Saturday, September 1, 2018

ஹிந்து சமுதாயமும் மத உணர்வுகளும்

  வேதங்களின்  பாடல்களை மந்திரம் என்றே சொல்கிறார்கள்.இந்த வேதமந்திரங்களை
சரியாக உச்சரிக்கவில்லை என்றால்  தவறான பொருளால்
பாவங்கள் உண்டாகும். bavam /பாவம்  இரண்டுக்கும் அர்த்தத்தை அறிந்து உச்சரிக்கவேண்டும் .
இந்த சாதுக்கள் /பக்தர்கள் மக்களுக்கிடையில் உபன்யாசம் செய்து  பக்தி உணர்வை ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களுக்கு  சம்ஸ்கிருதம் தெரிய அறிய வாய்ப்பில்லை.அவர்களுக்கு சம்ஸ்கிருதம்  கற்பிக்க யாரும்
தயாராக இல்லை.
 இந்த சாதுக்களும்/பக்தர்களும்  தேவமொழியை   பயன் படுத்தாமல்  மக்கள் மொழியில் ஆன்மீக உபன்யாசங்கள் செய்தனர். அவர்கள் தங்கள் இலக்கியத்திற்கு வடமொழியைப் பயன்படுத்தவில்லை.அதிக மக்களின் வழக்கு மொழியில்  ஆன்மீக இலக்கியம் எழுதினார்.
அவர்கள் எளிய நடையில் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,மராட்டி,குஜராத்தி ,போஜ்புரி, ஒரியா,அசாமி ,வங்காளம்,
போஜ்புரி ,அவதி ,விரஜ் ,ராஜஸ்தானி மொழிகளில்
இலக்கியம் படைத்து ஆன்மீக  அறிவைப் புரிய ,அறிய,தெளிய வைத்து  பக்தர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். வட்டாரமொழிகள்,பேச்சு மொழிகளில்,நாடோடிப்பாடல்களில்  பக்தி பாமரர்களை
பரவசமடையச்செய்தது. இவை அனைத்தும் ஹிந்து மதத்தத்துவங்கள் ,கோட்பாடுகள்,பக்தியின் சிறப்பு
ஆகியவைகளை அறிய  ஒளிவிளக்காகியது .
கபீர் தாசர்  சம்ஸ்கிருதத்தை கிணற்று மொழி என்கிறார்.
அதை எளிதாக எடுத்து அருந்தமுடியாது. வட்டாரமொழிகள்.பேச்சுமொழிகள்  ஆற்றுநீர் போன்றது.
அதை எளிதாக அருந்தி அறிவுபெறலாம் என்கிறார் .

No comments: