இனிய காலை வணக்கம்.
இறைவணக்கம்.
ஆலயங்கள் எண்ணிக்கை.
பெருகுகின்றன.
ஊழலும் லஞ்சமும்
அதிகரிக்கின்றன.
நீதிமன்றம்
தீர்ப்பை அரசே மதிக்கவில்லை .
காவல்துறை
அரசியல் வாதிகளின் அடிமை.
கல்வி ஊழல்.
ஆலயம் பெருகி பயன் இல்லை.
ஒழுக்கம் பணத்திற்கு முன்
ஒழிக்கப்படுகிறது.
விநாயகர் ஆற்றங்கரை
பிரம்மச்சாரி.
அவருக்கும் மனைவிகள் உண்டு.
அனுமானுக்கும் குழந்தை உண்டு.
பீஷ்மருக்கும் உண்டு.
ஆன்மீகம் என்பது
மன சஞ்சலம் போக்க வேண்டும்.
ஐயமின்றி வழிபாடு செய்யவேண்டும்.
அந்த தரிசன வரிசையில் எத்தனை ஊழல்.
ஏற்றத்தாழ்வுகள்.
நெற்றித் திலகத்திலும் சண்டை.
வெறுப்புப் பார்வை.
சமதர்ஷி பகவானின் லீலை அதிசூக்ஷ்மம்.
வினைப்பயன் !!!?
சிந்தித்து சத்திய மார்க்கத்தில்செல்லவேண்டும்.
பன்றியும் சிங்கமும் ஒன்றாகாது.
ஊர்க் குருவி பருந்து ஆகாது.
தலை எழுத்துப்படி தான் மனிதன் வாழ்கிறான்.
No comments:
Post a Comment