Sunday, August 26, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் ஸ்ரீ ராமானந்தர் --9

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்  ஸ்ரீ  ராமானந்தர் --9

            அனைவருக்கும்  பக்தி சாதனையின்
அதிகாரமும் உரிமையும்  இருக்கிறது.

   ஸ்ரீ ராமானந்தர்  பக்தியின்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல ,
சமுதாய ஒற்றுமைக்கும்
மறக்கமுடியாத தொண்டாற்றியுள்ளார்.
  சமுதாயத்தின் உயர்ந்த -தாழ்ந்த ஜாதி
 உணர்வுகள்   அறத்திற்கும் மதத்திற்கும்
எதிரானது என்றார்.
 கடவுளின் பிரார்த்தனைக்கு
அனைவரும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
கடவுளிடம்  சரணாகதி அடைவதற்கு
அனைவருக்கும் அதிகாரமும் உரிமையும் உண்டு.
உயர்ந்த தாழ்ந்த ஜாதி என்று இறைவனுக்கு வேறுபாடு கிடையாது.
 சுவாமி ராமானந்தர்  கூறுவார்--யாருமே ஜாதியைப்பற்றி
கேட்காதீர்கள். "பகவான்  ஹரியை பஜனை   செய்பவர்கள்
யாராயிருந்தாலும்  ஹரியே " என்பார்.  அவர் உபன்யாசம் மட்டும் செய்யவில்லை 25000  சீடர்களைக்கொண்ட
மிகப்பெரிய சிஷ்யர்கள்  பரம்பரையை உருவாக்கினார்.
அனைத்து ஜாதியினருக்கும் குருமந்திரம் அளித்து தீக்ஷை வழங்கினார்.  பக்தியின் மூலம் சமுதாய மாற்றத்திற்கான புதிய  யுகத்தின் தலைமுறையை உருவாக்கினார்.
அவ்ரசீடர்களில்   அனந்தானந்தா ,சுகானந்தா,நரஹரியானந்தா,யோகானந்தா  அனைவரும் பிராமணர்கள்.சந்த்  பீப்பா -க்ஷத்திரியர்,சந்த்  கபீர் -நெசவாளி ,சந்த்  சேன் -சவரத் தொழிலாளி,சந்த்  தன்னா -ஜாட் ,பக்த ரைதாஸ் -சக்கிலியர்.அவரின் சிஷ்யைகள் பத்மாவதி, சுரசரி .
கடவுள் பக்தர்கள் அனைவரும் சமம் என்றார் .




No comments: