Sunday, December 8, 2013

இது பக்தியின் உயர் நிலை.அதுவே ஆனந்தம்

இறைவன் ப்ரத்யக்ஷம்   நம் உழைப்பிலே;
 தானத்திலே,தருமத்திலே;
அன்பிலே;சிரத்தையிலே;சத்தியத்திலே;
தியாகத்திலே,பரோபகாரத்திலே;
ஆகாயத்திலே இல்லை,
ஒவ்வொருவர் உள்ளத்திலே;
இத்ர-தத்ர-சர்வத்ர என்று
இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெல்லாம் அலைகின்றாய்
ஞானத் தங்கமே!
 ஆகாய இறைவனை விட்டு .
உள்ளத்து இறைவனை எழுப்பி ,
அஹம் ப்ரம்மாஸ்மி  என்ற நிலை உணர்.
மனிதனே தெய்வம். மனமே ஆலயம்.
கபீர்:  இறை வனைக்கண்டேன்; கண்ணின் கருவிழி யைக் கட்டிலாக்கி,
இறைவனைப்படுக்கவத்து  இமைகள் என்ற கதவால் மூடி வைத்துவிட்டேன்.
கண்ணுக்குள் இறைவன். நெஞ்சுக்குள் இறைவன்.
விடமாட்டேன் வெளியே. இது பக்தியின் உயர் நிலை.அதுவே ஆனந்தம் 

1 comment:

அம்பாளடியாள் said...

மிகவும் சரியாக உணரப்பட்ட நிலை !!அகத்தை அலைய விடாது அன்பில் இறைவனைக் கண்டவர் முகத்திலும்
அதே தெய்வீகக் களை .பெருமை கொள்கின்றேன்,
வணகுகின்றேன் ஐயா .