பம் மங்களகரமானது. அவருடைய படைகள் புறப்படும் நேரத்தில் நல்ல சகுனங்கள் 
தானாகவே வெளிப்பட்டன. சகுனங்கள் தானாகவே  போர் தொடுக்கும் போது வெளிப்படுவது மகிழ்ச்சியின் வளம் .அது ஸ்ரீராமரின் மஹிமை.

ஸ்ரீராமர் இலங்கைமீது படை எடுக்க புறப்படும் போது சீதையின் இடது கைகால் உறுப்புகள் துடிக்க ஆரம்பித்தன.இடது கை-கால் உறுப்புகள் துடிக்க ஆரம்பித்ததுமே சீதை தான்அனுப்பிய தகவல் இராமருக்கு சேர்ந்து விட்டது. அவர் விரைவில் வந்து  தன்னை விடுவித்து தன் மன வேதனைகளை போக்கி விடுவார் என முடிவெடு்த்துவிட்டார். சீதைக்கு நல்ல சகுனங்கள் வெளிப்படும் போது இராவணனுக்கு இடது அங்கங்கள் துடித்து தீயசகுனங்கள் ஏற்பட்டன.
 பிரபுவின்  வானரப் படைகள் படை எடுத்துச் செலவதை யாரால் வர்ணிக்க இயலும்! எண்ணிக்கையில் அடங்காத வானரங்களும் கரடிகளும்  மகிழ்ச்சியால் கர்ஜித்துக் கொண்டே சென்றனர். கூறிய நகங்கள் தான் அவர்களின் ஆயுதங்கள்.அவர்கள்  பெரிய பெரிய மரங்களையும் பாறைகளையும் தூக்கிக் கொண்டு வந்தனர். சில வானரங்கள் தரையில்  தவழ்ந்து சென்றனர்.சிலர் ஆகாயத்தில் பறந்து வந்தன,
வழியில் வானரங்களும் கரடிகளும்  சிங்கம் போல் கர்ஜனை செய்தன. இடி முழக்கம் செய்து பூமியை  யானைகள்  பறை அடிப்பது போல் அதிர்ச்சியடையச் செய்தனர். 
யானைகள் பூமியை முரசாக அடித்துக் காத்தன.பாறைகள் அதிர்ந்தன.மலைகள் நடுங்கின.கடல்கள் ஆர்பரித்தன. விண்ணுலக இசை மேதைகளான கந்தர்வர்கள்,சூரியன்,சந்திரன்,இந்திரன்,அக்னி,வருணன்,ரிஷிகள்,முனிகள்,நாகர்கள்,கின்னரர்கள்,
ஆகியோர் மனமகிழ்ந்தனர்.கட்டாயமாக அவர்களுடைய இன்னல்கள்,மனத்துயர்கள்,விரைவில் விலக்கப்படும். எண்ணிக்கையில் அடங்காத வானரங்கள் தங்கள் பற்களைக் கடித்தன.நூறுகோடிக்கு மேல் வானரங்கள் சத்தம் போட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. 
வானரங்களும் கரடிகளும்  ஸ்ரீ ராமரின் பெரும் மகிமை,அவர் தெய்வம்.அயோத்தியாவின் பிரபு. என்று ஸ்ரீ ராமரின் புகழை முழங்கினர்.மற்றவர்களிடம் புகழ்பாடினர்.
படைகள் முன்னேறிச் செல்லும் போது அதிர்வலைகளை ஏற்படுத்தினர். நிலுலகைத் தாங்கும் ஆதிஷேசன் ்கஷ்டப்பட்டார்.பல முறை பெரும் வியப்பில் தலை அசைத்தது.நிலஅதிர்வைத் தடுத்து நிலத்தை இறுக்கமாக தெய்வீக ஆமைகள்  பிடித்துக் கொண்டன.ஆமைகளின் முதுகில் கீறல்கள் ஏற்பட்டன.ஸ்ரீராமர்  போருக்கு புறப்பட்ட மகிமையை  அவரின் படைகளின் பெருமைகளைப் பற்றி பிரபு ஆதிஷேஷன்  உறுதியான ஆமை ஓட்டில் எழுதிக்கொண்டிருந்தார். ஸ்ரீராமர் போர் புரிய புறப்பட்டு கடற்கரையை அடைந்தார். வீரமிக்க வானரங்களும்  கரடிகளும் வழியில் பலவித மரங்களின் பழங்களை ருசிபார்த்து மகிழந்தன.

ஸ்ரீஹனுமான் இலங்கையை எரித்ததில் இருந்தே அரக்கர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்.நகர மக்களும் குடும்பதில்  உள்ளோரும் தங்கள் தங்கள் கருத்தைக் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அரசர்கள் இனத்திற்கு எவ்வித பாது காப்பும் இல்லை. தூதனின் மதிநுட்பமும் உடல் வலிமையையும் வர்ணிக்க முடியாது.  அவனின் செயல்களால் ஏற்பட்ட பயமே இன்னும் அகலவி்ல்லை .
ஸ்ரீராமரே படையுடன் வந்தால் என்ன நடக்கும் ? இலங்கையில் உள்ள அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கும் இராவணனுக்கு அறிவுரை கூறும் துணிச்சல் இல்லை.

அரண்மனையின் பெண் ஒற்றர்கள் மூலம்  பெற்ற செய்திகளால் ராவணனின் முதல்  மனைவியும் ராணியுமான  மண்டோதரி கலக்கம் அடைந்தாள். மன அமைதி இல்லாமல் தன் கணவன் இராவணனை தனியாக சந்தித்து காலில் விழுந்து வணங்கினாள். இராவணன் அவளைப் பற்றி  மார்புடன் சாய்த்துக் கொண்டாள். அவள் அவனை அணைத்துக் கொண்டு இனிமையாக பேசினாள்.அவளுடைய அரசியல் மற்றும் நெறிமுறைகள் மிகவும் உறுதியாக  இருந்தன.மண்டோதரி இராவணனிடம்  ஸ்ரீஇராமனுடனான 
அனைத்து மோதல்களையும் விட்டுவிடுங்கள்.தயவு செய்து நான் கூறுவதை மனம்  திறந்துகவனியுங்கள்.
அனுமானின் செயல்களை நினைத்தால் பல  தீய அபசகுணங்கள் வெளிப்படுகின்றன.
மண்டோதரி   இராவணனுக்கு அறிவுறுத்தினாள்--உங்கள பாதுகாப்பிற்காகவும்,அமைதிக்காகவும் குடும்பம் மற்றும் இலங்கை மக்கள் நலத்திற்காகவும்  தங்கள் அமைச்சர் ஒருவரை தூதுவராக்கி 
சீதையை ஸ்ரீராமரிடம் சேர்ப்பித்துவிடுங்கள். அழகான தாமரைகள் குளிர் இரவில் பனியால் அழிவது போல் சீதை இலங்கையின் அழிவிற்குக் காரணமாவாள்.பிரபுவே!கேளுங்கள்.சீதையை மரியாதையுடன் அனுப்பவில்லை என்றால் நீங்கள் வழிபடும் சிவனாலும்பிரம்மாவாலும் உங்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற முடியாது. பாம்புகள் தவளையை விழுங்குவது போல் ஸ்ரீராமரின் அம்புகள் அரக்கர்கள் படைகளை அழித்துவிடும்.நியாயமற்ற அகங்காரத்தை விடுத்து ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்க இந்த புதிரில் இருந்து வெளியேறுங்கள்.
மனைவி மண்டோதரியின் அறிவுரைகளைக் கேட்ட  சூழ்ச்சிக்கும் ஆணவத்திற்கும்  புகழ் பெற்ற  இராவணன்  அட்டகாசமாக சிரித்து வீணான தற்பெருமைகளைப் பேசினான்.பெண்கள் எப்பொழுதுமே கூச்ச சுவபாவம் உள்ளவர்கள்.அவளுடைய மனம் பலஹீனமானது.மங்களகரமான சந்தர்பங்களிலும் 
அவள் பயந்தே இருந்தாள்.வானரங்கள் வருவதே எனக்கு ஐயமாக இருக்கிறது.அவர்கள் வந்தால் அரக்கர்கள் அவரகளைத் தன் உணவாக உண்பார்கள்.அனைத்து திசைகளிலும் உள்ள காவலர்கள்என் கனவால் நடுங்குகிறார்கள்.இருந்தாலும் என் மனவி வானரங்களுக்கும் மனித்களுக்கும் அஞ்சுகிறாள்.அவள் அஞ்சவது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியது.மனைவியின் அச்சம் கண்டு இராவணன் சிரித்தான்.அவளுக்கு ஆறுதல் அளிக்க மார்போடு  அணைத்துக் கொண்டான்.வீணான தற்பெருமை கொண்ட இராவணன் தன் அரசவையி்ல் இருந்து வெளியே சென்ஆன்.ஆனல் மண்டோதரி மனதில் வேதனை அதிகமாகியது.அவளுக்குள்ளே தானாகவே பேசிக்கொண்டாள்.--கடவுள் என் அன்பானவரை  அவருக்கு எதிராக மாற்றிக் கொண்டார். 
இராவணன் விவாதிக்கத் தன் அரசவையைக் கூட்டினார்.இராமனும் வானரப்படைகளும்கடலின் அக்கரைக்கு வந்துவிட்டனர் என்று ஒற்றர்கள் கூறினர். அவன் பாதுகாப்புக்  குழுவினர்களிடமும் அரசவைஉறுப்பினர்களிடமும்  முறையான தந்திர ஆலோசனைகளைக் கேட்டான்.அங்குள்ள யத்த தந்திர நிலைபற்றிக் கேட்டான்.
துதிபாடும்  அரசவையினர்கள்  சிரித்து முகஸ்துதி செய்தனர். அவர்கள் இராவணனிடம்--அமைதியாக இருங்கள்.தாங்கள் கடவுள்களையும்  வலிமை மிக்க அரக்கர்களையும் அதிக முயற்சியின்றி வென்றுவிட்டீர்கள். அவர்களை வெல்ல எந்த  கஷ்டங்களும் படவில்லை. நம்முடைய வலிமை மிக்க 
படைகளுக்கு முன்னால் வானரப்படைகளும் மனிதப்படைகளும் இணையாக மாட்டார்கள்.மதிப்பும்மாட்சிமையும்  மிக்கவரே!இந்த  முக்கியமற்ற குரங்குகளும் மனிதர்களும்  தங்களுக்கு எவ்வித இன்னல்களும் தரமுடியாது. 

ஒரு அரசரின்  எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும்  காரணம்  அவனுடைய அமைச்சர்கள், மருத்துவர் மற்றும் நெறியாளர்கள்.இவர்கள் தங்கள்  தன் நலத்திற்காகவும்,பதவிக்காகவும்,பணத்திற்காகவும் அரசனைப் புகழ்வார்கள்.அரசனிடம் உள்ள அச்சம் காரணமாக அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவார்கள். அவர்கள் சில நன்மைகள் பெறும் நம்பிக்கையாலும் அரசனுக்கு அனுகூலமான
அறிஉரைகள் வழங்குவார்கள்.அவர்களின் தவறால் அரசன் அரசாட்சி ,உடல் ஆரோக்கியம்,நம்பிக்கை,மரியாதை ஆகியவற்றை விரைவாக இழந்துவிடுவார்கள்.
அரசனின் செயலரோ அல்லது அமைச்சரோ உண்மையான அறிவுரை  சூழ்நிலைக்கேற்ப வழங்காமல் 
ஆமாம் சாமியாக இருந்தால் அரசன் தன் ஆட்சியை இழந்துவிடுவான்.ஒரு மருத்துவர் மன்னனை
மகிழ்விக்கவோ அல்லது பணத்தற்காகவோ நோயாளியின் விருப்பத்திற்கேற்ப மருந்தும் உணவு அளித்தல். அதன் விளைவாக ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.சிலசமயங்களில் உயிரைக்கூட இழந்துவிடலாம்.ஒரு ஆன்மீக  நெறியாளர் அல்லது மத குரு சரியான அறநெறி  நீதிக்கு வழிகாட்டவில்லை ,கற்றுத் தரவில்லை என்றால்  தாழ்வான வாழ்க்கை  இப்பிறவியில் மட்டுமல்ல
மறுபிறவியிலும் இழிந்த தாழ்ந்த வாழ்வைப்பெறுவர்.

இந்த  மூவரும் சேர்ந்த சக்தி ஒரு பெண்.ஒரு பெண் அமைச்சர்,மருத்துவர்,ஆலோசகர் மூன்றும் சேர்ந்தவர். குடும்பத்தில் நிதி நெருக்கடி காலத்திலும்,துயரமான சமயங்களிலும் பெண் ஆலோசகராகவும் அமைச்சராகவும் செயல்படுகிறார். அவள் தான் சரிவிகித உணவு சத்துணவு தரும் மருத்துவர்.குடும்ப மனக்கஷ்டங்களிலும் பணக்கஷ்டங்களையும் சரி செய்யும் இல்லத்தரசி.
கணவன் துயரப்படும் போது சரியான ஆலோசனை கணவன் மீதுள்ள பயத்தால் வழங்கவில்லை என்றாலோ அல்லது கணவன் அவளுடைய அறிவுரைகளையும் ஆலோசனையையும் கேட்கவில்லை என்றாலோ  நிர்வாகம்,ஆரோக்கியம் பொருளாதாரம்ஆகியவை பாதிக்கும்.
பெரும்பாலான சமயங்களில் ஆண் தான் குடும்பத் தலைவன்.மனைவிதான்  நல்ல அமைச்சரும் 
நண்பரும் ஆவாள். கடினமான சூழலில் மனைவியன் அறிவுரையையும்  ஆலோசனையையும் 
கேட்கவில்லை என்றால் வீட்டில் ஆரோக்கியம்,மகிழ்ச்சி ,அமைதி இருக்காது.கடினமான சூழலில் கணவன் மனைவியி் அறிவுரையையும் ஆலோசனையையும் கேட்வேண்டும்.
இதுதான் இராவணனின் வாழ்க்கையில் நடந்தது.அனைத்து அரசவையினரும் அவன் விரும்பும் படி அவன் மஹிமைபற்றியே பாடினர்.இது தான் சரியான தருணம் என்று இராவணன் தம்பி விபீஷணன் 
அரசவைக்கு வந்து தன் அண்ணனை சிரம் தாழ்த்தி வணங்கினான்.வணங்கிய பின் அவன் தன் ஆசனத்தில் அமர்ந்தான். இராவணனின் அனுமதி கேட்டு விபீஷணன் அவையில் பேசினான்.
என் மாட்சிமை பொருந்தியவரே!இந்த சந்தர்பத்தில் என் கருத்து கேட்டிருக்கிறீர்கள்.அன்பு சகோதரரே!நான் என் உணர்வுகளை என் அறிவிற்கு ஏற்றபடி உங்கள் நலனுக்காக கூறுகிறேன்.
 ஒருவர் தன் நலன்,தன் புகழ், தன்  ஞானம்,தன் முக்தி ஆகியவற்றை விரும்பினால் மற்றவர் மனைவி மீதுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும்.  வளர் பிறையின் நான்காவது நாள் நிலவைப் பார்ப்பது கெட்ட
சகுனம்.அதுபோல் மாற்றான் மனைவியை விரும்புவதும் கெடுதலை ஏற்படுத்தும்.இந்த விருப்பம் நல்ல புகழைக் கெடுக்கும்.அறிவைமயக்கும். எதிர்காலத்தைப் பாழாக்கும்.மகிழ்ச்சியையும் அறத்தையும் கெடுக்கும்.அந்த அரசு பேரரசானாலும்  வலிமை மிக்கதானாலும் வீழ்ச்சி உறுதி.
மனிதன் அறநெறி உள்ளவன் ஆனாலும்,கொடைவள்ளல் ஆனாலும்,ஞானவானாக இருந்தாலும் மிகச் சிறிய பேராசை, பெண்ணாசை இருந்தால் அவனுடைய மகிமையை புகழை ,குணத்தை, நன்நடத்தையை  அவனது பேராசை பாழ்படுத்திவிடும். 

காமம்(சிற்றின்பம்) ,கோபம்,ஆணவம்,பேராசை இவை அனைத்துமே  நரகத்திற்கு வேகமாக அழைத்துச் செல்லும் நெடுஞ்சாலையாகும். தயை கூர்ந்து  இவைளை விட்டுவிடுங்கள்.ஸ்ரீராமனின்  புகழ்பாடி வழிபடுங்கள்.  அனைத்து  ரிஷிகளும்  முனிகளும்,இராமனின் புகழ்பாடி வழிபடுகின்றனர்.
ஸ்ரீராமன் மனித அரசன் அல்ல.அவன் தான் பிரபஞ்சம்.அவன் ஆற்றல் மிக்கவன் .மரணத்திற்கே மரணம் அளிப்பவன். அவன் தான் இறைவன்.அவன் நோய்களில்லாதவன்.எவ்வித கோளாறும் இல்லாதவன்.பிறப்பு இறப்பு இல்லாதவன். சக்திமிக்க இறைவன்.   பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். ஒருவராலும் வெல்லமுடியாதவர். அவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.எல்லையற்றவர். அவர் பூமியின் நலம் விரும்புபவர். அந்தணர்களின் நலம் விரும்புபவர்.பசுக்களின் நலம் விரும்புபவர்.தேவர்களின் நலம் விரும்புபவர்.சமுத்திரம் போன்று எல்லையற்ற இரக்கமுடையவர்.பகவான் தான் தானே மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார்.
அன்பு சகோதரரே! இராமர் மக்களுக்கு நன்மை அளிப்பவர்.பொல்லாத அரக்கர்கள் கூட்டத்தை அழிக்கவந்தவர். அவர்வேதங்களைக் காப்பவர். அவர் நீதியைக் காப்பாற்றி நிலைநாட்டுபவர்.
தயவுசெய்து ராமரின்மீதுள்ள விரோத்த்தை  விட்டுவிடுங்கள்.ஸ்ரீராமரின் முன் தலை வணங்குங்கள்.அவரிடம் சரணாகதி அடைந்தவரின் மீது இரக்கப்பட்டு அவர்களின் மனத்துயரங்களைப் போக்குபவர். தயவு செய்து சீதையை பிரபுவிடம் திருப்பி அனுப்பிவிடுங்கள்.ஸ்ரீராமரை வணங்குங்கள்.
அவர் அனைவரையும் நேசிப்பவர்.அனைவரின் மீதும் கருணைகாட்டுபவர்.
நீங்கள் அவரை சரண்டைந்தால்,உங்களை விட்டுவிடுவார்.உலகத்திற்கே பாவம் செய்த ஒரு மனிதனை கைவிட்டுவடுவார். மூவித துயரங்களையும்  போக்குபவர் ஸ்ரீராமன் என்று பயபக்தியுடன் அனைவரும் மதித்து நினைவுபடுத்துபவர். அவர் மனிதவடிவத்தில் அவதரித்து வந்துள்ளார்.மீண்டும் மீண்டும் வணங்குகிறேன் அன்பு அண்ணா இராவணா! என்று கைகூப்பி வேண்டும் போதே  மாலயவந்தா ராவணனின் மனதைப் புரிந்து கொண்டு திமிர்பிடித்த இராவணன் விபீஷணின்  அறிவுரைகளை கவனிக்கவில்லை என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
விபீஷணன்  மேலும் இராவணனிடம் சொன்னான் --அறிவும் முட்டாள்தனமும் இரண்டும் மனதில் இருக்கும். அனைத்து விதமான செல்வமும் மகிழ்ச்சியும் இதயத்தில் இருக்கும். ஆனால் அங்குள்ள முட்டாள் தனம் எந்த பேரளிவையும் கண்டு தெளிவதில்லை. முட்டாள் தனமான முடிவுகள் எல்லாவிதமான துன்பங்களுக்கும் தலைமை ஏற்றுச் செல்லும். ஞானம் நிறைந்த முடிவுகள் எல்லாவித மகிழ்ச்சியும் செல்வங்களும் குடும்பத்திற்கும் அரசாங்கத்திற்கும்  தரும். இப்பொழுது தீய எண்ணங்கள் 
உங்கள் மனதில் இருக்கின்றன. தாங்கள் எனது அறிவுரைக்கு எதிராக  விளக்கமளித்துக் கொண்டிருக்கிறீர்கள். எது சரி,எது தவறு என்பது உங்களுக்குப் புரியவில்லை,அதை அறியவும் விரும்பவில்லை.உங்களுக்கு நண்பர்கள் யார் ,எதிரிகள் யார் என்றும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.நீங்கள் நண்பர்களை எதிரியாகவும் எதிரிகளை நண்பர்களாகவும் கருதுகிறீர்கள்.
சீதை அரக்கர்கள்  கூட்டத்தை அழிக்க வந்த அழிக்க வந்த காலராத்திரி.அவளது அழகு உங்களைக் கவர்ந்திருக்கிறது.என் மதிப்பிற்குறிய அண்ணா!உங்களை வணங்கி கால்களைப் பிடித்து கெஞ்சுகிறேன்--சீதையை ராமனிடம் திருப்பி அனுப்புங்கள். இதனால் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.  என் மீதுள்ள அன்பிற்கு அடையாளமாக என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

விபீஷணன்  புராணங்களிலும் வேதங்களிலும் உள்ள ஆதாரங்களுடன் கூடிய நீதி நெறிமுறைகளை விவரமாக அறிவு பூர்ணமாகக் கூறினான். எது தவறு எதுசரி என்ற நீதிநெறிகளைக் கூறியதும் 
இராவணன் கோபமாக அரியணையில் இருந்து எழுந்தான்.விபீஷணனிடம் இராவணன் கூறினான்---

துஷ்டனே! உனக்கு மரணம் நெருங்கிவிட்டது. வஞ்சகனே! என்னால் நீ மிக வசதியாக வாழ்ந்துவிட்டாய்.அது என் பெருந்தன்மை.நீ முட்டாள்தனமாக எதிரியின் சார்பாக பேசுகிறாய்.சூழ்ச்சி
மிக்கவனே! இந்த உலகில் என்புஜபலி  பராக்கிரமத்தால் நான் வெல்லாதவர் யார்?என்று சொல்.
நீ இந்த நகரத்தில் வாழ்ந்து கொண்டே எதிரியைப்  புகழ்கிறாய்.அவர்களை நேசிக்கிறாய். இழிவானவனே! நீ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு  வேதங்களின் நெறிமுறைகளைக் கூறு.
பகவான் சிவன் பார்வதியிடம் கூறினான்--இராவணன் விபீஷணனிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டேஉதைத்தான்.அப்பொழுதும் விபீஷணன் அண்ணனின் கால்களைப்  பற்றிக் கொண்டு 
அவரை விட்டுவிடும்படி சொல்லிக் கொண்டே  இருந்தான்.இது தான் நல்லவர்களின பெருந்தமையாகும்.
அவர்கள் தீய குணத்தில் இருந்து நல்லவர்கள் பக்கம் வந்துவிடுவார்கள்.புனிதமானவர்கள் அவர்களுக்கு 
தீமைகள் செய்பவரகளுக்கும் நல்லதே செய்வார்கள்.
விபீஷணன் இராவணனிடம் சொன்னான்----தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். எனக்குத் தண்டனை கொடுப்பது நன்மைக்கே.எனது தெய்வம் நான் வழிபடும் தெய்வம் தங்களுக்கு நன்மையே செய்யட்டும்.
இராவணனால் அவமதிக்கப்பட்ட விரும்பாத விபீஷணன் இலங்கையை விட்டுச் செல்ல முடிவெடுத்தான்.
வானூர்தி மூலம் தன் அமைச்சர்கள் அனலா,பனசா,சம்பாதி,பிரமாதி ஆகியோர்களுடன் இலங்கையை விட்டுச் சென்றான். இதை இராவணனின் அரசவையில்  சத்தமாக அறிவித்தான் .மேலும் சொன்னான்--
ஸ்ரீராமர்  அங்கிங்கெனாதபடி  பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். அனைத்து ஆற்றலும் பெற்றவர்.
தன் தீர்மானத்தில் உறுதியானவர்.உண்மையானவர். நீங்களும் உங்கள் அவையினரும் தீயவற்றை ஆராதிக்கிறீர்கள்.நான் இப்பொழுது இராமரின் பாதுகாப்பிற்காகச் செல்கிறேன். அவரிடம் பாதுகாப்பும் தங்குவதற்கு இடமும் தேடிச் செல்வதை குறையாகவோ குற்றமாகவோ ஒருவரும் கூறமாட்டார்கள்.
பகவான் சிவன் தன் பிரிய பார்வதியிடம் கூறினாள்-----இவ்வாறு கூறிவிட்டு லட்சுமணன் அரக்கர்களின் வாழ்க்கை அழியப்போகிறது அவர்களுக்கு மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து சென்றுவிட்டான்.பவானி! புனிதர்களை அவமரியாதை செய்தால் உடனே தர்மமும் பாக்கியமும் எதிர்காலமும் பாழாகிவிடும். இராவணன் விபீஷணனைஅவமதித்த்துமே தன் மஹிமையையும் 
இழந்துவிட்டான்.அவன் தலைவிதி தீயவிதியாகிவிட்டது.

நான் இராமனைப் பார்த்த்துமே,அவருடைய மென்மையான மாணிக்கம்  போன்ற பாதங்ளைப் பார்ப்பேன். அது பக்தர்களுக்கு மகிழ்ச்சி வளம் தருவதாக அமையும்.  கௌதம முனிவரின் மனைவி அகல்யாவிற்கு  மோட்சம் அளித்த பாதங்களை நான் பிடித்துக் கொள்வேன்.அந்த பாதங்கள் தண்டகாரண்யவனத்தை சுத்தமாக்கின.கரண்,தூஷன் மற்றும் அரக்கர்களை அழித்தார்.பயங்கரவாத ஆட்சியில் இருந்த  சபிக்கப்பட்ட வனம் புனிதமாகியது.ஜனக மஹாராஜரின் மகள் ஜானகி தன் மனதில் பிடித்துவைத்திருக்கின்ற அந்த பாதாரவிந்தங்ளை என் பார்வையில் பதித்து வைத்துக் கொள்கிறேன்.
அந்த கால்கள் பொன் மானைத் துரத்திச் சென்றன. அந்த பாதங்கள் பகவான் பரமேஸ்வரரின் இதயத்தில் குளத்தில் உள்ள தாமரை ஜோடிகள் போலவசிக்கின்றன.என் கண்களால் இந்த பாதாரவிந்தங்களை பார்த்தால்  நன்றியுள்ளவனாகவும்ஆசிர்வதிக்கப்பட்டவனும்  ஆவேன்.
ஸ்ரீராமன் அணிந்த  சந்தனமர பாதுகை பாதணி பாத ரட்சை  பரதனின் இதயத்தில் உள்ளது.
எனது  பாக்கியம் ,இன்று என் கண்களால் அவர் பாதாரவிந்தங்களை தரிசனம் செய்வேன். 
இவ்வாறு மனதில் பலவித எண்ணங்களுடனும் நம்பிக்கையுடனும் விபீஷணன் சமுத்திரத்தைக் கடந்து 
ஸ்ரீராமன் முகாமிட்ட கரையை அடைந்தான். 


.












 




Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-பாகம்-1.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-

வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.
=============================================.

    ஸ்ரீ ஹனுமான் அந்த மலையைத் தொட்டு வணங்கிக் கூறினார் --
சகோதரா! ஸ்ரீ ராமரின் பணியினை முடிக்காமல் நான் எப்படி ஓய்வெடுப்பது ?

          தேவர்கள் வாயுகுமாரன்  அன்னை சீதையைத் தேடி செல்வதை அறிந்ததும்
  அவரின் வலிமையையும் அறிவுத்திறனையும் சோதிப்பதற்காக
  பாம்புகளின் அன்னை ஸுர்ஸாவை அனுப்பினர்.
ஸுர்ஸா  ஆஞ்சனேயரிடம்  வந்து
உன்னை எனக்கு உணவுப் பண்டமாக அளித்துள்ளனர்.
இதைக்  கேட்டதும் ஸ்ரீ ஹனுமான் கூறினார்---
நான் ஸ்ரீ ராமரின் பணிக்காக அன்னை சீதையைத் தேடிச் செல்கிறேன்.
அப்பணியை  முடித்து சீதையைக் கண்டுபிடித்த செய்தியை ராமரிடம் கூறியதும்
உனக்கு உணவாக என்னை அர்பணிக்கிறேன் .  அரவங்களின் அன்னையே  என்னை செல்ல அனுமதி அளியுங்கள்.நான் சொல்வது சத்தியம்.
   ஆனால் அரவம் ஆஞ்சனேயரை செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழி இன்றி தன்னை உணவாக்கிக் கொள் என்று வாயுபுத்திரன் கூறினார். 
      அரவங்களின் அன்னை  ராம பக்த அனுமானை சோதிக்க  தனது வாயை நான்கு மைல் அளவிற்கு 
 அஞ்சனை மைந்தனை  விழுங்குவதற்காகத்  திறந்தது.உடனே ஆஞ்சநேயர்  தன் உருவத்தை இரண்டு மடங்காக்கினார். ஸுர்ஸா தன் வாயை  பதினாறு மைல் அகலத்திற்குத் திறந்தது. உடனே. ஸ்ரீ ஹனுமான் தன் உடலை இரண்டு மடங்காக அதாவது 32 மைல் அளவிற்கு உருமாற்றினார்.  இவ்வாறு அதன் வாயின் அகலம் அதிகரிக்க அதிகரிக்க ஹனுமானின் உயரமும் இரண்டு மடங்கு அதிகரித்தது. அரவம் தன் வாயை நூறு மைல் விஸ்தீரணத்திற்குத்  திறந்தது.அப்பொழுது  ஹனுமா்ன் தன் உருவத்தை  மிக சிறியதாக்கினார். அரவத்தின் வாயினுள் நுழைந்து வெளியே  வந்தார். பிறகு தலை வணங்கி
சீதாதேவியைத்  தேடிச் செல்ல அனுமதி  கேட்டார்.  தேவர்கள் உன் அறிவுத் திறனையையும் பலத்தையும் சோதிக்க அனுப்பினார்கள்.அதில் நீ வெற்றி பெற்றதை நான் அறிந்துகொண்டேன்.நீ அறவுத் திறனும் பலமும் கொண்ட  கிடங்கு. நீ ஸ்ரீ ராமரின் அனைத்துப் பணிகளையும் வெற்றியுடன் செய்யும் திறமை உடையவன். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு மிக மகிழ்ச்சியடன் 
அன்னை  சீதையைத் தேடி புறப்பட்டார்.

==================================

   கடலைக்கடக்க  அங்கும் வாயு குமாரனுக்கு ஒரு சோதனை.கடலில் ஒரு அரக்கி . அவளுக்கு ஒரு
சக்தி. கடலுக்கு மேல் பறப்பவைகளை அவைகளின் நிழலைப் பிடித்தே நிஜத்தைக் கொன்று விடுவாள்.
நிழலைப் பிடித்தாலே அவைகளால்  பறக்க முடியாது.அவைகள் கடலில் விழுந்து விடும்.அதை அந்த அரக்கி தன்  உணவாக்கிக் கொள்வாள். கொல்வாள்.அவளின் மாயையை வாயு குமாரன்  அறிந்து கொண்டார்.தன் மதிநுட்பத்தால்  அந்த  அரக்கியைக்  கொன்றுவிட்டு சமுத்திரத்தைக் கடந்து சென்றார். அந்த பிரதேசமே அழகாக இருந்தது. பூஞ்சோலைகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின.பூக்களில் வண்டுகள். ரீங்கரமிட்டன. மரங்களில் பழங்களும் பூக்களும் அதிகமாக இருந்தன.
பல விதமான விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களித்தார்.எதிரில் ஒரு பெரிய மலையைக் கண்டு அச்சமின்றி ஏறி இலங்கையின் அழகைக் கண்டு  வியந்தார். 

      ஹனுமானின் செயல்களைக் கண்டு சிவபகவான்  தன் மனைவியிடம்  இதில் ஹனுமானுக்கு எதுவும் பெருமை இல்லை. இது இராமரின் மகிமை. எமனையும் அழிக்கும் சக்தி வருவது இராமபிரானின்  அருளாகும்.
   ஹனுமான் மலை மேல் நின்று இலங்கையைப்  பார்த்தார். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட எழில் மிக்க நகரம்.கோட்டையின் மதில் சுவர்  தங்கத்தால் ஆனது.ஒளிமயமானது. அதில் விலை உயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அகலமான தெருக்கள்,கடைத் தெருக்கள் இருந்தன. அழகான நகரம் பலவாறு அலங்கரிக்கப் பட்டிருந்தன. யானைகள்,குதிரைகள்,கோவேரிக் கழுதைகள் கூட்டம 
கூட்டமாக இருந்தன. மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. தேர்களும் அதிகமாக இருந்தன.
அவைகள் அனைத்துமே  எண்ணமுடியாத அளவிற்கு இருந்தன . பல உருவங்களில் அரக்கர் குழுக்கள்.
வலிமை மிக்க படைகள்.

அங்கிருந்த காடுகள் ,தோட்டங்கள்,நந்தவனங்கள் ,பூந்தோட்டங்கள்,கிணறுகள்,படியுள்ள கிணறுகள் அனைத்துமே  அழகுள்ளதாக இருந்தன. அங்குள்ள மனிதர்கள்,நாகர்கள்,கந்தர்வர்களின் பெண்கள்
ஆகியோர்  தங்களது  ஒப்பற்ற  அழகால் முற்றும் துறந்த முனிவர்களையும் வசீகரி்த்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் மல்லர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.அவர்கள் தங்கள் பயிற்சி மைதானத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உடல் மலைகள் போல் காட்சி அளித்தன.அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டும் சவால் விட்டுக் கொண்டும் இருந்தனர்.
      அச்சமளிக்கும் சரீர அமைப்பைக் கொண்ட பலவித வீர்ர்கள் நகரத்தின் நான்கு திக்குகளிலும் எல்லா பக்கங்களையும்  பாதுகாத்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் துஷ்ட அரக்கர்கள் மனிர்களையும்,எருமைகளையும்,பசுக்களையும் ,கழுதைகளையும்.வெள்ளாடுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  நிச்சயமாக  இவர்கள் இராமரின் அம்பு  மழை  தீர்த்தத்தில்  வீரமரணம் அடைவார்கள் என்பதை  அறிவிக்கத்தான்  துளசிதாசர் இவர்களுடைய  கதையைக். கூறி இருக்கிறார்.

   நகரில்  அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக்  காவலர்கள்  இருப்பதைக்  கவனித்த ஹனுமான் 

தன் வடிவத்தை சிறிதாக்கி. இரவில் நகரில்  நுழைவதே சரி என முடிவெடுத்தார் .

       ஹனுமான் தன் வடிவத்தைக்  கொசு போல சிறு உருவமாக மாற்றி ,
மனித வடிவில் லீலைகள்  புரியும் பகவான்  ஸ்ரீ இராமசந்திரனை  வணங்கி  இலங்கைக்குச் சென்றார்.
இலங்கையின்  நுழைவாயிலில் லங்கினி என்ற அரக்கி இருந்தாள். அவள் ஆஞ்சனேயரிடம்
என்னை அவமதித்து என்னிடம்  கேட்காமல் எங்கே  போகிறாய் ?என்று கேட்டாள் .
மேலும்  முட்டாளே!  நீ என் ரகசியத்தை அறியவில்லை. திருடர்கள்  அனைவரும் எனது உணவாவார்கள்.
இதை  அரக்கி கூறியதுமே  ஹனுமான் அரக்கியை ஒரு குத்து குத்தினார். அரக்கி இரத்த வாந்தி எடுத்து 
தரையில் விழுந்தாள். 

 அந்த லங்கினி   தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து பணிவுடன் கைகளைக் கூப்பி  சொன்னாள் ----

பிரம்மா  இராவணனுக்கு  வரம் கொடுத்து விட்டுச்  செல்லும்  போது  என்னிடம் கூறினார்----
உன்னை ஒரு குரங்கு தாக்கும்.அப்பொழுது   நீ குழப்பம் அடைவாய். அப்பொழுது அரக்கர்களுக்கு
அழிவுகாலம்  என்று அறிந்து கொள். நான் செய்த புண்ணியத்தால் ஸ்ரீராமனின் தூதனான  உன்னை என் கண்களால் பார்த்துவிட்டேன். 
 சுவர்கத்தையும்  மோட்சத்தையும்  அதனால் கிடைக்கும் சுகங்களையும் திராசின் ஒரு தட்டில் வைத்து 
மறு தட்டில்  ஒரு நொடியில் சத்சங்கத்தால்  ஏற்படும்  நன்மைகளை வைத்தால்  அந்த சுவர்க மோட்ச சுகங்கள் அந்த ஒரு நொடி சத்சங்கப் பயன்களுக்கு  ஈடாகாது. 

  அயோத்தியாவின்  அரசன் இரகுராமனை மனதில் வைத்து ஜபித்துக் கொண்டே இலங்கைக்குள் சென்று நீ வந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவும். ராம பக்தரகளுக்கு  விஷம் அமிர்தமாக மாறிவிடும். விரோதிகள்  நண்பனாகி  விடுகின்றனர்.  சமுத்திரம்  பசுவின் குழம்பின்  அளவிற்கு  ஆழமில்லால்  போய்விடும். நெருப்பு  குளிர்ச்சி  அடைந்துவிடும். 
     ==========================
21/3
  ராமரின் அருட்பார்வை  பெற்றவர்களுக்கு மேருமலை கால் தூசிக்கு சமமாகும்.
 ஹனுமான் மிகச் சிறிய வடிவம்  எடுத்துக் கொண்டு இலங்கைக்குள்  நுழைந்தார் . அவர் 
 ஒவ்வொரு மாளிகைக்கும் சென்று சீதையைத்  தேடினார் . சென்ற  இடத்தில் எல்லாம் அதிக எண்ணிக்கையில் போர் வீர்ர்களைக்  கண்டார். பிறகு  இராவணனின் மாளிகைக்குச்  சென்றார். 
ராஜமாளிகை மிகவும்  விசித்திரமாக இருந்தது. அதை வர்ணிப்பது மிகவும் கடினம் .ஹனுமான்
   
மாளிகையில்  இராவணன்  படுத்திருப்பதைக் கண்டார். ஆனால் சீதையைக் காணவில்லை.பிறகு மற்றொரு  அதிக அழகான பகவானின் ஆலயத்தைக் கண்டார்.அந்த மாளிகை இராமரின் ஆயுதமான 
வில் மற்றும். அம்புகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.அந்த அழகை வர்ணிக்க சொற்கள் கிடைக்காது.
அங்கு புதிய புதிய துளசி மரக் கூட்டங்களைக்கண்டு  வானர அரசனான ஆஞ்சனேயர் மகிழ்ச்சி அடைந்தார். 

 இலங்கை அரக்கர்களின் கூட்டங்கள் வசிக்கும் இடம். அங்கு நல்லவர்கள் இருப்பதரிது. ஆஞ்சனேயர் இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போதே விபீஷணன் எழுந்தார் . எழுந்ததுமே  இராம நாமத்தை 
உச்சரித்தார். ஹனுமான் விபீஷணனை நல்லவர்  என உணர்ந்து மகிழ்ந்தார் .இவரிடம் என்னை அறியப் படுத்திக் கொகிறேன். நல்லவர்களால். எவ்வித தீமைகளும் உண்டாகாது. பயன்களே  ஏற்படும். 

      அந்தணர் வடிவமெடுத்து ஆஞ்சனேயர்  கூப்பிட்டார் . உடனே விபீஷணர் வெளியே வந்தார் .அந்தணரை வணங்கி  அவரைப் பற்றிய விவரம் கேட்டார் . 
  நீங்கள் ஹரிபக்தரா ?  உங்களைக்  கண்டதுமே என் மனதில் அதிகமான அன்பு உண்டாகிவிட்டது.
 நீங்கள்  வறியவர்களுக்கு உதவும் ராமர் தானே? எனக்கு என் இருப்பிடத்திற்கே வந்து காடசி அளித்து 
பெரிய பாக்கியவானாக்க எழுந்தரளியிருக்கிறீரா?  என்றெல்லாம் விபீஷணர் அந்தணர் வடிவில் வந்த 
ஆஞ்சநேயரிடம் கேட்டார் . 

  ஆஞ்சனேயர் விபீஷணனிடம்  இராமருக்கு நேர்ந்த நிலையைக்  கூறி தான் யார் என்பதையும் விளக்கினார்.  கேட்டதுமே. விபீஷணன் மிகவும்  ஆனந்தமடைந்தார். ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த பண்புகளின் நினைவலைகளில் இருவரும் அன்பிலும் ஆனந்த்த்திலும்  மெய் மறந்தனர்.

     பிறகு விபீஷணன் பவனகுமாரன்  ஆஞ்சனேயரிடம் கூறினார்--- வாயுகுமாரரே! நான் பற்களுக்கிடையில் உள்ள  நாக்கு போல இங்கு உள்ளேன்.என் நிலை சரி இல்லை. சூரியகுல திலகம் 
ஸ்ரீ  ராமர் என்னை அநாதையாக ஏற்று. அருள் புரிவாரா? 
  நான்   அரக்க  உடல்   பெற்றுள்ளதால் எனது  சாதனையில் வெற்றிபெற முடியவில்லை.என் மனதில் இராமர். மீது  அன்பும்   இல்லை தங்கள் போன்ற பக்தரை சந்தித்த பிறகு இராமரின் அருள் எனக்கு கிடைத்திருக்கிறது என்ற  நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.ராமரின் அருள் இருந்ததால்  தான் உங்களுடய 
தரிசனம்  கிடைத்துள்ளது.ராமர் பக்தர் மேல்  எப்பொழுதும் அன்பு செலுத்துவது தான் அவரது நெறிமுறையாகும். நான் ஒன்றும்  உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவனில்லையே. நான் சஞ்சல மன நிலைஉள்ள வானரம்.பிறவிகளில்  மிகவும்  தாழ்ந்தவன்.   காலையில் எழுந்ததும் குரங்குகளின் பெயரைச் சொன்னால் அன்று முழுவதும் உணவு கிடைக்காது. நான் இந்த அளவிற்கு தாழ்ந்தவன்.
அப்படி உள்ள எனக்கு  இராமரின் அருள்  கிடைத்திருக்கிறது. என்று தன்னைப் பற்றி விபீஷணனிடம் கூறும் போதே ஸ்ரீஹனுமானின் கண்களில் இருந்து பக்தி பரவசத்தால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     பகவானின் அருள் அறிந்தும் மற்ற லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு செல்லும் திசை தெரியாமல் சுற்றித் திரிவோருக்கு  இன்னல்கள் ஏன் வராது? இராமரின் பண்பினை குணத்தைப்  புகழைப்  பாடப்பாட வர்ணிக்க முடியாத அளவிற்கு தெய்வீக அமைதியைப்  பெற்றனர். 
    பிறகு விபீஷணன் அன்னை ஜானகியின் இலங்கையில் இருக்கும்  நிலைபற்றி கூறினார். ஸ்ரீஹனுமான்  சீதையின் நிலைபற்றி கேட்டறிந்ததும்  அன்னையைப்  பார்க்க வேண்டும் என்ற தன் வந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் கூறினார்.
   விபீஷணன்  சீதையைக்  காண அனைத்து உபாயங்களையும் கூறினார். ஸ்ரீஹனுமான். மீண்டும் தன் உருவத்தை மிகச் சிறியதாக மாற்றி அசோக வனத்தில் சீதை  இருக்கும் பக்கமாகச் சென்றார்.

   அங்கு. சீதையைக் கண்டதும்  மனத்திற்குள்ளேயே அவரை வணங்கினார். அங்கேயே இரவு முழுவதும் கழிந்துவிட்டது. சீதையின் உடல் மெலிந்திருந்தது. தலையில்  ஜடாமுடியின் ஒரு கொத்திருந்தது.
ஜானகியின்  துயரமான நிலை கண்டு  பவனகுமாரர்  மிகவும் வருத்தமுற்றார்.
     ஹனுமான்  மரத்தின். இலைகளில் மறைந்து அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகமான பெண்களுடன் அலங்கரித்துக்கொண்டு இராவணன் அங்கு வந்தான். 
 துஷ்டனான இராவணன் சீதையை பலவாறு தன் இச்சைக்கு அடங்கும் படி  அன்பாகவும்,  தானம் பரிசு தருவேன்  என்றும் அச்சுறுத்தியும்  தண்டனை தருவேன் என்றும்  மிரட்டினான் .பிறகு மண்டோதரி போன்ற ராணிகளை  உனக்கு அடிமையான  வேலைக்காரிகளாக்குவேன்  என்று. உறுதி மொழி அளித்தான். தனது  அன்பிற்குறிய கணவன் கோசலநாட்டு மன்னனை மனதில் நினைத்துக் கொண்டு 
அங்குள்ள  துரும்பகளைத்  திரையாக்கி அதன் மறைவி்ல் இருந்து  கொண்டு சொன்னாள்--
  பத்துத்  தலை கொண்டவனே! மின்மினுப் பூச்சி  வெளிச்சத்தில் தாமரை மலராது. நீ உன்னை அப்படியே நினைத்துக் கொள். தீய குணம் படைத்த அரக்கனே! உனக்கு  ஸ்ரீ ராமரின் பாணத்தின் மகிமை பற்றி  தெரியாது. 
  பாவியே! நீ அவர் இல்லாத போது சூனியத்தில் என்னை கொண்டுவந்துள்ளாய். நீ தாழ்ந்தவன்.வெட்கமில்லாதவன். உனக்கு வெட்கமே இல்லையா?

    தன்னை மினிப்பூச்சி என்றும் இராமனை சூரியன் என்றும்  சீதை சொன்னதுமே இராவணன் மிகவும் 
கோபம்  அடைந்து தன் வாளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு  கோபத்துடன் சொன்னான்---
சீதையே! நீ என்னை அவமதித்துவிட்டாய். நான் உன் தலை என் வாளால் வெட்டிவிடுவேன்.நான் சொல்வதைக் கேட்கவில்லை.என்
றால் நீ. உன் யிரை  இழந்துவிடுவாய். 

   பத்துத் தலையா! என் பிரபுவின்  புஜங்கள்  கருப்புத் தாமரை மலர் போன்று மென்மையானவை.அவை
யானையின் தும்பிக்கை போன்றவை. அவருடைய புஜங்கள் என் கழுத்தில் விழும் . அல்லது  உன்னுடைய வாள். ஏ பைத்தியக்காரா! இது தான் என் உண்மையான உறுதிமொழி. 

வாளே! எனது விரகதாபத் தீயால் உண்டான மிக அதிக எரிச்சலை போக்கி விடு. வாளே! நீ குளிர்ச்சியான,தீவீரமான,மேன்மையான பெருக்கத்தை ஓடச்செய்து விடுவாய்.உன்னுடைய  கூர்மை எனக்கு குளிர்ச்சியாக இருக்கும். என் மனத்துயரத்தின் சுமையைப் போக்கிவிடு.

 சீதை இவ்வாறு கூறியதுமே அவளை கொல்வதற்காக இராவணன் ஓடினான்.அப்பொழுது மயன் என்ற அரக்கனின் மகள்  மண்டோதரி அவனைத் தடுத்து அறிஉரை கூறி தடுத்தாள் . இராவணன் தன்னுடன் வந்த அரக்கப்  பெண்களிடம்  சீதையை  பல விதங்களி்ல் அதிகமாக  பயம் காட்டுங்கள். ஒரு மாதத்தில்
இவள். நான். சொல்வதை ஏற்காவிட்டால் இவளை வாளால் வெட்டிக் கொன்றுவிடுவேன். என்று கூறிவிட்டு  இராவணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.இங்கே ராட்சசிகள்  பல வித பயங்கர வடிவங்கள்
எடுத்து  சீதையை  பயமுறுத்தினர்.  அவர்களில் திரிசடை என்ற அரக்கி  மிக நல்லவள். இராமரின் மீது அதிக பக்தி உடையவள் . அதிக ஞானம் உடையவள்.அவள் அனைவரிடமும் தான் கண்ட கனவைக் கூறி
சீதைக்கு பணிவிடை செய்து நீங்கள் நலம்  பெறுங்கள். 
   எனது கனவில்  ஒரு குரங்கு இலங்கையை எரித்துவிட்டது.அரக்கர்களின் படைகள் முழுவதும் அழிந்துவிட்டது. இராவணன்  நிர்வாணமாக  கழுதையில் உட்கார்ந்திருக்கிறான்.அன் தலை  மொட்டை அடிக்கப் பட்டுள்ளது.இருபது புஜங்களும் வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவன் யமபுரிக்கு போய்க் கொண்டிருக்கிறான்.இலங்கைக்கு அதிபதியாக விபீஷணன் ஆகவிட்டார். நகரத்தில் அனைவரும்
இராமர் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர் . பிரபு   சீதையை அழைத்துச்  சென்றார். இந்த கனவு நான்கு  நாட்களில் மெய்யாகிவிடும். திரிஜடை  சொன்னதைக் கேட்டு  அரக்கிகள் பயந்து சீதையி்ன் கால்களில் விழுந்து வணங்கினர். 
  அனைவரும் சென்ற பிறகு  ஒரு மாதம் கழிந்த பிறகு இந்த அரக்கன் என்னைக் கொன்றுவிடுவான் என்று  சீதை நினைத்தாள். 
சீதை கைகூப்பி திரிசடையை வணங்கினாள். அவளிடம்  ஆபத்தில் என்னுடன் சேர்ந்து இருந்தாய்.நீ விரைவில் என் உயிர் போக ஒரு வழியைப் பயன் படுத்து. இந்த விரஹ வேதனையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. 
 கட்டை களைக் கொண்டுவந்து  எனக்கு சிதை மூட்டு.இராவணனின் கடும் சொற்களை என்னால் கேட்க இயலவில்லை. 

 சீதை சொல்வதைக் கேட்டு திரிசடை அவளுக்கு இராமனின் வீரத்தையும் பலத்தையும் கூறி ஆறுதல் அளித்தாள். இரவில் சிதைக்கான கட்டைகள் கிடைக்காது என்று கூறி சென்றுவிட்டாள். 

 பகவானே எனக்கு எதிராக இருக்கிறார்.நெருப்பும் கிடைக்காது.எனது மனத்துயரமும் தீராது.ஆகாயத்தில் நெருப்பு  கங்குகள் போல் நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் பூமியில் ஒரு நட்சத்திரம்கூட இல்லையே என்று சீதை மனதிற்குள் எண்ணினாள். 

நிலவும் நெருப்பு மயமே .ஆனால் அதுவும் என்னை துரதிர்ஷ்டசாலி என அறிந்து நெருப்பைப் பொழியவில்லை. அசோகமரமே! எனது வேண்டுகோளை ஏற்று எனது மனவேதனைகளைப்  போக்கி 
உன்னுடைய பெயரான துன்பத்தை போக்கு என்பதை மெய்ப்பித்து விடு. உன்னுடைய  மென்மையான 
இலைகள் நெருப்பைப் போன்றவையே. நெருப்பை மூட்டி எனது பிரிவுத்துயரத்தைப் போக்கிவிடு.

  சீதையின் விரக வேதனையைக் கண்ட  அனுமானுக்கு அந்த நொடி  ஒரு கல்பத்திற்கு சமமாக இருந்தது . சீதைக்கு தைரியம் கொடுக்க ஆஞ்சனேயர் ராமரின் கணையாழியை சீதையின் முன் போட்டார். சீதை அது ராமருடையது என அறிந்து எடுத்துப் பார்த்தாள்.அதில் இராமருடைய பெயர் பொறித்திருப்பதைப்  பார்த்து சீதை ஆச்சரியப்பட்டாள். மகிழ்ச்சி அடைந்தாள். ராமரை நினைத்து பிரிவுத் துன்பத்தால் வேதனையடைந்தாள்.பிறகு  ராமர் வீரர். அவரை ஒருவரும்  வெல்லமுடியாது. எந்த மாயையும் இப்படி ஒரு மோதிரத்தை செய்ய முடியாது.இப்படி சீதை  மனதில் பல வித எண்ண அலைகள் அலைபாயும் போது  அனுமான் இனிய  சொற்களால்  பேசினார்--இராமரின் புகழைப் பாடினார். அதைக் கேட்டதும் சீதையின் துயரம். பயந்தோடிவிட்டது.அனுமான் சொல்வதை அவர் கவனமாகக் கேட்டார்.
ஆரம்பத்தில் இருந்து  முழுகதையையும்  அனுமான் கூறினார். 
   என்  காதிற்கு  இனிய  அமிர்தமான சொற்களைக்கூறி மகிழ்வித்தவர் எனக்கு எதிரி்ல் ஏன் வரவில்லை என்றார். உடன் அனுமான் சீதைக்கு முன் வந்தார். அவரைப் பார்த்த்தும் சீதை முகத்தைத் திருப்பிக் கொண்டார். 
அப்பொழுது அனுமான் சீதையிடம். நான் ராமனின்  தூதன். அன்னை ஜானகியே! நான் கருணை வடிவான ராமரின்  மீது சத்தியமாகக்  கூறுகிறேன். அன்னையே! இந்த மோதிரத்தை நான் தான் 
கொண்டுவந்தே
ன். நான் அவர் தூதன்.அற்கு சான்றுதான் இந்த மோதிரம் .
 மனிதருக்கும் வானரத்திற்கும் எப்படி சேர்க்கை ஏற்பட்டது?என்று சீதை வினவ  அனுமான் விவமாக 
 இராமருக்கும் அனுமானுக்கும்  ஏற்பட்ட தொடர்பு பற்றி கூறினார். அனுமானின் அன்பு நிறைந்த 
விரங்களைக் கேட்டு  சீதைக்கு  அனுமார் மனதாலும்,சொல்லாலும் செயலாலும்  அருட் கடல் ராமரின் தாசர் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.  ராமரின் அன்பிற்குறியவர் அனுமான் மீதுமிகவும் ஆழமான  அதிக அன்பு உண்டாகியது. உடலில் ஆனந்தம்  ஏற்பட்டது.கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்தது. அனுமானே!  பிரிவுத் துயரக்கடலில். மூழ்கும் எனக்கு என்னை மீட்க வந்த கப்பல்
போன்றவன் நீ. இராமன-லட்சுமணனின் நலத்தைப் பற்றி கூறு.ராமர்  மென்மையான மனமும் கிருபாகடாட்சமும் கொண்டவர்.  ஏன் இப்படி இரக்கமற்ற முறையைக் கையாள்கிறார். தொண்டனுக்கு சுகம் அளிப்பது அவரது  இயற்கை  குணம்.  அவர் என்னை நினைவில் வைத்துக்கொண்டுள்ளாரா?
அவரது  மென்மையான  உருவம்  கண்டு என் கண்கள் குளிர்ச்சியடையுமா?என்னால் பேச முடியவில்லை.
கண்களில்  இருந்து  கண்ணீர் பெருக்கெடுத்தது. நாதா! நீங்கள். என்னை  முற்றிலும்  மறந்து விட்டீரகள்.
  சீதையின் ஆற்றொனாத் துயர் கண்டு  பணிவாக மென்மையாக பேசினார்--ஸ்ரீராமரும் இலக்குவனனுடன் நலமாக இருக்கிறார். ஆனால் உங்கள் நினைவாகத்தான் வருத்தமாக இருக்கிறார்.
இராமரின் இதயத்தில் உங்கள் மீது  அதிக அன்பு இருக்கிறது. நீங்கள் தைரியமாக இருங்கள். அனுமான்  அன்பினால் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். 
பின் ராமரின் செய்தியாகக் கூறினார்-- ராமர் சொல்கிறார்   - சீதையே! உன்பிரிவால்  எனக்கு எல்லாமே 
அனுகூலமற்றதாக இருக்கின்றன. மரங்களின் துளிர் இலைகளும் நெரு்பு போல் இருக்கின்றது.இரவு பயங்கரமாக உள்ளது. நிலவு  சூரியனைப் போல் சுட்டெரிக்கிறது. தாமரை வனங்கள் ஈட்டிகளின் வனங்கள் போல் இருக்கின்றன. எனக்கு நல்லது செய்வதெல்லாம் இப்பொழுது இன்னல் தருவது போல் இருக்கின்றன. காற்று கூட மூச்சுக் காற்றுபோல் சூடாக இருக்கின்றது. பாம்பு  சுவாசிப்பது போல் விஷம் கலந்த வெப்ப காற்றுபோல இருக்கிறது. மன வேதனை சொன்னால் வேதனை குறையும்.ஆனால் யாரிடம் பகர்வேன். இந்த வேதனையை ஒருவரும் அறியமாட்டார்கள். உனக்கும் எனக்கும் உள்ள காதல் தத்துவம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் மனம் எப்பொழுதும் உன்னருகில் தான் இருக்கிறது. என் அன்பின்  சாரம் இதுதான். இராமரின் அன்பான செய்திகளைக் கேட்டு  சீதை தன் மெய்மறந்து விட்டாள். அன்பில் ஐக்கியமாகிவிட்டாள்.
  ஹனுமான் அன்னையிடம் இராமர் மீது நம்பிக்கை வைத்து மனதில் தைரியமாக இரு. தன் பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்மைகளையும் சுகங்களையும் தரக்கூடிய ஸ்ரீராமனை ஜபம் செய்.  ஸ்ரீராமரின் மகிமையை மனதில் இருத்தி கோழைத் தனத்தை விட்டுவிடு.
   அரக்கர்கள் கூட்டம் விட்டிற் பூச்சிகள்  போன்றது.அந்துப் பூச்சிகள் போன்றவை. ஸ்ரீ ராமரின் பாணம்
நெருப்பு போன்றது. அன்னையே! அரக்கர்கள் எரிந்துவிட்டனர் என்றே அறிந்துகொள். 
    ஸ்ரீராமருக்கு உங்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தாமதிக்கமாட்டார்.அன்னையே!ஸ்ரீராமரின் அம்பு என்ற சூரியன் உதித்ததுமே அரக்கர்கள் படைகள் என்ற இருள் அகன்றுவிடும். 
 அன்னையே! இப்பொழுதே நான் தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லமுடியு்ம்.ஆனால் இராமசந்திர பிரபு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. சில நாடகள் பொறுமையாக இருங்கள்.
ஸ்ரீஇராமர் வானரப்படைகளோடு இங்கு வருவார். அரக்கர்களைக் கொன்று உங்களை அழைத்துச் செல்வார். நாரதர் போன்ற முனிவர்கள் மூன்று உலகங்களிலும் உன் புகழைப் பாடுவார்கள்.
  சீதை மனதில் சிறிய வடிவில் உள்ள அனுமனைக்கண்டதும் சந்தேகம் எழுந்தது. அவர் அனுமானிடம்,
வானரங்கள் அனைத்தும் உன்னைப்போல் சிறிதாக இருப்பார்களா?இவ்வளவு பெரிய அரக்கர்களை எப்படி  எதிர்த்து. போரிடமுடியும்? இதைக் கேட்டதும்  அனுமான் தன் அட்டமா சக்தியால்் தன்் உண்மையான பெரும் வடிவத்தில் தோன்றினார்.பொன் மலை போன்ற உடல். அவரைப் பார்த்தாலே எதிரிகள் அஞ்சும் உடலமைப்பு.பலமும் வீரமும் கொண்ட தோற்றப்பொலிவு. 
    ஸ்ரீஹனுமானின்  உண்மையான தோற்றம்  கண்டு  சீதை மனதில் இருந்த ஐயம் விலகியது.மனதில் 
திடமான நம்பிக்கை ஏற்பட்டது. 

  ஹனுமான். மீண்டும்  சிறிய. வடிவம் எடுத்துக் கொண்டார்.  
அன்னையே! வானரங்களுக்கு   அறிவு  மட்டு. பிரபுவின் பிரதாபத்தால்  சிறிய  பாம்பும்  கருடனை சாப்பிட முடியும். மிகவும் பலமற்றவனும் மிக  பலமுள்ளவனைக் கொல்ல முடியும்.  
   பக்தி, வீரம் ,பலம், தேஜஸ் மிக்க அனுமானின் வார்த்தைகளைக் கேட்டு சீதைக்கு மனநிறைவு ஏற்பட்டது. ஸ்ரீராமரின் அனபிற்குறிய அனுமானுக்கு ஆசிகள் வழங்கினார். 
அனுமானை மகனே என்று அழைத்தார். நீ பலமானவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் இரு.நீ முதுமை இன்றி எப்பொழுதும் இளமையாக இருப்பாய். உனக்கு மரணமில்லை.ஸ்ரீராமர் உனக்கு அருள் பரியட்டும்.
பிரபு அருள் புரியட்டும் என்று அன்னை சீதை கறியதுமே அனுமான் அதிக ஆனந்தமடைந்தார். 
சீதையை மீண்டு்ம் மீண்டும் வணங்கினார். பிறகு இருகரங்களையும் கூப்பி ,''அன்னையே! இப்பொழுது நான் வெற்றிபெற்றுவிட்டேன். உங்களது ஆசிகள் சக்திமிக்கவை.புகழ் பெற்றவை. 
    பழங்கள் நிறைந்த மரங்களைக் கண்டதும் எனக்கு பசி எடுக்கிறது. மகனே!மிகப் பெரிய வீர்ர்கள் இவைகளைக்  காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சீதை கூறியதும் ஹனுமான் ,அன்னையே!
நீங்கள். மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை.
  
ஹனுமானின்  அறிவுத் திறனையும் பலத்தையும் கண்டு சீதைஅனுமானிடம் கூறினார்---மகனே!ரகுநாதனை  மனதில் வைத்துக் கொண்டு   இனிப்பான பழங்களைச்  சாப்பிடு.  
   ஸ்ரீஹனுமான் சீதையை வணங்கி விட்டு  தோட்டத்திற்குள் புகுந்து பழங்களை சாப்பிட்டார்.மரங்களின் கிளைகளை முறித்தார். அங்கு பல போர் வீரர்கள்  காவலுக்கு இருந்தனர்.
அவர்களில் சிலரை அனுமான் கொன்றுவிட்டார். சிலர் இராவணனிடம் புகார்  கொடுக்கச் சென்றனர் .
அவர்கள இராவணனிடம் அசோகவனத்தில் பெரிய குரங்கு வந்து பழங்களை சாப்பிட்டது.மரங்களை முறித்தது. சில வீர்ர்களைக்  கொன்றுவிட்டது. 
 இதைக் கேட்டு இராவணன் அதிக வீரர்களை  அனுப்பினான். அவர்களைப் பார்த்து கர்ஜித்தார். பல வீரர்களைக்  கொன்றுவிட்டார். சிலர் அடிபட்டு கத்திக் கொண்டே சென்றனர். 
   பிறகு இராவணன் அட்சயகுமாரனை அனுப்பினார்.அவன் பெரும்படையுடன் சென்றான். அவன் வருவதைப் பார்த்து  இராமன் பெரிய மரத்தைப்  பிடுங்கி அவனைக் கொன்று பெரும் ஓசையுடன் கர்ஜித்தார்.அனுமான் சேனையில்  சிலரைக் கொன்றார்.  சிலரை  நசுக்கினான்.சிலரை மண்ணோடு 
மண்ணாக்கினார்.சிலர் இராவணனிடம் சென்று   அனுமான் பெரிய பலசாலி என்று கூறினர். 
    மகன் வதம் செய்யப் பட்ட செய்தி  அறிந்து தன் மூத்த மகன் பலசாலியான மேகநாதனை அனுப்பினார். அவனைக்  கொன்றுவிடாதே. அவனைக் கட்டி உயிருடன் அழைத்துவா. அந்த குரங்கு எங்கிருந்து வந்திருக்கிறது? 
 இந்திரனையே தோற்கடித்த ஒப்பில்லா வீரன் மேகநாதன் அனுமானுடன் போர் புரியச் சென்றான்.தன் சகோதரனைக்  கொன்ற செய்தி அறிந்து மேகநாதன் மிகவும் கோவமாக இருந்தான். அனுமான் பயங்கரமான போர்வீரன் வருவதைப் பார்த்தார். அவர் கர்ஜித்துக் கொண்டே ஓடினார். ஒரு மிகப்பெரிய 
மரத்தை வேரோடு பிடுங்கி மேகநாதனின் தேரை ஒடித்து அவனுக்குத் தேர் இல்லாமல் செய்தார். அவனுடன் வந்த வீரர்களை அழிக்க ஆரம்பித்தார். அனைவரையும் கொன்று விட்டு மேகநாதனுடன்
போர் புரியத் தொடங்கினார். இரண்டு யானைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் இருந்தது. அனுமான் மேகநாதனை ஒரு குத்து குத்திவிட்டு மரத்தின் மீதுஏறினார். அவனுக்கு ஒரு நொடியில் மயக்கம் தெளிந்தது.  அவன் எழுந்து அனுமான் தன்னை வெல்ல முடியாத அளவிற்கு மாயைகள் புரிந்தான். ்ஆனால் அவனால் வெல்ல முடியவில்லை.இறுதியில் அவன் பிரம்மாஸ்த்திரத்தை 
பிரயோகித்தான். அனுமான் பிரம்மாஸ்த்திரத்தின்  மஹிமை குறைந்துவிடக் கூடாது என கட்டுண்டிருந்தான்.அவன் அனுமான் மீது பிரம்ம பாணத்தை ஏவினான்.அது தாக்கியதுமே அனுமான் மரத்தில் இருந்து விழுந்தார்.விழுந்து கொண்டிருந்த நிலையிலும்  பல படைவீர்ர்களைக் கொன்றார்.
ஹனுமான் மயக்கமடைந்த பிறகு  மேகநாதன் அவரை நாகபாசத்தால் கட்டி எடுத்துச் சென்றான்.
  குரங்கு கட்டப்பட்ட செய்தி அறிந்ததும் வேடிக்கை பார்க்க அரக்கர்கள் எல்லோரும் அவைக்கு வந்தனர். ஹனுமான் இராவணனின் அரசவையைப் பார்த்தார்.அங்கு வர்ணிக்க முடியாத அளவிற்கு
ஜஸ்வர்யங்கள் இருந்தன.
   தேவர்களும் திக்பாலகர்களும் மிகவும் பணிவுடனும் ்பயத்துடனும் இராவணனின் கோபமான முகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.அவனுடைய  வீரத்தையும் மகிமையை அறிந்தும் பார்த்தும் ஹனுமான் அஞ்சவில்லை.அவர் பாம்புகளின்  கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் கருடன் போன்று
பயமின்றி இருந்தார்.
  இராவணன் அனுமானைப் பார்த்துஉ தீயசொற்களைக் கூறி அட்டகாசமாக சிரித்தான். ஆனால் மகனின் மரணத்தை நினைத்து  வருந்தினான். 
  பிறகு ஹனுமானைப் பார்த்து கேட்டான்--" நீ யார்?யாருடைய பலத்தால்  நீ காட்டை பாழ்படித்தினாய்?
நீ என்னுடைய பெயரையும் புகழையும் கேள்விப்படவில்லையா?பைத்தியக்காரா! எனக்கு  முன்னால் நீ அச்சமின்றி இருக்கிறாயே! நீ. அசுரர்களை  எந்த குற்றங்களுக்காகக்  கொன்றாய்?முட்டாளே! உனக்கு 
உன் உயிர் போய்விடும் என்ற பயம். இல்லையா?
ஸ்ரீஹனுமான் விடைபகர்ந்தார்--என் பலம்  படைத்தல்,காத்தல்,அழித்தல் புரியும் பிரம்மா,விஷ்ணு,
மஹேஷ்  வலிமை. பிரம்மாண்டத்தை,மலைகள்,வனங்களைத் தாங்கும் ஆயிரம்தலை கொண்ட ஆதிஷேசன் பலம்.தேவர்களைக் காக்க பலவித்த அவதாரங்கள் எடுத்தவர் பலம்.உன்னைப் ்போன்ற 
முட்டாள்களுக்கு தண்டனை கொடுக்கும் பலம்.சிவ தனுஷைஐ உடைத்தபலம்.அதனால் அரசர்களின் ஆணவத்தை தூள் தூளாக்கியபலம். கரன்,தூசன்,திரிசடை,வாலி போன்றோரை வதம் செய்தபல்.யாருடனும் ஒப்பிட முடியாதபலம்.  
 அந்தபலத்தின் சிறிதளவு பலத்தால் உலகம் முழுவதையும் நீ வென்றுள்ளாய்.அந்த அதிக பலம்
உள்ளவரின் மனைவியைத் திருட்டுத் தனமாக கொண்டுவந்துள்ளாய். நான் அந்த சர்வ வல்லமை பெற்றவனின் தூதன்.

 நான் உன் மஹிமையை நன்கு அறிவேன். ஸஹஸ்ரபாஹுஉடனும் வாலியிடமும் போரிட்டு வெற்றிபெற்று புகழ் பெற்றுள்ளாய். அரக்கர்களின் தலைவனே!எனக்கு பசி எடுத்தது.ஆகையால் மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டேன். குரங்குகளின் குணப்படி மரங்களை ஒடித்தேன்.தீயவழியில் செல்லும் துஷ்ட அரக்கர்கள் என்னை. அடிக்கத் தொடங்கினர்.உடல் அனைவருக்கும் அதிகப் பிரியமானது.என் உயிர் காக்க அவர்களைக் கொன்றேன்.அதனால் உன் மகன் என்னைக் கட்டிக் கொண்டுவந்து விட்டான். நான் என் பிரபுவின் பணிக்காக வந்தேன்.
இராவணா! நான் கைகூப்பி வேண்டுகிறேன்.நீ உன் ஆணவத்தை விட்டுவிட்டு  என் அறிவுரையைக் கேள்.நீ உன் பவித்திர குலத்தின் மேன்மைக்காக உனது பிரமையை விடுத்து பக்தர்களின் பயம் போக்குவதற்காக பகவானை  பஜனை செய்யவும். அனைத்து உலகப் படைப்புகளையும் அழிக்கும் எமனே  ராமரைக் கண்டு அஞ்சுவார்.அவரைப் பகைத்துக் கொள்ளாதே. நான் சொல்வதைக் கேட்டு
சீதையை கொடுத்துவிடு.

 கரனின் விரோதியான ஸ்ரீ ரகுநாதன் அடைக்கலமானவர்களைக் காப்பவர். இரக்கக் கடவுள்.நீ சரணடைந்தால் உன்னுடைய குற்றங்களை மன்னித்து அடைக்கலம் தருவார். ஸ்ரீராமரை மனதில் 
வைத்து இலங்கையை  ஆட்சி செய்.
 தங்கள் தந்தை ரிஷி புலஸ்த்யரின் புகழ்  களங்கமற்ற நிலவைப் போன்றது. அந்த நிலவில் நீ களங்கமாகி விடாதே. 
  ராம நாமம்  இன்றி சொல்லிற்கு அழகு இருக்காது. மோகத்தையும் ஆணவத்தையும் விடுத்து  எண்ணிப்பார். அடே! தேவர்களின்  எதிரியே! ஆபரணங்களால் தன்னை அலங்கரித்த  அழகான பெண் 
ஆடையின்றி நிர்வாணமாக இருந்தால் அழகாக இருக்கமாட்டாள். இராமனை எதிரியாக நினைப்பவர்களின் செல்வமும் மஹிமையும் இருந்தாலும் பயன் இன்றி அழிந்து விடும். செல்வங்கள் பெற்றாலும் பெறாததற்கு  சமம். நீர் ஊற்றுள்ள  நதிமூலம்  இல்லாத ஆறுகளில் மழைகாலத்தில் தண்ணீர் ஓடும்.  மழை நின்றதும் வரண்டுவிடும்.  ராமனை எதிரியாகக் கருதுபவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.ஆயிரம்  சிவன்கள்,விஷ்ணுக்கள,பிரம்மாக்கள் உடன் இருந்து அருள் பாலித்தாலும்  அவர்களால்  தப்பிக்க முடியாது.

அனைத்திற்கும் மூலமாக இருப்பது மோகம் தான்.  அது அறியாமையை உண்டாக்கும் அதிக இருண்ட வாழ்க்கையைத் தரும் மோகத்தையும் ஆணவத்தையும் விட்டுவிடு.கருணைக் கடலான ரகுகுலத் திலகமான இராமச்சந்திரனை  பஜனை செய்.  
 ஸ்ரீ ஹனுமான் இராவணனுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் ,நீதி  ஆகிய அறிவுரைகள் வழங்கினாலும் 

மிகவும் ஆணவம் கொண்ட  இராவணன் ஹனுமானை பரிகாசம் செய்தான். நமக்கு ஞானோபதேசம் செய்ய ஓரு குரங்கு  குருவாகக்  கிடைத்துள்ளார் என்றான்.
ஹனுமானைப் பார்த்து துஷ்டனே!நீச்சனே! எனக்கா பாடம் புகட்டுகிறாயா ?உனக்கு மரணம் நெருங்கி விட்டது என்றான். 
இதைக் கேட்டதும் ஹனுமான் உனக்குத் தான் மரணம் நெருங்கிவிட்டது. எனக்கல்ல.உனது அறிவு  மழுங்கிவிட்டது என்பதை நான் நேரடியாக காண்கிறேன்.