Saturday, August 29, 2026

மனைவி இழந்த நிலை

 தாங்கள் கூறிய கருத்தில் தனிமை, பற்றின்மை, தியானம், வினைப்பயன் ஆகியவை ஆழமான ஆன்மிகச் சிந்தனைகளாக உள்ளன. ஆனால் “மனைவியை இழந்தவர் நிச்சயமாக சந்நியாச நிலைக்குச் செல்ல வேண்டும்” என்று பொதுவாகக் கூறுவதைவிட, சனாதன தர்மத்தின் பார்வையில் ஒருவருக்கு இது ஒரு ஆன்மிக வாய்ப்பாக அமையலாம் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தங்கள் கருத்தைச் செம்மைப்படுத்தி ஒரு கவிதைநடைப் படைப்பாக:

Writing

இன்றைய சவால்

மனைவியை இழந்தவரின் நிலை

மனைவியை இழந்தவரின் வாழ்க்கை

பல நேரங்களில்

ஏகாந்தத்தை நோக்கிச் செல்கிறது.

ருசி அறிந்து,

நேரம் அறிந்து,

மனநிலை அறிந்து

உணவு அளித்தவள் இல்லாதபோது,

அவள் இல்லாமையின் வெற்றிடம்

ஆழமாக உணரப்படுகிறது.

சனாதன தர்மத்தின் பார்வையில்,

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்

பற்றுகளைத் துறந்து,

உலகியல் ஆசைகளை விடுத்து,

இறைச் சிந்தனையை நோக்கிச் செல்வது

சந்நியாச மனநிலையாகும்.

பசிக்கும் போது உணவு;

பின்னர் சிறிது நடைப்பயிற்சி;

அமைதியான நேரத்தில் தியானம்—

இவ்வாறு வாழ்க்கையை

எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.

தனிமை என்பது

எப்போதும் தண்டனை அல்ல;

சில நேரங்களில்

அது தன்னை அறியும் வாய்ப்பு.

உலகியல் பற்றுகள் குறைய,

மனம் இறைவனை நோக்கித் திரும்ப வேண்டும்.

வள்ளலார் இராமலிங்க அடிகள்

வேண்டிய அந்த அரிய மனநிலைபோல்—

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

மனம் வேண்டும்.”

அவள் இல்லாத வாழ்க்கையில்

அவள் அளித்த அன்பின் நினைவுகளுடன்,

அவள் விட்டுச் சென்ற வெற்றிடத்துடன்,

இறைவனை நினைத்தபடி வாழ்வதும்

ஒரு தவமே.

தனிமை—

தியானத்திற்கு வழியாகலாம்.

தியானம்—

மன அமைதிக்கு வழியாகலாம்.

பற்றற்ற நிலை—

ஆன்மிகப் பயணத்திற்கு வழியாகலாம்.

இவை அனைத்தும்

வாழ்க்கையின் வினைப்பயனை

ஏற்றுக்கொண்டு செல்லும்

ஒரு ஆன்மிகப் பாதையாக அமையலாம்.

தங்கள் “மனைவி இல்லாத நிலையில் கிடைப்பது உண்ண வேண்டும்; தியானம் தான்; ஒரே வழி; வினைப்பயன்” என்ற கருத்தை நான் மென்மையாகவும், ஆன்மிக ஆழத்துடனும் வடிவமைத்துள்ளேன்.

Wednesday, August 19, 2026

பரிசாய் வந்த தாலி

 சிறுகதை.

பரிசாய் வந்த தாலி.

பழநி 

சே. அனந்த கிருஷ்ணன். சென்னை 


   அகவை 30. ஆனந்தனுக்கு வேலை நிரந்திரம் இல்லை.அழகான வசீகரத்தோற்றம்.

 காதலிக்க பலர் விரும்பினாலும் அவனுடைய சுய கௌரவம் பொருளாதாரச் சூழல் 

 வேலை இன்மை அவனை  காதல் வலையில் சிக்கவைக்க வில்லை. இன்றைய சூழலில் வசதி இல்லாதவரை விரும்பினாலும் காதலித்துத் திருமணம் செய்ய விருப்பம் பெண்களுக்கு  மனம் வராது.

 அவன் வேலை தேடுவதை விடுத்து தொழில் துவங்க நினைத்தான்.

 அரசு அறிவிப்பது போல் வங்கிக் கடன் பெறுவது எளிதல்ல. 

 அவன் பல சிந்தனையுடன் தினந்தோறும் நடைபயிற்சி செய்வது வழக்கம். அத்தப் பகுதியில் சிறு வனப்பகுதி. அங்கே ஒருவன தேவதை.

அந்தப் பகுதி மக்களுக்கு அந்த தேவதை கண்கண்ட தெய்வம்.

வீட்டில் நடக்கும் அனைத்து நற்காரியங்களுக்கு முன் அந்த வனதேவதை வழிபாடு  செய்வார்கள்.

  ஆனந்தனுக்கு பெரியார் பேச்சால் இறைவழிபாட்டில் அவ்வளவு அக்கறை கிடையாது.

  எதிர்பாராத விதமாக அவன் நண்பன் ஆறுமுகம் அவனை வனதேவதை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

 அந்த வனதேவதை அவனுடன் பேசுவதுபோல் சிரிப்பது போல் ஒரு உணர்வு.

 இரு நண்பர்களும் தேவதை தரிசனம் செய்து மனநிறைவுடன் திரும்பினர்.

 ஆனந்தன் நடைபயிற்சியுடன் வனதேவதை வழிபாட்டையும் 

 பழக்கப்படுத்தி கள் கொண்டான்.

  ஒரு நாள் அக்கோவில் பிரகாரத்தில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. 

 இயங்கிக் கொண்டே அந்தப்பையை எடுத்தான். அதில் திருமண அழைப்பிதழ்கள் அதனுடன் ஒரு மாங்கல்ய தங்க சங்கிலி. ரொக்கமாக சில நோட்டுகள்.

  இவன் திருமண பத்திரிக்கை பார்த்து அந்த அழைப்பிதழில் இருந்த கைபேசி எண்ணிற்கு, அழைப்பு மணி கொடுத்தான்.

 அந்த கைபேசியை  எடுத்தவர் கோபமாகப் பேசினார். ஏதாவது தவறான அழைப்பு ஏன்?

  ஆனந்தன் பொறுமையாக ஐயா.

 நீங்கள் முருகனா? என்றான். ஆம் என்று சொல்லி அமைப்பைத் துண்டித்தார்.

 ஆனந்தன் மீண்டும் அழைத்து உங்கள் திருமண அழைப்பிதழ் பை உள்ளதா என்றான். ஆம்,மகிழுந்தில் உள்ளது என்றார். 

ஆனந்தன் சரி, திருமணத்திற்கு என் உதவி தேவைப்பட்டால் என் பெயர் ஆனந்தன். இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்றான். 

 தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 முருகன் தன் மகிழுந்தில் சென்று பார்த்தபோது பை இல்லை. மனைவியிடம் கேட்டபோது அது தான் ஆலயத்திலே மே இல்லையே என்றாள்.

அர்ச்சனைத் தட்டில் வைத்து பிரகாரம் சென்றபோதே காணோம். உங்கள் கோபத்திற்கு பயந்து பேசாமல் இருந்தேன். அப்போது அவசர கைபேசி அழைப்பு என்று சொல்லி அர்ச்சனை செய்யாமல் திரும்பி விட்டோம் என்றாள்.

  அப்போது முருகனுக்கு ஆனந்தனின் கை பேசி அழைப்பு பைபற்றி வினவியது உதவி தேவைப்பட்டால் அழைக்கவும் என்றது நினைவிற்கு வர 

 அவன் ஏன் பை பற்றி கேட்டான். ஒரு வேளை பை அவனிடம் இருக்குமோ? 

 என்று அவனுக்கு அழைப்பு விடுத்தார்.

 அவனிடம் பை உள்ளது என்பதை அறிந்து நன்றி சொல்லி தானே வந்து வாங்கிக் கொள்வதாக கள் கூறி அவன் விலாசம் கேட்டு அறிந்து கொண்டார். மனைவியிடம் பை உள்ளதை மகிழ்ச்சியுடன் கூறினார்.

 அப்போது முருகனின் மாப்பிள்ளை வீட்டாரிடம் கைபேசி அழைப்பு.

  மன்னிப்புக் கேட்டு என் மகன் திருமணத்திற்கு மறுக்கிறான். அவன் கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்த தாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தால் தற்கொலை செய்வதாக மிரட்டுகிறான்  மன்னியுங்கள் என்றார்.

 முருகனுக்கு கோவம் .

 என்ன செய்வது?

  இந்த தாலி திருமணம் பத்திரிக்கை பை காணாமல் போனது  நல்லது. பத்திரிகை இன்னும் விநியோகம் செய்யவில்லை. அம்மாவின் பாதத்தில் வைத்து அர்ச்சனையும் செய்யவில்லை .

 பிறகு மனைவியை அழைத்துக்கொண்டு ஆனந்தன் வீட்டிற்குச் சென்றார்.

 ஆனந்தனின் பெற்றோர் முருகனுக்குத் தெரிந்த தூரத்து உறவினர்.

 வரவேற்று பேசிக் கொண்டிருந்தபோதே ஆனந்தன் அந்த பையைக் கொடுத்தான்.

முருகன் தன் சம்பந்தி வீட்டார் திருமணத்திற்கு மறுத்து விட்டாராம் சொல்லி வருந்தினார்.

 அப்போது ஆனந்தனின் பெற்றோர் தன் மகன் ஆனந்தன் திருமணம் நடக்கவில்லை என்றனர்.

 இரண்டு வீட்டாரும் கலந்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

 முருகன் ஆனந்தத்திற்கு

 அவன் நேர்மையைப் பாராட்டி அந்த  தாலி செயினை பரிசாக அளித்து திருமண நாளன்று கட்டும் பணி கூறினார்.

ஆனந்தன் வனதேவதை அருள் என்று ஆலயம் செல்வது சாலச் சிறந்தது என்று கூறினான்.

 +++++

 எனது சொந்தப் படைப்பு என்று சான்றழிக்கிறேன்.

பழநி 

 சே. அனந்த கிருஷ்ணன் 

சென்னை

Wednesday, August 12, 2026

காதல் அன்பு

 [12/08, 8:17 am] sanantha.50@gmail.com: தங்களது மதம் உயர்ந்தது.

தமிழில் இல்லா  அன்பு நெறி பைபிளில் உள்ளது.

 ஏன்?

 சனாதன தர்மம் 

வையகம் வாழ்க என்றது.

 வையகம் ஒரு குடும்பம் என்றது.

 சர்வேஜனா சுகினோபவந்து என்றது.

 ஆனால் கிறிஸ்துவர்கள் மட்டும் வாழவேண்டும்.

 குரான் மட்டுமே சிறந்த புத்தகம் என்று  மற்ற மத நூல்களை எரிக்க வில்லை.

 மற்ற தேவாலயங்களை சிலைகளை  தூளாக்க வில்லை.

 பைபிள் அன்பு மொழி.

 வரலாறு மறைத்து இவர்களை ஆதரிக்கும் 

 மனசாட்சி இல்லா அரசியல் வளர 

 யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

[12/08, 7:17 pm] sanantha.50@gmail.com: காலை வணக்கம்.


‌அன்பு என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ளது.

 அமைச்சர் சட்டசபையில் பைபிள் பிரசாரம் மதப்பிரசாரம் செய்வது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது.




காதல் பற்றிய 

சங்க இலக்கியப்பாடல்.

 அன்பு என்பது தமிழில் இலக்கியத்தில் பைபிள் முன் உள்ளது.

 இதற்கு தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


  இருவர் காதலித்து மணந்தால்

    இருவரின் தாய் இருவரின் தந்தை இருவரின் உறவினர்கள்

 அனைவரும் 

 செம்மண்ணில் பெய்த மழைநீர் வண்ணம் மாறி கலப்பது போல 

 அன்பில் ஒன்றாகி விடுகின்றனர்.


 குறுந்தொகை 40வது பாடல்.