Wednesday, August 29, 2018

சமுதாயசமரச உணர்வும் நமது ஹிந்து மதமும்

சமுதாயசமரச உணர்வும் நமது  ஹிந்து மதமும்

      சர்வேஸ்வரன்  கடல் போன்றவன் .
 ஆனால் சாதுக்கள் மேகத்தைப் போன்றவர்கள்.  சமுத்திரத்தில் அதிக தண்ணீர் இருக்கிறது .
ஆனால்  தாகம்   தணியாது.
 விவசாயத்திற்கும் பயன்படாது .
ஆனால்  சமுத்திரத்தின் தண்ணீர்
மேகமாக மாறினால்  நன்நீராக  மாறிவிடுகிறது.
அப்பொழுது அகிலம் முழுவதும் வாழ
மழையாகப் பொழிகிறது.
 சாதுக்களின் மனம் வெண்ணெய் போன்றது
சிறிது  வெப்பம் பட்டாலே உருகிவிடும்.
யாராவது சிறிது வேதனைப் பட்டாலும்
அவர்கள்  மனம் உருகிவிடுகிறது.
 சாதுக்கள் அன்பு மழை  பொழிகிறார்கள்.
அறிவு மழை  பொழிகிறார்கள்  என்று துளஸீதாஸர் சொல்கிறார்.

 எந்தவித பயனும் எதிர்பார்க்காமல் கடவுளிடம் அன்புசெய்கிறவர்களும் ,எந்தவித  உலகியல் ஆசைகளும் இல்லாதவனே , சாது என்று கபீர்  சொல்கிறார்.
சாதுக்கள் ஒரு புனித ஸ்தலத்தைவிட  அதிகம் மகத்துவமுடையவர்கள்  என்று பக்தரான பலட்டு

சொல்கிறார்.  சாதுக்கள் நோக்கில் எல்லா
உயிரினங்களுமே  சமம்தான். அவர்களுக்கு தீங்கிழைப்பவர்களையும்  நல்லது செய்பவர்களையும்
சமமாகக் கருதுவர். எப்படி இரண்டுகைகளிலும் அள்ளிய மலர்கள் வடது -இடது அறியாதோ
அவ்வாறே சாதுக்கள் நல்லவர்கள்
கெட்டவர்கள் என்ற பேதம் பார்க்கமாட்டாட்கள்.







No comments: