Friday, August 10, 2018

மன நிம்மதி

மனித மனம் இறைவனையே துதித்தாலும் இறையச்சம்
இருந்தாலும்
நேர்மை யாக இருக்க

இறைவன் முன் உறுதிமொழி
எடுத்தாலும் அது உலகியல்
மாயை முன் பிரசவ வைராக்கியம் ஆகி
விடுகிறது .
வலி பிரசவ வலி தாங்காமல்
மனைவி துடிப்பது கண்டு
கணவனும் மனைவியும்
இனிமேல் குழந்தை வேண்டாம்
என்று சபதம் எடுத்தாலும்
அந்த சபதமும் வைராக்கியமும்
அந்த வலி வேதனையும் மறந்து
குழந்தைக்கு ஆசை . அடுத்த சில
மாதங்களில் .

மயான வைராக்கியம் தலைவரோ , நண்பரோ ,
உறவினரோ இறைவனடி சேர்ந்த பின்
இதுதான் வாழ்க்கை .
இருக்கும் வரை நேர்மையாக, ஊழலின்றி இருக்க உறுதி மொழி பூண்டாலும்
கையூட்டு ,மீண்டும் ஊழல் , பொய்யான
வாக்குறுதி என்றே உலகியல் வாழ்க்கை.
இப்படியே நாம் உலகியல் ஆசை பந்தங்களில்
நடுநிலை தவறி , வாக்கு தவறி , நேர்மை தவறி ,
சத்தியம் விடுத்து இறைவன் மேல் உள்ள பயம் மறந்து, அவனால் தரும் உடல் , நோய் , மனக்கஷ்டம் , பதவி ,பொருள் , அதிகாரம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து மடிகிறோம் .


நமக்கு வரும் இன்னல் கள் , நோய்கள் ,வறுமை ,வெறுமை , இன்பங்கள் , துன்பங்கள் ,
அனைத்திற்கும் வினைப் பயன் தான் காரணம் .
நிச்சயம் நாம் நமது தீய செயல்கள் மறந்து உணர்ந்து திருந்தி வாழ்ந்தால் வையகம் புகழும் . நம் சுற்றத்தார் புகழ்வர்.
நமக்கு வேண்டியது இது தான்
இறைவன் மீது பக்தி ,இறைவன் இன்னல் தருவான் என்ற எண்ணம் ,
இறைவன் மீது முழு நம்பிக்கை .
தவறான செய்கை, தவறான பொருள் சேர்க்கை ,

தவறான பதவி உயர்வு , தவறான பதவி , அதிகார துஷ்ப்பிரயோகம் தனிமையில் மகிழ்ச்சியோ , நிம்மதியோ , உண்மையான மன அமைதியோ , மன நிறைவோ தராது. மனிதர்கள் மனமகிழ்ச்சியுடன் ,மன நிறைவுடன் , இன்னலின்றி வாழ பக்தி மார்க்கமே சிறந்தது. அதை நூறு சதவிகிதம் கடைபிடிக்க வேண்டும். அந்த மதிப்பெண் அவன் போட்டு சுகமோ ,துன்பமோ ,மகிழ்ச்சியோ தருவான்.

No comments: