Thursday, August 30, 2018

ஹிந்துமதமும் சமுதாயஉணர்வும்.

 சாதுக்கள்   மூலம்
சமுதாய பண்பாட்டில்
புது விழிப்புணர்வுகள்.:--
     கடந்த  ஒரு  ஆயிரம் வருடங்களாக
 பாரதநாட்டில்  சாதுக்களின் பரம்பரை
சமுதாயத்தில் புதிய விழிப்புணர்ச்சி
 ஏற்படுத்தியது .  இதில் பக்தியின்
 மகத்துவத்துடன்  ஒதுக்கி வெறுக்கப்பட்ட
மக்களின்  சமுதாயத்தின் வேதனைகளையும்
அவர்களுடைய மனவிருப்பங்களையும்
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  பக்தியின்  பெயரால் ,மதத்தின் பெயரால்
சமுதாயத்தில் நடக்கும் போலிநாடகங்கள் ,
கொடுமைகள் ,தீய முறைகள் 
ஆகியவற்றிற்கு எதிராக
சாதுக்கள் உறுதியாக எதிர்த்தனர்.
மனிதர்களை வேறுபடுத்தும் பொய்யான
சுவற்றை இந்த சாதுக்கள் தகர்த்தெறிந்தனர்.
மனித மேலும் சமுதாய மதிப்புகளை ஸ்தாபிக்க
வலிமையூட்டினார்கள் .
சமத்துவம் , உறவுமுறைகள், அன்பு ,
கடவுளின் ஆட்சி அதிகாரம்  ஆகியவற்றை
விளக்கினார்கள் . இவர்கள் சாதனையாளர்கள்.
சீர்திருத்தவாதிகள். சாதுக்களின் குணம் மிகவும்
சாந்தமானது.
 

No comments: