Wednesday, August 29, 2018

இறையருள் இன்பம் வேண்டும்

காலை வணக்கம்
கடவுள் வணக்கம் .
காக்கும் கடவுள் இன்றைய எண்ணங்கள்
வெளிப்பட எனக்களித்த அறிவு.
கடவுள் /பகவான்/குதா/
காக்கவேண்டும் என்றால்
கருணை பெறவேண்டும் என்றால்
கடவுள் உள்ளிருந்து ஆற்றல்
அளிக்க வேண்டும் என்றால்

ஆத்ம திருப்தி , ஆத்மசந்தோஸம்
அடைய வேண்டும் என்றால் ,
அகில உலகம் சுகம் பெற வேண்டும் என்றால்
தனிப்பட்ட வாழ்வில்
ஏகாந்தத்தில் மகிழ்ச்சி வேண்டும் என்றால்
வேண்டும் இறையருள் .

புராணங்கள் வரலாறு அறிந்தால் போதாது.
வள்ளுவர் சொன்னபடி
கசடு அறக் கற்று ,
அறிந்து உணர்ந்து அதன்படி
அறநெறி ,அன்பு நெறி,சத்திய நெறி ,
அஹிம்சை நெறி , நியாய நெறி
வாழவேண்டும்.
தசரதரும் அழுதே இறந்தான் .
,ராமரும் துன்பத்திலே
கிருஷ்ணருக்குத்
தன் தாய் அரவணைப்பு
கிட்டவில்லை.
அவர் மரணமும் பாவத்தின் தண்டனையே.
புவியில் நிலை பெற்றோர் ,
பக்தர்களே!
அனைத்தும் துறந்த பக்தர்களே.
புவியாளும் அரசர்களில்
ராமா கதை சொல்லுதல் என்றால்
ராம் கஹானி கஹ்னா என்றால்
துன்பக் கதை சொல்லுதல் என்பதே
மரபுத் தொடர்.
பக்த தியாகராஜர்,கபீர்,புத்தர்,
மத்வாச்சாரியார் ,சங்கராச்சாரியார்,ராமானுஜர் ,
ராமானந்தர் அனைவரும் இன்றும்

எடுத்துக்காட்டும் மகான்கள் என்றால் ,

ஜாதி மத பேதமில்லா சமுதாயம்
தொழில் தர்மம் அமைத்தவர்கள்.
ராமானந்தர் மதம் மாறிய இந்துக்களை
தாய்மத்தத்திற்கு மாற்றியவர்கள்.
சிவத்துள் ஹரியும் ஹரியுள் சிவனும்
காத்தலும் அளித்தலும் அழித்தலும்
இன்னலும் இன்பமும் அளிக்கும் நீதியும்
கோவணாண்டியின் மகிழ்ச்சியும்
கோடீஸ்வரனின் இன்னலும் கண்டுணர்ந்து
நேர்வழியில் ,சத்தியவழியில் சென்றே
சாதனைகள் புரியவேண்டும். இறையருள் இன்பம் வேண்டும்.

No comments: