ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்-பத்து
தசரதர் தன் மனதில் கைகேயியை நல்ல மனம் படைத்தவள் என்று நினைத்து அன்புடன் ஆனந்தமாக
மென்மையான அழகான சொற்களுடன் ,"பெண்ணே!
உன்மனம் மகிழ்ந்துவிட்டது. நகரம் முழுவதும் ஆனந்தமாக வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் நாளையே ராமருக்கு யுவராஜ் பதவி கொடுக்கிறேன்.
ஆகையால் நல் விழியாளே! நீ மங்களப் பொருள்களை அலங்கரி. இதைக்கேட்டதும் அவளுடைய கல்மனம் உடையத் தொடங்கியது. பழுத்த வெயில் கொப்பளம்
உடைந்து விட்டது போல் இருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட வலியையும் கைகேயி சிரித்து சமாளித்தாள். திருடனின் மனைவி வெளிப்படையாக
அழமாட்டாள்.
அரசர் அவளுடைய கபடத்தையும் கெட்டிக்கார நடிப்பையும்
புரிந்துகொள்ளவில்லை.
காரணம் கோடி கொடுமைக்காரிகளின் தலைமை குரு
கூனியின் சிஷ்யை. அவள் சொல்லிக்கொடுத்தபாடம்.
அரசன் நீதியில் நிபுணராக இருந்தபோதிலும் பெண்களின்
நடத்தை மற்றும் குணத்தின் ஆழத்தை அறிவது கடினம்.
அவள் கபடம் நிறைந்த அன்பை வெளியில் காட்டி கண்களையும் முகத்தையும் திருப்பி சிரித்துக்கொண்டே
சொன்னாள்----- பிரிய நாதா! நீங்கள் கேள் !கேள்! என்கிறீர்கள். ஆனால் நீங்கள் எப்பொழுதும் எதுவும் கொடுக்கல் -வாங்கல் கிடையாது.
நீங்கள் இரண்டுவாரம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் . அதே கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
நான் இப்பொழுதுதான் நீ சொல்வதை புரிந்துகொண்டேன்.
நீ அந்தவரங்களை என்னிடம் சேமிப்பாக கொடுத்து வைத்துள்ளாய். நீ அவைகளைக் கேட்கவே இல்லை. என்னுடைய மறதியால் அந்த நிகழ்ச்சி எனக்கு நினைவில் இல்லை. என்னை பொய்யானவன் என்று குறைஇல்லாதே.
இரண்டுக்கு பதிலாக நான்கு வரங்கள் கேள்.
உயிர் போனாலும் வாக்கு தவறக்கூடாது என்பதுதான்
ரகுகுல முறை .
பொய் சொல்வது போன்ற பாவங்களின் கூட்டம் வேறெதுவும் இல்லை.
கோடி குண்டுமணிகள் சேர்ந்தாலும் மலையாக முடியுமா?
உண்மைதான் எல்லா உத்தம நற்செயல்களுக்கும் புண்ணியத்திற்கும் ஆணி வேர்.
மனுநீதிப்படியும் வேதங்கள் -புராணங்களிலும் இப்படியே சொல்லப் பட்டிருக்கிறது.
மேலும் ராமனின் மீது ஆணையிட்டு நான் சொல்லி இருக்கிறேன். ராமர் எனது புண்ணியம். ராமர் எனது அன்பின் எல்லை. இவ்வாறு தான் சொன்னதை தசரதர் உறுதிப்படுத்தினார். அப்பொழுது வேட்டைக்காரி போல் தன்னுடைய வாக்கு என்ற வேட்டைப்பறவையை விட விரும்பினாள்.
தசரதர் தன் மனதில் கைகேயியை நல்ல மனம் படைத்தவள் என்று நினைத்து அன்புடன் ஆனந்தமாக
மென்மையான அழகான சொற்களுடன் ,"பெண்ணே!
உன்மனம் மகிழ்ந்துவிட்டது. நகரம் முழுவதும் ஆனந்தமாக வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் நாளையே ராமருக்கு யுவராஜ் பதவி கொடுக்கிறேன்.
ஆகையால் நல் விழியாளே! நீ மங்களப் பொருள்களை அலங்கரி. இதைக்கேட்டதும் அவளுடைய கல்மனம் உடையத் தொடங்கியது. பழுத்த வெயில் கொப்பளம்
உடைந்து விட்டது போல் இருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட வலியையும் கைகேயி சிரித்து சமாளித்தாள். திருடனின் மனைவி வெளிப்படையாக
அழமாட்டாள்.
அரசர் அவளுடைய கபடத்தையும் கெட்டிக்கார நடிப்பையும்
புரிந்துகொள்ளவில்லை.
காரணம் கோடி கொடுமைக்காரிகளின் தலைமை குரு
கூனியின் சிஷ்யை. அவள் சொல்லிக்கொடுத்தபாடம்.
அரசன் நீதியில் நிபுணராக இருந்தபோதிலும் பெண்களின்
நடத்தை மற்றும் குணத்தின் ஆழத்தை அறிவது கடினம்.
அவள் கபடம் நிறைந்த அன்பை வெளியில் காட்டி கண்களையும் முகத்தையும் திருப்பி சிரித்துக்கொண்டே
சொன்னாள்----- பிரிய நாதா! நீங்கள் கேள் !கேள்! என்கிறீர்கள். ஆனால் நீங்கள் எப்பொழுதும் எதுவும் கொடுக்கல் -வாங்கல் கிடையாது.
நீங்கள் இரண்டுவாரம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் . அதே கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
நான் இப்பொழுதுதான் நீ சொல்வதை புரிந்துகொண்டேன்.
நீ அந்தவரங்களை என்னிடம் சேமிப்பாக கொடுத்து வைத்துள்ளாய். நீ அவைகளைக் கேட்கவே இல்லை. என்னுடைய மறதியால் அந்த நிகழ்ச்சி எனக்கு நினைவில் இல்லை. என்னை பொய்யானவன் என்று குறைஇல்லாதே.
இரண்டுக்கு பதிலாக நான்கு வரங்கள் கேள்.
உயிர் போனாலும் வாக்கு தவறக்கூடாது என்பதுதான்
ரகுகுல முறை .
பொய் சொல்வது போன்ற பாவங்களின் கூட்டம் வேறெதுவும் இல்லை.
கோடி குண்டுமணிகள் சேர்ந்தாலும் மலையாக முடியுமா?
உண்மைதான் எல்லா உத்தம நற்செயல்களுக்கும் புண்ணியத்திற்கும் ஆணி வேர்.
மனுநீதிப்படியும் வேதங்கள் -புராணங்களிலும் இப்படியே சொல்லப் பட்டிருக்கிறது.
மேலும் ராமனின் மீது ஆணையிட்டு நான் சொல்லி இருக்கிறேன். ராமர் எனது புண்ணியம். ராமர் எனது அன்பின் எல்லை. இவ்வாறு தான் சொன்னதை தசரதர் உறுதிப்படுத்தினார். அப்பொழுது வேட்டைக்காரி போல் தன்னுடைய வாக்கு என்ற வேட்டைப்பறவையை விட விரும்பினாள்.
No comments:
Post a Comment