ஓம் முருகா.
காலை வணக்கம்
கடவுள் வணக்கம்.
மனம் சஞ்சலமானது.
மன ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் உலகியல் இன்பங்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது அஞ்ஞானம்.
அந்த அஞ்ஞானத்தால் தான் மனிதன் துன்பங்களை அனுபவிக்கிறான்.
மனம் போன போக்கில் போகவேண்டாம்.
என்பது ஔவையார் வாக்கு.
மனம் அனைத்திற்கும் ஆசைப்படும்.
ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறாத நிலை
ஏற்படும் போது இறைவனை வழிபடுவதும்
தான் தான் என்ற மமதை கொள்வதும்
அறியாமை முடியாமை தெளிவின்மை யின் உச்ச கட்டம்.
விரலுக்கும் தகுந்த வீக்கம்.
வரவிற்கேற்ற செயல்.
இறைவன் மீது முழு சரணாகதித்துவம்
மன அமைதியைத் தரும்.
நரி சிங்கமாக முடியாது.
ஊர்க் குருவி மருந்தாக முடியாது.
அவ்வாறே மனிதர்களை ஆண்டவன் அறிவு அறிவற்ற
நலம் பலமற்ற
பணம் அற்ற
பணம் இருந்தும் அமைதியற்ற
பணமின்றி மகிழ்ச்சி உள்ள
பல வித சூழலில் மனிதன் படைக்கப்படுகிறான்.
ஆண்டவனால் ஆட்டிவைக்கப்படுகின்ற மனிதன்
தன் முயற்சியால்
வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும்
தானாகவே முயற்சியின்றி
வெற்றி பெறும் நிலையிலும் ஆண்டவன் உண்டு. என்ற மன உறுதியில் கடமைகளைச் செய்தால்
சுகமாக இன்னலின்றி இன்பமாக வாழலாம்.
இதில் ஐயப்பாடு கூடாது.
சர்வமும் சர்வேசன் செயல்.
எஸ். அனந்த கிருஷ்ணன்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
பகவத் பக்தன்.
No comments:
Post a Comment