Wednesday, January 1, 2014

அதுவே உலகியல் அவ்வுலகியல் இன்பம்.

இறைவனைப்பற்றி பல சிந்தனைகள்.
எங்கே இறைவன்?
ஏன் மனிதர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட குணத்தை தரவில்லை.

கீழுள்ள அனைத்தும் தெளிந்து புரிந்து அறிந்து

நல்லவை செய்யும் ஆற்றல் மனிதனுக்கு இறைவன் தந்தது.

மற்ற மிருகங்களுக்குத் தரவில்லை.

 இறைவனை குறை கூறும்

மனிதர்கள் சிந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு படைப்பின் தன்மை அமிர்தம்,விஷம் கசப்பு
புளிப்பு  என அறு சுவை அறிகிறோம்.உண்ணும் விஷயத்தில்
நாம் உசார்.அதுமட்டுமல்ல தங்கம்,வைரம் ,இருப்பு,மண் என்று
அனைத்தையும் தெரியும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
பஞ்சை நூலாக்கி நெய்து ஆடைகள் அணிகிறோம்.
இறைவன் படைப்பின் மூலத்தை மாற்றும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.
தேங்காயை எடுத்து அப்படியே சாப்பிடுவதில்லை.
தேங்காய்ப்பால் ,தேங்காய் என்னை,தேங்காய் பர்பி  இன்னும் எத்தனையோ.
தின் பண்டங்கள்,எள்ளில் இருந்து எள்ளுருண்டை,எண்ணெய் .
தேங்காய் நார் எப்படி அழகாகிறது.?இவ்வளவாற்றல்,இசைக்கருவிகள்
இனிமை யான பாடல்  இவ்வளவு ஆற்றல்.
இருப்பினும் துன்பங்கள்.நோய்கள். மரணம். விபத்துக்கள் காரணம்

நாம் பெற்ற ஆற்றல் அனைத்தும் இவ்வுலக இன்பங்கள் அனுபவிப்பதிலேயே ஈடுபடுகின்றன. வீடு,தங்கம்,வாஹனம் ,எதிர்கால சேமிப்பு.குழந்தைகள்,படிப்பு  இதிலே மனம் செலுத்துகிறோம். ஒவ்வொருவரும்  பெற்றோர்கள் எந்த நிலையில்  உள்ளார்களோ அந்த நிலையில் வளர்கிறோம்.பெற்றோர்கள் எப்படியோ அப்படியே குழந்தைகள் என்று கூறமுடியாது.ஆற்றல் மிக்க பெற்றோர்களுக்கு  பிறக்கும் குழந்தைகளும் அறிவில்லாமல் உள்ளனர்.
அறிவே இல்லாமல் சித்தபிரமை பிடித்த பெற்றோர்களுக்கு மிக்க அறிவாற்றல் உள்ள குழந்தைகள். இந்த வினோதம் ஏன்?

இதற்கு "மாதா-பிதா செய்தது மக்களுக்கு ,முன் பிறவிப்பயன்,செயற்கை தோஷம், செய்த பாவம், முன் வினைப்பயன்.
இவ்வளவு ஆய்ந்து தெளியும் நாம் ஏன் தவறு செய்கிறோம்?
இதில் இறைவனின் தவறென்ன?
அவனை ஏன் குறை சொல்லவேண்டும்?

இவ்வளவு சிந்தனைகள்,ஆராய்ச்சி.தெளிவு. பிறகும் நாம் அசத்திய,நேர்மையற்ற,கடமைசெய்யாமல் இருப்பது கீலுள்ளவற்றி நேர்மைக்கு புறம்பான செயல்கள். இறைவன் எப்படி அருள் புரிவான்.?
நாம் நம்மையே உணரவேண்டும்.பரோபகாரம்,இறக்கம்.உதவி.பிறருக்கென வாழ்தல் திருடாமை  ,ஆசைப்படாமை போன்ற உயர் குணங்களை பின்பற்றி சென்றால் ஆனந்தமாக திருப்தி சாந்தியுடன் வாழலாம்.

அதில் தான் ஆண்டவன் அருள்.அதுவே உலகியல் அவ்வுலகியல் இன்பம்.

சத்யம்-அசத்தியம்
பொறாமை
பேராசை .
ஆணவம்
கோபம்
சாந்தம்
சிரிப்பு
அழுகை
தாரள குணம்
கஞ்சம்
பழிவாங்குதல்
நினைவாற்றல்.
மறதி
போற்றுதல்
தூற்றுதல்
பாராட்டுதல்
இகழ்தல்
திறமை
திறமை இன்மை
விருப்பம்
ஆழ்மன விருப்பம்
கண்டொன்று பேசல்.
நேரில் பேசல்
ஒருதலைப் பக்ஷமாக பேசல்,
நியாய அநியாயம்
   

Sunday, December 29, 2013

ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.

ஆண்டவன்  நம்மை சத்ய மார்கத்தில்.
தான மார்கத்தில்
தர்ம மார்கத்தில்
இட்டுச் செல்லும் அவன் நம்மை ஆண்டவன்.
என்றும் எங்கும் எதிலும் காட்சி அளிப்பவன்.
இன்று  எப்படி ஊழல் செய்து மறைத்தாலும்
வெளிப்படுத்தச் செய்யும் ஆற்றல் உள்ளவன்.
அதற்காக உருவாக்கிய பதவிகள்
பதவிமோகம் .பண மோகம் ,பண பலம்
இதை எல்லாம் மீறி ஊழல்பெசப்படுகிறது
ஊழல் வாதிகள் வெளியில் நடமாடினாலும்
நியாயம்  விரும்பும் நேர்மைவாதிகள் அதை
உணர வைக்கின்றனர்.
சத்தியம் சங்கடங்களில் நிமிர்ந்து நிற்கிறது.
ஊழல் நிமிர்ந்தாலும் பொலிவு இருப்பதில்லை.
தேர்தல் நேரத்தில் அந்த கட்சி ஊழல் ,இந்த கட்சி ஊழல்
ஒட்டு மொத்தமாக அரசியலில் ஆண்டவர்கள்
ஆளப்போகிரவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள்.
நேர்மை உறங்குவதுபோல் இருந்தாலும்
ஊழல்கள் போட்டிபோட்டு வெளியே வருகின்றன.
ஊழல்கள் சிலரை தலை காட்ட விடுவதில்லை.
இருப்பினும் ஊழல் ஆள்கிறது.
நேர்மை சத்தியம் என்ற பலஹீனமான சக்தி
ஊழல்களை வெளிப்படுத்துகிறது.
ஊழல்கள் தண்டனை பெறாவிட்டாலும்

ஊழல்வாதிகளுக்கு சாந்தி இல்லை.
அவர்களும் சமாதி ஆகிறார்கள்.
அங்குதான் ஆண்டவன்/இறைவன்/அல்லா/இயேசு அனைவரும்
  சாஸ்வதமாக அதாவது
 நிரந்தரமாக வாழ்கின்றனர்.
அவர்களை கல்லால் அடித்தவர்களும்
சிலுவையில் அறைந்த வர்களும்
போற்றப்படுவதில்லை.
அங்குதான் தர்மம் நிலைக்கிறது.
நான் ஊளை செய்தேன்.செய்வேன்.செய்கிறேன் என்று
வாக்கு வாங்க மேடையில் பேசும் தைரியம்
இல்லை .
நேர்மை,ஊழல் எதிர்ப்பு.ஊழல்வாதிகளுக்கு தண்டனை என்ற
வாய்ச்சொல்லே அவர்களுக்கு வெற்றிவாய்ப்பளிக்கிறது.
ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.


வாழ்கின்றனர்.

Monday, December 23, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

Monday, December 16, 2013

आंडाल दक्षिण की मीरा-तिरुप्पावै -२

आंडाल दक्षिण की मीरा  -तिरुप्पावै -२
जग में जीने वाले भक्त जनों ! हम इस मार्गशीर्ष महीने के व्रत की क्रियाएं सुनिए!
क्षीर सागर में लेटे,ईश्वर नारायण की स्तुति करेंगे.
भोगिच्छा के भोजन नहीं करेंगे;
घी ,गोरस आदि नहीं ग्रहण करेंगे;
तडके नहायेंगे;फूल सर पर रखेंगे नहीं;नयनों में नहीं लगायेंगे काजल;
जिन क्रियाएं करने योग्य नहीं ,उनको करेंगे नहीं.
दान-धर्म करेंगे;भिक्षा देंगे;
मन लगाकर व्रत रखेंगे.
यों ही व्रत में मन लगायेंगे.

Friday, December 13, 2013

அதுவே சாந்தி தரும்.

 ஆழ்ந்த தத்துவம்,வேதாந்தம்  ,ஆழ்ந்த ஞானம் பெற்றால் தான்

 இறைவனைக் காணலாம். இறைவன் ஞான ஸ்வரூபி. அவனை தரிசிக்க 

தவம் செய்ய வேண்டும். அவன் அருள் பெற்று சம்சார சாகரத்திலிருந்து முக்தி பெற ,பாவ விமோசனம் பெற ,முக்தி பெற ,அறம் பொருள்,இன்பம் .வீடுபேறு பெற  யாகங்கள்,வேதபாராயணங்கள் ,பிரயாஷ்சித்தங்கள் செய்யவேண்டும்.
குரு தீக்ஷை பெற வேண்டும்.விரதங்கள் இருக்கவேண்டும்.
சத்யம்,நேர்மை,கடமை, ஆத்ம திருப்தி,பரோபகாரம்,சஹானுபூதி .சொன்னசொல் தவறாமை,போன்ற ஆதர்ஷ குணங்கள் வேண்டும்.
உலகப்பற்று  அற்ற  பற்றுள்ள சேவை செய்ய வேண்டும் .

இது ஒருவகையான ஞான மார்க்கம்.சனாதன தர்மத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆலயம் செல்லவேண்டும்.
அழகு பொருந்திய ஆண்டவனை தரிசிக்கவேண்டும்.ஆண்டவன் அலங்கார அபிஷேகப்பிரியன்.அவன் நாம ஜெபத்திலே,அஷ்டோத்திரத்திலே,சஹஸ்ரநாமத்திலே,ஸ்லோகங்களிலே தனி ஆனந்தம். அதுவே மெய்ஞானம் என்கிறது.

ஆச்சரியம் என்ன வென்றால் இப்படிப்பட்ட வேதஞான அறிவுபெற்றோர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இவைகளை எல்லாம் அறிந்து,தெரிந்து,தெளிந்து,கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற அவா அனைவரின் மனதிலும் எழுகிறது. நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போகிறது.

உலகியல்  பொருளியல் அடிப்படை.ஒவ்வொரு தேவைக்கும் பணம் அடிப்படை. இந்த பணம் உடனடித்தேவை.ஆன்மீகத்தில் ஆண்டிகளாக இருந்தவர்களின் ஞானபூர்வ் அனுபவ சேவைகளின் ஆதாரமாகவைத்து 
பொருளாசை அற்ற துறவிகளின் சீடர்கள் ஆலயப்பனிகள்,அறப்பணிகள் செய்ய  பணம் தேவைப்படும்பொழுது கிடைத்தது.தர்ம கைகரியங்கள் 
செய்யப்பட்டு வந்தன.
ஆனால் இன்றைய துறவிகளைப்பார்க்க,ஆசிபெற,தீக்ஷை பெற,ஆலய தரிசனம் செய்ய என கோடிக்கணக்கில் பொருள் சேர்கிறது. 

அன்னதானம் மட்டும் நடக்கிறது, கல்வி தானம் நடப்பதில்லை.

கல்விக்கூடங்கள்  இலவசமாக நடத்துவது என்பது  ஒரு மிகப்பெரிய வேள்வி.

நமது பாரத தேசத்தில் இன்றைய ஆன்மீகப்பணி இதுவே.

இதில் ஈடுபடுபவர்களுக்கும் ஆடம்பரங்கள் தேவைப்படுகின்றன.

கரதல பிக்ஷா,தரு தல வாசா என்ற கல்வி நிலை  காலத்திற்கு ஒவ்வாது.
கணினி,பரிசோதனைக்கூடம்,மன,பண,அறிவு நிறை உள்ள ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியர்கள் கவலை இன்றி அறிவளர்ச்சி செய்துகொண்டே தங்கள் அறிவை புதுப்பித்து பெருக்கிக் கொண்டே இருக்கவேண்டும்.அதற்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படவேண்டும். ஆசிரியர்களைமட்டும்  தியாகம் செய்யவேண்டும் என்று குடிலில் தங்கவைத்தால் மாணவர்கள் மதியா நிலைதான் ஏற்படும்.
பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மாதம் ௧௫ ஆயிரம் பெற்று சேவை செய்கிறார்கள்.அவர்களின் தரம் உயர வேண்டுமா?வேண்டாமா?
நிரந்தரமாக மன நிறைவுடன் ஆசிரியர் பணி ஏற்ற அனைவரும் ஈடுபட சமுதாயத்தில் மிக உயர்ந்த மரியாதை குரு ஸ்தானம்.குரு தெய்வத்திற்கு சமம்.
ஆனால் இன்றைய பாரதத்தில் ஆசிரியர் நிலை பரிதாபம்.

இந்த நிலை மாறினால் ஞான நிலைமேம்பட்டு மனித சமுதாயம் பண்புநிலைக்கு மாறும். இந்நாளுக்காக பிரார்த்திப்போம்.அதுவே ஆன்மிக அருள் பெற வழி. அதுவே சாந்தி தரும்.

Tuesday, December 10, 2013

அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.

இறைவனைப்பற்றிய
  எண்ணங்கள்
இறை நாம ஜபங்கள்
சத்சங்கங்கள்
அவனியில்  உண்மையான
மன நிறைவை  தருபவை.
மன ஷாந்தி தருபவை.
மனக் கலக்கம் தீர்ப்பவை.
மனப்போராட்டம்  இன்றி
மன ஒருமைப்பாடு தருபவை.
மனஉறுதி தருபவை.
மங்களம் உண்டாக்குபவை.
மாயை தவிர்த்து தியாக எண்ணங்கள் வளர்ப்பவை.

அகிலத்தில் ஆன்மிகம் பரப்பும்
ஆன்மீகவாதிகளால்
மனிதநேயம் வளரவேண்டும்.
மனித குல ஒற்றுமை அதிகரிக்க  வேண்டும்.
அகிலம் ஒரு அன்பு நிலையமாக மாறவேண்டும்.
அறிவியல் இப்பணியை செய்யும் அளவிற்கு
ஆன்மிகம் செய்கிறதா?என்பதே இன்றைய
அவனியில் ஒரு வினா?
ஆகாய விமானங்கள் பயணத்தை
எளிதாக்கி பயண நேரத்தைக் குறைக்கின்றன.
தொலைபேசிகள்  செய்திகள் பரிமாற்றத்திற்கு
வலைத்தளங்கள் ஒளி-ஒளி மூலமாக
அகிலத்தை இணைக்கின்றன.
பரந்த உலகம் நெருக்கமாகி தொலைவுகள் தொலைந்துவிடுகின்றன.
நமது  ஷீரடி ,புட்டபர்த்தி சாய்பாபா  பஜனைகள்
மத நல்லிணக்கத்தை வளர்க்கின்றன.
புத்தரின் அன்பு ,இயேசுவின் பாப மன்னிப்பு
அல்லாவின்  மனிதர்களுக்கு தானம் வழங்கும் "ஜகாத்" என
மனிதர்களுக்கு மனிதப்பண்புகளை
மனத்தில் பதிக்க வைக்கின்றன.
ஆனால் ,அரசியல் சுயநலத்தை விட
ஆன்மீக சுயநலங்கள்  மனிதர்களைப்பிரிக்க
முயல்கின்றன.மதக்கலவரங்களை உண்டாக்கி
ரத்தம் சிந்தவைக்கின்றன.
இறைவன் ஒருவன் என்றாலும் ,
இறைவன் பல என்றாலும்,
உருவம் அருவம் என்றாலும்
அவை எல்லாம் மாயத்தோற்றங்கள்.
இறைவனை வேறுபடுத்தி மதங்களைக்கூறி
அரசியல் நடத்துவது,ஆஸ்ரமங்கள் நடத்துவது
அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் வளர்ச்சிக்குத்
தடைக்கற்கள்.அகழி.
அகழியில் இருக்கும் முதலைகள்
மதம் /தர்மம் என்று பொருளீட்டி சுகபோகத்தில் வாழும்
சயநல மத வாதிகள்.
அவர்கள்  இறைவனால் சமுதாயத்தில்
அடையாளம் காட்டப்படுகின்றனர்.
ஆஸ்ரமங்களில் சேரும் பணங்கள்,
தேவனின் பெயரால் சேரும் பணங்கள்,
அல்லாவின் பெயரால் சேரும் செல்வங்கள்
அறப்பணி செய்ய ஈடுபடுத்துவோர்
ஆண்டவனால் புகழப்படுகிறார்கள்.
அவனியில் பாராட்டப்படுகிறார்கள்.
ஏழை-எளியோர்களும் அநாதைகளும் ஆதரவு பெறுகிறார்கள்.
இந்த உண்மை மதவாதிகளை
அவனியின் அறச் சிந்தனையாளர்கள்
தானம் அளித்து போற்றுகிறார்கள்.
தர்மம் தழைக்கிறது.
நல்லவர்கள்  அறம் வளர்ப்பதால் தான்
அவனியை ஆண்டவன் காக்கிறான்.
அதனால் ஆன்மிகமும் பக்தி இயக்கங்களும்
அவனியில்  அமரத்துவம் அடைகின்றன.
கபீர்   இந்த உயர் சிந்தனைகளை எளிய தோகையில்
மக்களுக்கு உணர்த்துகிறார்.
இக்பால் அவர்கள்
பாரதத்தின் "ஹிந்துஸ்தான் ஹமாரா"என்ற பாடலில்
மதங்கள்  மனிதர்களுக்குள் விரோதம்
 வளர்க்கக்  கற்றுத்தருவதில்லை என்கிறார்.
கபீர் மண் ஒன்றே,அதிலிருந்து செய்யப்படும்
பாத்திரங்கள் பலவகை.பெயர்கள் பல.
தங்கம் ஒன்றே. அதில் செய்யப்படும் ஆபரணங்கள்
பல பெயர்கள். அவ்வாறே இறைவன் ஒன்றே .
நாம் அணியும் விருப்பமுள்ள நகைகள்
உருக்கினால் சொக்கத்தங்கம்.அதில் கலப்படமின்றி
நகைகள் செய்ய முடியாது.
பக்தி விஷயத்தில் நாம் சொக்கத்தங்கமாக
எவ்விதகலப்பும்  இன்றி இறைவனை வழி படவேண்டும்.
ஆடம்பர பக்தியால் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்பது
மிகப்பெரிய தவறான எண்ணம். சிந்தனை.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்வு தரும் இறைவன்
கருணை நிறைந்தவர்.பின்னர் ஏன் ஏழை/பணக்காரர்கள்
நோயாளிகள்/சக்திசாலிகள் என்ற வேறுபாடு?
இதற்கு எளிய விடை நாம் சொக்கத்தங்கமா?
இல்லையே.
உலக மாயையால் தவறுகள் செய்கிறோம்.
உலக பயத்தால் பாவச் செயல்களை தடுக்காமல்
ஒதுங்கிச் செல்கிறோம்.
பல பாபச் செயல்களுக்கு துணை போகிறோம்.
பாசத்தால் ,பந்தத்தால்,நட்பால்  தீயவை செய்வோரை காக்கிறோம்.
வருமானத்திற்காக  மதுக்கடைகள் நடத்துகிறோம்.
கையூட்டு கொடுப்போருக்கு வாக்களிக்கிறோம்.
இலவசங்கள் பெற்று இன்பமாக வாழ ஆசைப்படுகிறோம்.
நலவர்கள்-தீயவர்கள் யார் என்றே சிந்திக்காமல் வாக்களிக்கிறோம்.
அதன் பலன்களை அனுபவிக்கிறோம்.அவனியில் ஊழலுக்குப் பேர் பெற்ற நாடாக ,பலாத்காரத்திற்கு பெயர்பெற்ற நாடாக திகழ்கிறோம்.
லக்ஷக்கனக்கு அரசியலில் ஊழலளல்ல.கோடிகளே ஊழல் என்று 
அறிவிக்கும் அமைச்சர்களுக்கும் குற்றம்புரின்தொருக்கும் கொலைகாரர்களுக்கும்  வாக்களிக்கிறோம்.
உலக மாயை விடாததால் நாட்டின் மானத்தை பறக்கவிடுகிறோம்.
விலைவாசி உயர்வால் வேதனைப்படுகிறோம்.

ராமாவதாரத்திலும் சரி,கிருஷ்ணாவதாரத்திலும் சரி
அதர்மம் ஒழிக்க சில அதர்ம வழிகள் அவனியில் ஏற்றதாகின்றது.
அதுவே களங்கமாகிறது அந்த அவதார புருஷர்களுக்கு.
நாம் சொக்கத்தங்கமாகவே இருக்க அவனியில்
இன்னல்கள்  என்ற நெருப்பில் வெந்து வாழ வேண்டிய நிலை.
நாம் பற்றுள்ள உலகில் பற்றற்றவர்களாக
இறைவன் மீது மட்டும் பற்றுகொண்டு வாழவேண்டும்.
அதுவே "சாந்தி".இதை உணர நம் சுயநலங்களால் இன்னல்களை
அனுபவிப்பது உலக ஆசைகள்.பேராசைகள்.சுய நலங்கள்.பொய்யான போலி வாழ்க்கை.
இதை உணர்ந்து வாழ்ந்தால்  ஆனந்த மளிக்கும் ஆண்டவன் அருள்.
அதுவே பிரம்மானந்தம். அதை அனுபவிக்க முடியும்.
எப்படி நாம் காற்றை உணர்கிறோமோ அப்படி.
அதைக்காண முடியாது. உணர முடியும்.
அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.



அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா

ஆண்டவன்  எங்கே? எங்கே?
ஆலயங்களிலா? ஆஷ்ரமங்களிலா?
ஆருடங்களிலா?ஜோதிட நிலையங்களிலா?
கிராமிய தேவதைகளிலா?
உடுக்கை சத்தத்திலா?
புல்லாங்குழலிலா?
வீணையிலா?
பஜனையிலா?
அஷ்டோத்திரத்திலா?
சஹஸ்ர  நாம அர்ச்சனையிலா?
யாகத்திலா?
 ஹோமத்திலா?
தபசிலா?
வேதத்திலா?
குரானிலா?
பைபிளிலா?

விரதத்திலா?
தீர்த்த யாத்திரையிலா?
பரிகாரங்களிலா?
தான தர்மத்திலா?
பல எண்ணங்கள்
பல தத்துவங்கள்
அத்வைத்துவம்
த்வைத்துவம்
விஷிஷ்டாத்வைதுவம்.
எத்தனை தத்துவங்கள்
உருவமா?அருவமா? இரண்டுமா?
அனைத்தும் ஏற்றுக்கொள்ள  கூட்டம்.
எதிர்க்கவும் ஒரு கூட்டம்,
மறுக்கவும் ஒரு கூட்டம்.
அனைத்திற்கும் கூட்டம்.
சாரயக்கடையிலும் கூட்டம்.
அகிலத்தில் அவனது ஆட்டம்.
அறிய முடியா அவன் லீலைகள்.
இறைவன் ஒருவனே ஏன் ஒரு முழக்கம்.
பல உருவங்களில் வழிபட்டாலும்
அடையும்  இடம் ஒன்றே.
வரமும் ஒன்றே.
விருப்பமும் ஒன்றே,
ஏன்  இந்த மத சாதிக்கலவரங்கள்?
அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா?
ஞானம் பெற்றபின்னும் உலக மாயை இருப்பதாலோ?