Wednesday, August 22, 2018

பக்தி உணர்வும் சமுதாயமும் -2.

நமது நாட்டில் ஆயிரக்கணக்கான
 ஆண்டுகளாக பக்தர்களின் நீண்ட
 சங்கிலித் தொடர் பரம்பரை
வந்து கொண்டிருக்கிறது. 
இதில் எல்லா ஜாதியைச்
சார்ந்தவர்களும் ,
இனத்தவர்களும் ,
எல்லா மொழியினர்களும்
வருகின்றனர்.
நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் ,
ராமானுஜாச்சாரியார் ,வல்லபாச்சாரியார் ,
நரசி மேத்தா ,
கபீர் ,ரைதாஸ் ,சங்கர் தேவ் ,
சைதன்ய மஹாப்ரபு ,
மீராபாய் ,ஆண்டாள்,சூரதாஸ்,
ஞானேஸ்வர் ,துக்காராம் ,பஸ்வேஷ்வர் ,
புரந்தரதாசர்,கம்பன்  முதலியோரின்
சங்கிலித்தொடர் பிரிக்கமுடியாதது.
இந்த பக்தி அடியார்களின்
இலக்கியத்தில் ஜாதிக்கு இடம்
எதுவுமே கிடையாது.
மீரா  ரைதாசின்  பக்தை  ஆனது
உயர்குல -தாழ்குல வேறுபாடற்றது.
ரஸ்கான்  முஸ்லிமாக இருந்தாலும்
 ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்.
அநேக ஆழ்வார்களும்
 நாயன் மார்களும்
 கீழ் ஜாதியினராக இருந்தும்
தன்  பக்தி மகிமையால்
 வணங்கத்தக்க சான்றோராக
 விளங்கினார்கள்.
விளங்குகிறார்கள்.
பக்தி மார்கத்தில் நாம ஜபம் ,
நாம சுமரினை மகத்துவம் நிறைந்தது.
வேதகாலத்தில் இருந்தே ஜெபத்தின் மகத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் .
சத்யுகத்தில் தியானம்,
திரேதா யுகத்தில் வேள்வி ,
துவாபரயுகத்தில்
பூஜை  மூலம்  கிடைப்பதெல்லாம் ,
கலியுகத்தில்
இறைவன் நினைத்தால்
  ஹரி கீர்த்தனை செய்தால்
 கிடைத்துவிடுகிறது  என்று
விஷ்ணுபுராணத்தில்
 சொல்லப்பட்டிருக்கிறது.
கலியுகத்தில் யோகம்,ஞானம் ,
பக்தி  ஆகியவை அறிய வேண்டியதில்லை .
ராமரின் புகழ் பாடுவதே ஆதாரம் .
கடவுள் பெற கர்மம்,யோகம், பக்தி ,ஞானம்  தேவை.
ஆனால் சாமான்யனுக்கு நாம ஜபம் எளிது.
ஆகையால் சாதுக்கள் நாம ஸ்மரினை,
பெயர் ஜபம் செய்து ,
தங்களைத் தொடர்பவர்களையும்
நாம ஜெபத்திற்கு உபதேசம் செய்தனர்,
 

No comments: