Wednesday, August 22, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் -1

          ஹிந்து சமுதாயத்தில் பக்திக்கு
  மிகவும் மகத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து படைப்புகளும் பகவானின் எல்லையற்ற
 லீலையின்   ஒரு சிறு பகுதி தான்.
 இந்த கருத்துப்படி அனைத்தும் இறைவனின்
கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்று
பக்தியில் ஈடுபட்டு தன்மயமாகி   சுகத்தைப் பெறுகிறான்.

நாரதரைத்தான் நாம் பக்தியின் ஆதி  மனிதன் என்று ஏற்கிறோம் .
 அவர் விஷ்ணு  பக்தர். திரிலோகசஞ்சாரி .
மூன்று உலகங்களிலும் இறைவன் புகழ்பாடி
அதிலேயே ஆனந்தம் அடைபவர்.
  பக்தி உணர்வில் எவ்வித வேறுபாடும்  இல்லை.
எல்லா அசையும் அசையா படைப்புகளில்
கடவுளை உணர்வுதான் பக்தி. 
நடப்பதெல்லாம் இறைவனின்  விருப்பப் படியேதான்  நடக்கும்.
எல்லா உயிரினங்களுக்குள்ளும் பரமாத்மா  வாழ்கிறார்.
பக்தனின் உணர்வில்  அனைத்துமே அவன் வடிவமே.
கடவுள் மேல் பக்தி இருந்தால் எந்தவேறுபாட்டையும்
மனித மனம் ஏற்காது, சிறியவன் -பெரியவன் ,பணக்காரன் -ஏழை ,நகரத்தான் -கிராமத்தான் ஹரிஜன் -பிராமணன் 
அனைவருமே பகவானுக்கு முன்   சம மே .

No comments: