Tuesday, September 11, 2018

ஸ்ரீ கிருஷ்ணபக்தர் ஸ்ரீ வல்லபாச்சாரியார்.1


ஸ்ரீ  வல்லபாச்சாரியார் அவர்கள்  வாழ்ந்த  காலம் கி.பி.1478 முதல் 1585 வரை . விக்கிரமி வருடம் 1 535 இல் இருந்து  1642 வரை.  அவர் பிறந்த இடம் பற்றி அதிக கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் வாரணாசி அருகில் என்றும் சிலர் பீஹார்  மாநிலத்தின் சம்பாரன்  ஜில்லா  என்றும் கருதுகிறார்கள் .
அவர் காலத்தில்   இஸ்லாமியரின் படையெடுப்பும் ஹிந்து ஆலயங்கள்  அனைத்தையும் அழித்த  நிகழ்ச்சியும் ,அவர்களுடைய காட்டுமிராண்டித்தனமும் அதிகமாக இருந்தன.  ஹிந்துக்களை முஸ்லிமாக மாற்றும்  தீவீர
முயற்சிகள் நடந்துவந்தன .
   இந்த கடின சோதனை காலத்தில்  வல்லபாச்சாரியார் நாடு முழுவதும் பயணத்தைத்   தொடங்கி  ஸ்ரீ கிருஷ்ண பக்தி பற்றி  பிரச்சாரம்  செய்தார்.  அவர் விரஜ்  தன்  பணியிடத்திற்கு  மையமாக்கினார்.  கோவர்த்தன க்ஷேத்திரத்தில்  ஸ்ரீ நாதருடைய ஆலயம் கட்டினார் .
அவர் "புஷ்டி மார்கத்தை பிரச்சாரம் செய்தார். புஷ்டி என்பதன் பொருள்   இறைவனின்  மேல் பக்தி செலுத்தி
அவரின் கிருபையை பெறுதல்.

No comments: