Saturday, September 8, 2018

கபீர்தாஸ் -3

     பகவானின் பெயர் அச்சமற்ற பதவியைத் தருகிறது.
அவர்  தன்னை முஸ்லீம் என்று சொல்லாமல்  நெசவாளி என்றே  தனது தோஹே (ஈரடியில்) குறிப்பிடுகிறார்.
அவர் வளர்ந்த குடும்பம் சூழல் யோகா மதத்தைச் சார்ந்தது.
கபீர் தானே யோகாவில் நிபுணர். யோகக்கலையில்  சிறந்த
வித்வான்.  அவதூதர். யோகா சாதனை புரிந்தவர். குண்டலினி விழிப்புணர்ச்சி பெற்றவர். எளிய இயற்கையான  சமாதி  நிலையில் விரிவான   விவாதம்  தன்  இலக்கியத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.  அவர் முழு கவனமும் கடவுள் பக்தியிலேயே  மூழ்கியிருந்தது.  கடவுளின்  அன்பு  என்பதை
அறிந்தவன்தான் பண்டிதன்.  பெரிய பெரிய நூல்கள் படிப்பவன் பண்டிதனல்ல .இரண்டரை எழுத்து ப்ரேம்  என்ற அன்பு. அதை அறிந்தவன் தான் அறிவாளி . 

No comments: