இனிய காலை இறைவணக்கம்.
ஏற்றம் தருபவன் இறைவன்.
எங்கும் நிறைந்து உள்ளவன் இறைவன்.
மனிதன் மனதில்
உதவும் எண்ணம் அளிப்பவன் இறைவன்.
நல்லதையும் படைத்து
தீயவையும்
படைத்து
மனிதனை
சிந்திக்க
வைப்பவன் இறைவன்.
ஞானம் தந்தவன் இறைவன்.
இருந்தாலும்
ஞான சூன்யமாக
அகங்காரம் காமம் பேராசை சுயநலம்
மனித இனத்திற்கே
இன்னல் தருபவை.
அறிந்தும் தெரிந்தும்
புரிந்தும் பட்டறிவு இருந்தும் தவறு செய்வதால் தண்டனை
இன்னல்கள்.
ஊழல் செய்வதும்
கையூட்டு பெறுவதும்
ஆனந்தம் என்றால் அது நிரந்தரமல்ல.
அதற்கு பல குடும்ப சூழ்நிலைகளை ஆராய்ந்தால்
புரியும்.
ஆகவே அறிவுக் கண் பெற்ற மனிதன் தான் அழிவது நிச்சயம் என்பதை நினைவில்
கொண்டு கீதாசாரியன்
சொல்வது போல்
ஆண்டவன் நமக்களித்த
ஆற்றலை அறிந்து
முன்னேற்றம் அடையவேண்டும்.
குரல் வளம் ஆண்டவன் அளிப்பது.
நானும் எஸ்.பி.பி
லதாமங்கேஷ்கர்
ஆக முயற்சி செய்யலாம்.
ஆனால் குரல் இனிமை ஆண்டவன் அளிப்பது.
காகம் குயிலாக முடியாது.
இது தான் இறைவன் சூக்ஷ்மம்.
மனிதன் சிங்கமாக லாம்.
சிங்கம் மனிதனாக முடியாது.
மனிதனுக்கு நரி குணம் இருக்கலாம்
நரிக்கு மனித குணம் வராது.
மனிதன் அட்டை போல் உறிஞ்சலாம்.
அட்டை மனிதனாக முடியாது.
மனிதன் விலங்குகளுடன் ஒப்பிடப்படுகிறான்.
கயல் விழி என்பது போல் மனித விழி என்று சொல்ல முடியாது.
அனைத்து குணங்களும் உடையவன் மனிதன்.
அவனால் சிங்கம் போலஷகர்ஜிக்க முடியும்.
சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.
சிவாஜிகணேசன் குரல் சிங்கத்திற்கு ஒப்பிட முடியாது.
இது தான் இறைவனின் ஞானம்.
சிந்திக்க சிந்திக்க
மனிதன் தான் இறைவன் படைப்பில் உயர்ந்தவன்.
மனிதன் தான் தாழ்ந்தவன்.
உயர்வதும் தாழ்வதும்
மனிதன் எண்ணங்களால்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இயற்கை குணம்.
குரல் சிந்தனை.
அப்பா போல் மகனின் தோற்றம் இருக்கலாம்.
குணம் நடத்தை இருக்காது.
அதைத்தான்
அப்பா முசுடு.
மகன் நல்லவன்.
மகன் மோசம்
அப்பா நல்லவர்.
இதெல்லாம் இறைவனின் படைப்பு.
No comments:
Post a Comment