Thursday, April 20, 2017

ராமசரிதமானஸ் ---அயோத்யாகாண்டம் -- பக்கம் --பத்தொன்பது.

ராமசரிதமானஸ்  ---அயோத்யாகாண்டம் --  
பக்கம் --பத்தொன்பது.

கௌசல்யா  ராமரிடம்   மகனே!  சொல் .
 அந்த ஆனந்தமான
லக்னம் எப்பொழுது ?
அந்த  நேரம்  எனக்கு இந்தப்
 பிறவியின் பலன்     கிடைக்கும்   நேரம்.
 என்னுடைய  ஒழுக்கம் ,
புண்ணியம் சுகத்தின் அழகான எல்லை
அந்த  நேரமே .
சாதகப் பறவைகளின்  ஜோடிகள்  குளிர்கால சுவாதி நக்ஷத்திரத்தின்  மழையை  ஆவலாக எதிர்பார்ப்பதுபோல் , 
இந்த ராஜதிலக நல்ல முஹூர்த்த நேரத்தை 
  ஆண்களும் பெண்களும்  வியாகூலத்தோடு  எதிர்பார்க்கிறார்கள் .
நான்  உனக்கு  திருஷ்டி சுத்தி போடுகிறேன்.
 நீ சீக்கிரம்  குளித்து விட்டு  ,
நீ  விரும்பும் இனிப்புகளை   சாப்பிடு .
பிறகு அப்பாவிடம் செல்.
மிகவும்   தாமதமாகி விட்டது.
அம்மாவின்  அனுகூலமான சொற்களைக்கேட்டு ,
அவை சொற்களாகத் தெரியவில்லை.
 அன்பு என்ற கற்பக  விருக்ஷத்தின்  பூக்கள்.
அதில் சுகம் என்ற மகரந்தம் நிரம்பி இருந்தது.
ராஜலக்ஷ்மியின் மூலம் தான் அவை.
இப்படிப்பட்ட சொல்லென்ற பூக்களைப் பார்த்து
ராமர் என்ற  வண்டு    ரீங்காரமிடுகிறது.

அறத்தின்  அச்சான    ராமர்        அறத்தின்   இயக்கம்
அறிந்து மிகவும்  மென்மையான குரலில்  சொன்னார்--
"அம்மா ! அப்பா,   எனக்கு வன ராஜ்யத்தைக்
கொடுத்துள்ளார்.
அங்கே என்னுடைய செயல்கள்  எல்லாமே நடக்கும்.
 நீ ங்கள்    மகிழ்ச்சியான மனதுடன்  எனக்கு  அனுமதி அளியுங்கள்.
என்னுடைய  வன -யாத்திரை ஆனந்தமாக -
நலமுடன் முடிய  ஆசி  கூறுங்கள்.
என் மீதுள்ள அன்பினால் தப்பித் தவறி   கூட
  பயப்பட வேண்டாம்.
அம்மா! உங்கள் கிருபையால்  ஆனந்தமே உண்டாகும்.  
நான்  பதினான்கு   ஆண்டுகள்
வனவாசம்     முடித்து
அப்பாவின் வாக்கைக் காப்பாற்றி
நலமுடன் திரும்பி வருவேன்.






 நீங்கள்  வருத்தப்பட  வேண்டாம். 

No comments: