Friday, September 7, 2018

சாது கபீர்தாஸ் -1

   சாது  கபீர் படிக்காத மா மேதை.
சொல்லின் சர்வாதிகாரி.
அவர் 120  ஆண்டுகள்  உயிர் வாழ்ந்து

பக்தியில் ஒரு புரட்சியும் சமுதாய முன்னேற்றத்தையும்
கொண்டுவந்தார். அவர் வாழ்ந்த காலம் 1398 முதல் 1518 வரை கி.மு.., விக்ரமி  வருடம் 1455 முதல் 1575 வரை.
அவரது காலத்தில் தான் இப்ராகிம் லோடியின் படை எடுப்பும்  ,அவனின் பயங்கர கொடுமையும் நடந்தது.
    சாது  கபீர்  விசித்திரமானவர். அவர் தன்  கொள்கையில்
மிகவும் உறுதிவாய்ந்தவர். எதற்கும் அஞ்சாதவர்.
அவர் பார்த்ததை  யதார்த்தமாக எழுதுபவர்.
அவர் எந்த நூலையும் படிக்காதவர். நல்லவர் சேர்க்கையால் ஞானம் பெற்றவர். சாது கபீர் மத வெறியர்களின் போலித்தனம் ,கொடுமைகள், மூட நம்பிக்கைகள்,
ஜாதி-சம்பிரதாய  வேறுபாடுகள் ,வெளி ஆடம்பர பக்தி.
ஆகியவற்றை அச்சமின்றி சமுதாயத்திற்கு எளிய மொழியில் எடுத்துரைத்தவர். ஆனால் கடவுளின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்.  அவர் ஹிந்து-இஸ்லாம் தர்மத்தின் மூடப்பழக்கவழக்கங்களை  எவ்வித அச்சமின்றி  எடுத்துரைப்பவர்.
 அழகான மசூதி கட்டி ,தொழுகை என்ற பெயரில்
அதிக சத்தத்துடன் குரான் படித்தால் ,இறைவன் செவிடாகி
எதையும் கேட்காமல் இருந்து விடுவார் என்பார்.
ஹிந்துக்களின்  மூட நம்பிக்கையை எதிர்த்து  உருவ வழிபாட்டைக் கண்டித்து "கல்லாலான சிலையைப்
பிரார் த்தித்தால் , இறைவனின் அருள் கிட்டுமென்றால்
நான் மலையையே பிராத்தனை செய்வேன்.
ஆட்டுக்கல்-திருகைக் கல்லால் மாவு கிடைக்கும்
என்பார்.
மொட்டை அடித்தால்  இறைவன் வரம் அளிப்பான்  என்றால்
வைகுண்டம் கிடைக்கும் என்றால் முதலில்  செம்மறி ஆட்டிற்குத்தான்  வைகுண்டம் கிடைக்கும். அதன் ரோமம்
கம்பளியாகப்  பயன்படும். அடிக்கடி அது முடி வழித்துக்கொள்கிறது  என்பார்.
 அவருடைய  பக்தர்களில் ஹிந்துக்கள் ,சைவர்கள் ,வைஷ்ணவர்கள், இஸ்லாமியர்கள் ,சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர்.

No comments: