Saturday, October 17, 2020

ஆண்டவன் அன்பு அமைதியின்மை

 அன்பே ஆண்டவன் .
அறமே ஆண்டவன் .
ஆறுதலுக்கு ஆண்டவன் 
ஆட்டி வைக்கும் ஆண்டவன் 
இன்பம் தரும் ஆண்டவன் 
இன்னல் தரும் ஆண்டவன் 
ஆண்டவன் பெயரால் மனிதனின் சுயநலம் .
மனிதனைப்பிரித்து ,மூடநம்பிக்கை வளர்த்து 
சுயநல மதத்தலைவர்கள் ,சுயநல அரசியல் .
மனிதர்களின் ஒற்றுமை பிரித்து 
வேற்றுமை பெருக்கி வாழும் சுயநலம் .


ஆண்டவன் பெயரால் அரசியல் .
மதத்தின் பெயரால் அரசியல் 
மனித ஒற்றுமைக்குப்  பெரும் இடையூறுதான் மதம்.
நான் குரான் படிக்கிறேன் .
படிக்காதவர்களை  வெறுக்கிறேன் .
நான் பைபிள் படிப்பேன் ,
படிக்காதவர்களை வெறுப்பேன் .
வேதம் படிப்பேன் ,வேற்றுமை காண்பேன் .
சிவனே தெய்வம் ,நான் மதுரை ஆதீனம் .
நான் தருமபுரி ஆதீனம் நான் ஒரு ஆஸ்ரமம் .
என் பக்தன் உன் பக்தன் .
அல்லாஹ்வின் பேரில் வேற்றுமை 
ஏசுவின் பெயரில் வேற்றுமை 
சுனாமி ,கொரானா ,வெள்ளம் ,பூகம்பம் ,
மதங்கள் பார்ப்பதில்லை .
சூரியன் ,சந்திரன் , பூமி 
நீர் ,நிலம் ,நெருப்பு ,காற்று ,ஆகாயம் பொது .
மனித எண்ணங்களில் வேற்றுமை ,
சுயநலம் .பொறாமை ,பேராசை 
அமைதி அன்பு மன நிறைவில்லா வாழ்க்கை .
இன்னல்கள் நிறைந்த பூமி .
முதுமை ,மரணம் நிச்சயமான சட்டம் .





No comments: