Sunday, September 9, 2018

தீண்டாமை வெறும் கற்பனை கபீர்தாசர்

   கபீர்   அச்சமின்றி  திட மனதுடன் சொல்கிறார் --தண்ணீர்  குடிக்கிறாய். அது ஜாதி பார்த்து தாகம்  தனிப்பதில்லை.
நீயும்  தண்ணீரிடம் உன் ஜாதி என்ன என்று கேட்டு குடிப்பதில்லை.   மண்ணில் எத்தனையோ பேர்  இறந்து கலந்து இருக்கின்றனர்.  இந்த  மண்ணில் கோடிக்கணக்கான யாதவர்கள் ,88 ஆயிரம் ரிஷிகள் கலந்து இருக்கின்றனர்.
ஒவ்வொரு அடியிலும் தேவதூதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கலந்துள்ள மண்ணில் நீ பாத்திரம் செய்கிறாய் . வீடுகள் கட்டுகிறாய். ஆற்று நீரில் மீன் ,ஆமை ,முதலை,உடும்பு அனைத்தும் பிரசவிக்கின்றன.அவைகளுடைய இரத்தம் தண்ணீரில் கலந்துள்ளது. பசுவின் பால் அதன் கொழுப்புடன் சேர்ந்து வருகிறது. நீ அந்த பாலை குடிக்கிறாய் .நீ தீண்டாமை கடைப்பிடிக்கிறாய்.
பூஜாரிகளே! இவை எல்லாம் பிரமை. ப்ரேமையல்ல.
இது உன்னுடைய சுயநல செயல். இது குறிகிய நோக்கம்.
  ஹிந்துக்களை இஸ்லாமியர்களையும் நேரடியாக தாக்குபவர் கபீர். தைரியமும் மன திடமும்  மன  வலிமையையும் கொண்டவர்.
  மற்றவர்களின் இன்னல் கண்டு உதவுபவனே
பரமபக்தன். அந்த இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கிறான். அந்த இறைவனின் நாமத்தை
மட்டும்  ஜபித்தால்  பிரம்மஞானம் கிட்டும்.
எனக்கு ராமநாம ஜபித்தால் போதும்.
மற்ற வேதங்கள், குரான் படிக்கவேண்டிய அவசியம் இல்லை.
என்கிறார் கபீர்.

No comments: