Sunday, July 12, 2026

லிங்க புராணம்

 லிங்கபுராணம் 


பகுதி 29 


பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம் தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார். யோகம் ஐந்து வகைப்படும்.

1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.

2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.

3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.

4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.

5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும். மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர். 


தொடரும்🙏🙏

ख्वाब की दुनिया





सपनों का संसार 

एस.अनंतकृष्णन, चेन्नई।

13-6-26.

++++++++

 सपनों का संसार 

 अच्छा लगता है।

साकार होने पर 

जीवन सार्थक होता है।

दिवा सपना आलसियों के लिए,

दिन में सोना बुरा है।

तड़के गहरी नींद का सपना,

 सच का प्रतीक होता है।

बैठे जागते  कोरी कल्पनाएँ,

सपनों का संसार होता है।

 मेरे सपनों के संसार में 

ईमानदारी, सत्य,अहिंसा, संतोष 

 शांति का संसार।

 सर्वत्र  न्याय,

 शिक्षा में न अमीरी ग़रीबी  के भेदभाव।

चिकित्सा में भी।

भ्रष्टाचारी, रिश्वतखोरी 

 अधिकारियों को

‌तटस्थ सज़ा।

 मानव मन में 

 इन्सानियत रहें।

 मत देने लेन-देन न हो।

 रिश्वत रोकने अलग विभाग,

पर चुनाव से लेकर 

श्मशान तक रिश्वत।

न्यायालय  में 

सिविल हो या क्रिमिनल 

समान दंड प्रक्रिया हो।

 हर मानव  निस्वार्थ रहें।

दान धर्म का महत्व समझें।

 सब को याद रहें,

 संसार नश्वर है।

कर्म के अनुसार 

 जीवन सुखी या दुखी होता है।

 ईश्वर का भय रहें ।

स्वच्छ भारत की कल्पना में,

हर नागरिक को साथ देना चाहिए।

 पुलिस, सरकारी अधिकारी  अपनी कार्रवाई में देरी न करें।

 संक्षेप में देश स्वर्ग तुल्य बनने में 

नागरिक दत्त चित्त हो जाएँ।

++++++++++++++++++++


एस. अनन्तकृष्णन, चेन्नै



आज की चुनौती

सपनों का संसार

एस. अनन्तकृष्णन, चेन्नई

13-07-2026

सपनों का संसार

सदा अच्छा लगता है,

जब वह साकार हो जाए,

तभी जीवन सार्थक बनता है।

दिवास्वप्न आलस्य का प्रतीक है,

दिन में सोना उचित नहीं।

प्रातःकाल की गहरी नींद का सपना

कभी-कभी सत्य का संकेत माना जाता है।

जागते हुए की कोरी कल्पनाएँ भी

सपनों का ही संसार रचती हैं।

मेरे सपनों के संसार में

ईमानदारी, सत्य, अहिंसा, संतोष

और शांति का साम्राज्य हो।

सर्वत्र न्याय का शासन हो।

शिक्षा और चिकित्सा में

अमीरी-गरीबी का कोई भेदभाव न रहे।

भ्रष्टाचार और रिश्वतखोरी करने वाले

अधिकारियों को

निष्पक्ष और कठोर दंड मिले।

हर मानव के हृदय में

इंसानियत जीवित रहे।

मतदान में लेन-देन न हो।

रिश्वत रोकने के लिए

सशक्त व्यवस्था बने,

क्योंकि आज चुनाव से लेकर

श्मशान तक रिश्वत का बोलबाला है।

न्यायालयों में

चाहे सिविल मामला हो या आपराधिक,

न्याय की प्रक्रिया समान और निष्पक्ष हो।

हर व्यक्ति निस्वार्थ भाव से

समाज की सेवा करे।

दान और धर्म का महत्व समझे।

सदैव स्मरण रहे कि

यह संसार नश्वर है।

कर्मों के अनुसार ही

जीवन सुखी या दुखी बनता है।

ईश्वर का भय और

सदाचार का भाव बना रहे।

स्वच्छ भारत के स्वप्न को साकार करने में

हर नागरिक अपना योगदान दे।

पुलिस और सरकारी अधिकारी

अपने कर्तव्यों का पालन

बिना विलंब और निष्पक्षता से करें।

संक्षेप में—

मेरा सपना है कि

देश का प्रत्येक नागरिक

कर्तव्यनिष्ठ, ईमानदार और जागरूक बने,

तभी हमारा भारत

वास्तव में स्वर्ग-तुल्य राष्ट्र बन सके।

— एस. अनन्तकृष्णन, चेन्नई :::

विषय और भाव अत्यंत प्रेरणादायक हैं। यदि चाहें, मैं इसे और अधिक काव्यात्मक (छंदबद्ध) या मंच-पाठ के अनुरूप भी रूपांतरित कर सकता हूँ।

Saturday, July 11, 2026

லிங்க புராணம்.

 லிங்கபுராணம் 


பகுதி 28 


பார்வதி, பரமசிவன் திருமண வைபவம் நிஷ்டை கலைந்து எழுந்த ஈசன் ஒரு முதிய அந்தணர் வடிவில் பார்வதி முன் தோன்ற, உமையும் அவரை யார் என்று அறிந்து உபசரித்து, தன் விருப்பப்படி திருமணம் நிறைவேற அருள்புரிய வேண்டினாள். மகிழ்ச்சியுற்ற மகேசுவரன் சுயஉருவை காட்டி அவ்வாறே ஆகும் என்று கூறி மறைந்தார். நடந்தவற்றை எல்லாம் பார்வதி இமவானிடம் தெரிவித்தாள். அடுத்து இருதரப்பிலும் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாயின. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் பரமன் வருகையை நோக்கிக் காத்திருந்தனர். உமாதேவி புனித நீராடி புத்தாடை அணிந்து, ஆபரணங்கள் தரித்து அற்புத கோலத்துடன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பார்வதியின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதை அனைவரும் கண்டனர். இந்திரன் அது ஓர் அசுரனோ என எண்ணி அதன்மீது வஜ்ஜிராயுதத்தை ஓங்க, அவன் கை அசைவற்றுப் போயிற்று. மற்றவர்களும் வெகுண்டு எழுந்தனர். நான்முகன் எல்லோரையும் அமைதிப்படுத்தி குழந்தையை நெருங்கி போற்றி வழிபட்டார். இறைவனே குழந்தையாக வந்திருக்கிறார். அவரைப் பணிந்து தொழுது அருளைப் பெறுங்கள் என்று கூறினார். இறைவன் ஜோதியாக தன் சுயஉருவைக் காட்டிட, இமவானும் மேனையும் அவரை வலம் வந்து வணங்கி தமது புத்திரி உமையை மனமுவந்து திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தனர். பிரமனும் ஈசனை அணுகி அவரை வணங்கி தேவியின் திருக்கரம் பற்றி அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டினார். அப்போது பரமன், பிரம்மனிடம் விசுவகர்மாவைக் கொண்டு மாளிகைகளை நிர்மாணிக்கச் செய்யுமாறு கூறினார். திருமண முகூர்த்த நேரம் நெருங்கிட, சர்வ அலங்கார பூஷிதராய் ஈசன் உமையவள் திருக்கரத்தைப் பற்றக் காத்திருந்தார். அவருடைய மணக்கோலத்தைக் கண்டு முனிவர்களும், மற்றவர்களும் மகிழ்வுற்றனர். உமாதேவியாரும் புனித நீரால் நீராட்டப்பட்டு, ஆடை அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு லக்ஷ்மி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் தேவியைத் தாங்கிவர திருமண மண்டபத்தை அடைந்தாள் பார்வதி. அப்போது அயன், விஷ்ணுவிடம் அவரது உடன்பிறந்தாளைச் சிவபெருமானுக்கு அனைவரும் மகிழ்ந்திட அளிக்குமாறு கூறினார். உடனே மாதவன், பரமன் தாள் பணிந்து வணங்கி, அவரது பாதங்களை கைகளால் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கங்கை நீரால் கழுவி, நறுமலர்கள் கொண்டு பக்தியுடன் அர்ச்சித்தார். பின்னர் திருமால் ஈசனிடம், தங்களையே பதியாக அடைய அல்லும் பகலும் தேவி தியானித்து வருகிறாள். அவனை மனமுவந்து ஏற்றருள் புரியவேண்டும் என்று வேண்டினார். பிரமன் ஈசனை நெருங்கி அவர் அனுமதி பெற்று, ஹோம காரியங்களைத் தொடங்கினார். பரமன் தேவியுடன் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து எங்கும் ஆனந்தம் பொங்கிட மங்கள நாணைத் தேவிக்கு அணிவித்தார். திருமணம் முடிந்த பின் ஈசன் உமையுடன் புறப்பட்டுக் காசியை அடைந்தார். அங்கே இமவான் லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசன் உருவைத் தியானித்து வழிபட்டு மேனையுடன் மேலான உயர் பதத்தை அடைந்தன்.

நம: பார்வதி பதயே, ஹரஹர மகாதேவ 


தொடரும்🙏🙏

சனாதன தர்மம்.

 ஜய ஜய பாண்டுரங்கா!

பாரினில் அமைதி ஆனந்தம் மனநிறைவு தருவது

 தியானம்.

 நாம் ஜபம்.

 மன நிறைவுக்காக

 மது அருந்துதல் 

 திரைப்படம் செல்வது

பெண் இன்பம் 

பொருளீட்டல் இல்லா

மன சஞ்சலமில்லா

 தியானம் தவம்

யோகா தான் சனாதன தர்மம்.

உலகில் ஆசையற்ற தெய்வ பக்தி தியாகம் 

  மனித நேயம் 

 அழியும் உலகம்

 அழியும் உடல்

 என்ற சனாதன தர்மம் 

 பின்பற்றுவதில் 

தான் பிரம்மானந்தம்.

 அதை அனுபவித்த ரிஷி முனிவர்கள் 

 காட்டிய மார்க்கம் .

 இதில் வேதம் தான் உயர்வு என்று குரான் எரிக்கும்  உபதேசம் இல்லை.

 பைபிள் தொடக்கூடாது 

என்ற 

வெறுப்பு 

 பிரசாரம் இல்லை.

 வையகம் வாழ்க.

  வையகம் ஒரு குடும்பம் 

 என்ற மனித ஒற்றுமை

 அஹிம்சை சாந்தி.

 அதனால் தான் ஆலயம் முன் பெரியார் சிலை வாககம்.

 பக்தர்கள் கூட்டம் 

 அவரது கடவுள் மறுப்புக் கொள்கை படு தோல்வி என்பதற்கு வெளிப்படை சான்று.

 துர்கா ஸ்டாலின் ஆலயதரிசனம்

  சனாதன தர்மம் 

 அழிக்க ஒழிக்க முடியாது என்பதற்கான

உறுதியான  அஸ்திவாரம்.

 ஜய் ஜகத்.

 வஸுதைவ குடும்பகம்.

நடுநிலையான 

 சமரச சன்மார்க்க இயற்கை  சக்திகள்

 நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்.

 மற்ற தெய்வங்கள் 

 மனிதனின் தெய்வ பக்தி க்கான உருவங்கள்.

 அவை மனிதனின் ஒற்றுமையையும் மனித நேயத்தையும் ஒழிக்கும்  மதங்கள் தான்.

ஓம் ஓம் ஓம் ஓம் என்பது பிரணவ மந்திரம்.

Thursday, July 9, 2026

லிங்க புராணம்

 லிங்கபுராணம் 


பகுதி 26 


தக்கன் நடத்திய வேள்வியும், அதன் விளைவும் தக்கன் தன் மகள் சதியை ஈசனுக்குத் திருமணம் செய்து வைத்தான். தக்கன் மகள் என்பதால் தேவி தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். தக்ஷபிரஜாபதியை இந்திராதி தேவர்கள் வணங்குவதால் மருமகனாகிய ஈசன் தன்னை வணங்கி கவுரவிப்பதில்லை என்று அவன் ஆணவத்தின் காரணமாக ஈசன் மீது பகை கொண்டான். தக்கன் மாபெரும் யாகம் ஒன்று நடத்தினான். பிரமாதி தேவர்கள் எல்லார்க்கும் அழைப்பு அனுப்பி, ஈசனுக்கு மட்டும் அனுப்பவில்லை. எனினும், தாட்சாயிணி அழைப்பில்லாமலே யாகத்திற்கு வர அவரைக் கவுரவிக்கவில்லை. மேலும், ஈசனைப் பற்றியும் அவதூறாகப் பேசினான். அவமதிப்புக்கு உள்ளான தாட்சாயிணி அக்கினியில் உடலைத் துறந்துவிட்டு இமவான், மேனை தம்பதிகளின் வேண்டுதலுக்கேற்ப அவர்களுக்குப் புத்திரியாக அவதரித்தாள். இதனால் மிகவும் கோபம் கொண்ட பரமசிவன் வீரபத்திரனைத் தோற்றுவித்து, உடனே புறப்பட்டுச் சென்று தக்கன் வேள்வியை அழித்து, அவனைத் தண்டித்து திரும்புமாறு ஆணையிட்டார். வீரபத்திரன் தக்கன் யாக சாலையை அடைந்து அங்கிருந்தாரை எல்லாம் விரட்டி அழித்து, கடைசியில் தக்கன் தலையைப் பற்றி இழுத்து, அவன் தலையைச் சீவி நிலத்திலே எறிந்தான். இந்த நிலையில் பிரமன் தோன்றி தேவர்களைத் தக்கபடி தண்டித்தாகி விட்டது. யாகம் அழிக்கப்பட்டது. இனி சாந்தம் கொண்டு ஈசனிடம் திரும்புமாறு பிரார்த்தித்தான். மேலும், தேவர்களை மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டார் பிரமன். தேவர்களும் அவ்வாறே சிவனாரை அணுகி தங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்ள, அவரும் இறந்தவர்களை எல்லாம் உயிர்ப்பித்து மன்னித்தருளினார். தக்கனும் சிவபெருமானை வலம் வந்து நெஞ்சம் உருக பிரார்த்திக்க, அவனை மன்னித்து கணங்களின் தலைவனாக்கினார். 


தொடரும்🙏🙏

Wednesday, July 8, 2026

பித்ரு சாபமா கர்ம பலனாக

 பித்ரு கர்மா

 அந்தணர்கள் ஆரம்பித்த வணிக நோக்கம்.

 பணம் சம்பாதிக்க வழி.

  இதை உணராமல் 

   16 பேருக்கு தானம் 20 பேருக்கு தானம்

 என்று இறந்த ஆத்மா சாந்தி என்று அறிவால் சம்பாதிக்க வழி.

  அப்பா வை அடித்தவன்

அம்மாவை அறைந்தவன் 

 எல்லாம் பல லட்சங்கள் ஊர்ப் பெருமைக்கு 

சடங்கு.

 பணம் இல்லாதவன்  எல்லாம் பெற்றோர் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

தானம் செய்ய வசதியில்லை என வருந்தி வாழ்த்துவது தாய் தந்தை நெஞ்சம்.

இந்த அந்தணர் ஏமாற்றுவதற்கு 

 கர்ம பலன் அந்தணர் அனுபவிப்பது

 கண்கூடு.

 அந்தணர் என்போர்  பொருளாசை விரும்பாதோர்.

ஐந்து லட்சம் பத்து நாட்கள் காரியம் தக்ஷ்ணை.

 இந்த பணம் இல்லாதவன்

பெற்றோர் ஆத்மா சாந்தி அடையாது என்பது  ஒரு பயமுறுத்தல்.

 ஏழை பெற்றோர்கள் 

 வாழ்த்துவார்கள்.

 இந்த அந்தணர் இனம் பணம் பணம் புரோகிதம் அழியும்.

  இதை அறிய சிறப்பு ஞானம் வேண்டும்.

 நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் 

 நமது கர்மவினைகள்  தான்.

 முன்னோர்கள் ஆத்மா சாபம் கிடையாது.

 சர்ச் தோசம் குழந்தை பாக்கியம் இல்லை என்ற  சோதிடர் கருக்கலைப்பு பாவம் என்று ஸ்ல சொல்வதில்லை. 

 கர்ம பலன் தான் நாம் அனுபவிப்பது.

அது பூர்வ ஜன்ம பலன்.

 இந்த ஜன்ம பலன் தான்.

தசரதர் புத்திர சோகம் அவர்  குருட்டு பெற்றோரின் குழந்தையைக் கொன்றது.

லிங்க புராணம்

 லிங்கபுராணம் 


பகுதி 24 


ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற பராக்கிரமத்தைப் பெற்ற ஜலந்தரன் வரங்கள் பெற்றவுடன் அகந்தை கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். இந்திரனை ஓடச்செய்து தேவர்களை வென்றான். அடுத்து அக்கினி, இயமன், நிருதி, வாயு, குபேரன் ஆகியோர்களை வென்று தன் வயப்படுத்திக் கொண்டதுடன் வைகுந்தம் சென்றிட, திருமால் கருடன் மீதேறி அவனுடன் போர் செய்தார். ஆனால், அசுரனை ஈசன் ஒருவனாலேயே அழிக்க முடியும் என்றறிந்து மாயையால் இருளைத் தோற்றுவித்து அந்த மாயையில் மறைந்து விட்டார். அடுத்து, அவன் பார்வை கயிலாயத்தின் மீது பட சிவனாரையும் எதிர்க்க முற்பட்டான். அப்போது சிவபெருமான், ஜலந்தரா, நீ சொன்னது அனைத்தும் சரியாக இருக்கலாம். ஆனால், நான் கண்கூடாகக் காணவில்லை என்று கூறித் தன் கால் கட்டைவிரலால் பரமேச்வரன் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அசுரனிடம் அதை எடுத்துத் தலைமீது வைத்து அவன் பிரதாபத்தை நிரூபிக்குமாறு சொன்னார். அவன் மிகவும் ஏளனமுடன் இலகுவில் வட்டத்தைப் பெயர்த்து விட்டான். ஆனால், அதை மேலே உயர்த்துவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் முயற்சி செய்து அதனைக் கழுத்துக்கு நேராகக் கொண்டு வர, அது சக்கராயுதமாக மாறி அவன் கழுத்தைத் துண்டித்தது. அசுரன் உடல் பூமியில் சரிந்தது. அவனுடைய மனைவியர் அங்கு வந்து அவன் உடலை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினர். அப்போது சிவனார் அவர்களிடம், ஜலந்தரன் என் கையால் இறந்ததால் உத்தம லோகத்தை அடைந்துள்ளான் என்று கூறி அவனுடைய மனைவியர்களையும் அவனுடன் சென்று மகிழ்ந்திருக்குமாறு கூறி அருளினார். 

லிங்கபுராணம் 


பகுதி 25 


அரிக்குச் சக்கராயுதம் அளித்தல் ஜலந்தரன் மரணத்துக்குப் பின் அவனுடைய புதல்வர்கள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர முற்பட்டனர். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அப்போது பரந்தாமன் சிறிது காலம் பொறுத்திருங்கள். நான் ஈசனைக் குறித்துத் தவம் செய்து ஜலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தை அவரிடமிருந்து பெற்று வருகிறேன் என்றார். திருமால் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய முற்பட்டார். முடிவில் ஒரு மலர் ஈசனால் மறைக்கப்பட்டு விட்டதால் குறைந்தது. அப்போது அரி தன் கண் மலரை எடுத்து ஈசன் திருநாமம் கூறி அர்ச்சனையை முடித்தார். அப்போது சிவனார் தோன்றி அவர் பக்தியை மெச்சி, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார். அப்போது திருமால் மறுபடியும் அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வருவதால் ஜலந்தரனை அழித்த சக்கராயுதத்தை அளித்து, அதன் மூலம் தேவ சத்ருக்களை ஒழிக்கும் வலிமையை அருள்புரியுங்கள் என்று வேண்டினார். ஈசனும் அவ்வாறே சக்ராயுதத்தை அளித்து ஆசி கூறினார். மேலும், தனக்காக அர்ப்பணித்த கண் மலரையும் திரும்பி அளித்தார். ஈசன் அளித்த சக்கராயுதத்தால் மாதவன் அசுரர்களை வென்று தேவர்களின் துன்பங்களை நீக்கி அருளினான். 


தொடரும்🙏🙏

தொடரும்🙏🙏