Monday, August 20, 2018

சமுதாய சமரசமும் நமது நாட்டு சாதுக்களும்

சமுதாய  சமரசமும் நமது  நாட்டு சாதுக்களும்

நமது  நாட்டில்  அந்நிய ஆட்சியில்   மக்கள் அச்சமும் பீதியும்  அடைந்து வருத்தமும் துன்பமும்  அடைந்த போது பாரத பக்தி ஓட்டமும் ,சாதுக்களும்
சமுதாயத்தில்  புதிய வாழ்க்கையை  ஆரபித்தன. இடைக்கால பக்தி  இலக்கியங்களும் ,காவியங்களும் ,சாது இலக்கியங்களும் காலத்தை வென்று
இலக்கிய ஒழுக்கத்தை   உணரவைத்துக் கொண்டிருக்கின்றன.இந்த  சாதுக்களின் உலக அறங்களும் மனிதநேய  பங்களிப்பும் எண்ணக்கூடியதும்
சிந்திக்கக் கூடியதும்  ஆகும். சாதுக்கள் இடைக்கால  சமுதாயத்தில்
பரவியிருக்கும்  மாற்றங்கள், ஜாதி- சம்பிரதாய அடிப்படையில்   சமுதாயத்தில் ஏற்படும் வீழ்ச்சி முறைகள், பிரிவினைஏற்படுத்தும்   மாற்றங்களை கடுமையாக விமரிசித்து அறைகூவல் விடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்த ஜாதி -சம்பிரதாய வேறுபாட்டை மிகைப்படுத்தி திட்டமிட்ட சூழ்ச்சி மூலம் தாழ்த்தப்பட்ட  இனம் என்று சொன்ன சம்பிரதாய மக்களை சமுதாயத்தில் இருந்து பிரித்து மதம் மாற்றம் செய்வித்தனர். அதன் காரணமாக  இன்றைய சூழலில் எல்லா சாதுக்களின் இலக்கியங்களும்
புதிய தூண்டுதல்கள்  அளிக்கும் திறனைப் பெற்றுள்ளன..கபீரின்  எதிர்ப்புக்குரல் ஜாதி வேறுபாட்டின் அடிப்படை ஆதாரங்கள்,,போலிகள்,மற்றும் தீண்டாமை எதிர்ப்புகள் , துளசி ராமாயணத்தில் அரசகுடும்பத்தைச்  சேர்ந்த
ராமர் படகோட்டி குகனை   அரவணைத்தல் ,கோல்,கிராத்து ஜாதி களிடம்  கிழங்கு வாங்கி சாப்பிடுதல், சபரியின் எச்சில் இலந்தைப்பழம்  வாங்கி சாப்பிடுதல் , அவர்களிடம் ஜாதி பற்றிய கேள்விகளோ சிந்தனைகளோ இல்லை. இவைகளுக்குப்பின் எழும் குரல்  மனிதர்களை மையமாக வைத்து
மனிதத்தன்மை ,மனித நேயத்தை ஆராதிப்பதே.  சாதுக்கள் மஹான்கள் கூறிய
ஒற்றுமை ,மனிதநேய கோட்பாடுகளை வேள்வி ,பூஜை செய்ப்பவர்கள் தலித் என்று வெறுக்கப்பட்ட நிலையும் மனிதநேயத்தின் சுவாபிமானதாக நிலைத்து விட்டது.

No comments: