Wednesday, October 29, 2014



god
பகவான்  

கடவுள்

இறைவன்

தெய்வம்

குதா

பரமாத்மா

தேவுடு

எனக்குத்தெரிந்து  கடவுள் என்பதற்கான பொதுப்பெயர்கள்.


முருகா!சரணம்.

இன்று   முருகப்பெருமான்   கந்தசஷ்டி  திருவிழா .

கந்தனின்அருள்வேண்டி  கடும் விரதமிருப்போர்.பலர் .

உள்ளம் உருக உமையவன் உமையவள் புத்திரனைப் 

பாடி ஜபித்து அருள் பெறுவோர் 

ஆண்டுதோறும் பெருகும் பக்தர்கள்.

அறுபடை வீடுகளில் விழாக்கோலம் .

ஆறுதலளிக்கும் ஆறுமுகக் கடவுள் 

இன்னல் தீர்க்கும் இடும்பன் கடம்பன்.

ராமலிங்க அடிகளார்  பாடல் 

மனிதவாழ்க்கைக்கு  ஏற்ற பிரார்த்தனைப் பாடல் ---

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று  பேசுவோர் 

உறவு கலவாமை வேண்டும்.

பெருமை பெரும் நினது புகழ் பேசவேண்டும்.
பொய்மை பெசாதிருக்கவேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும் 
உன்னை மறவாதிருக்கவேண்டும்.
தர்மமிகுசென்னையில் 
கந்தர் கோட்டத்தில் வளர்  தளமோங்கும் 
கந்தவேலே.

Friday, October 24, 2014

ஓம் சாந்தி !



 அவனியில் ஆனந்தமாக , மன நிறைவுடன், மன சாந்தியுடன்  வாழ


இறைவன் அன்பிற்கும் பக்திக்கும் பிரார்த்தனைக்கும்


 ஒப்பில்லா   மதிப்பு உண்டு.     இந்த ஆனந்தமே பிரம்மானந்தம்.


இதை உணர்ந்து  மகிழ்ந்தால்  இவ்வுலகில் வேறு ஆனந்தமும் ஈடாகாது.


ஜனனம் ----மரணம் இரண்டும்  மனிதன் அனுமானிக்க முடியா ஒன்று.


இதிலுள்ள இடப்பட்ட வாழ்க்கை வாழ இறைவன் அனைவருக்கும் ஒரு


திறமை கொடுத்துள்ளான்.  அதை அறிந்தும் மனிதன் தன் திறமையை


மற்றவர்களுடன்  ஒப்பிட்டுத் தான்  உயர்ந்தவன்   என்ற ஆணவத்தாலும்


தான்  தாழ்ந்தவன்  என்ற  தாழ்வு மனப்பான்மையாலும் ,


போதும் என்ற  திருப்தியாலும்,கிடைத்தது பத்தாது   என்ற அதிருப்தியாலும்

இன்னும் வேண்டும் என்ற பேராசையாலும்  அமைதி இழந்துவிடுகிறான்.

 இதெல்லாம் இன்றி  பேரானந்தத்துடன்  வாழ தியானம் ,

நாம ஜபம் ,தர்மம் , இறைப்பற்றுடன் பற்றற்ற  வாழ்க்கை வாழலாம்.

  ஓம் சாந்தி!சாந்தி !ஷாந்திஹி !


Tuesday, October 21, 2014

தீபாவளிவாழ்த்துக்கள்

                                            தீபாவளி 
இமயம் முதல் குமரிவரை  கொண்டாடும் ஹிந்துக்களின் 
இனிய பண்டிகை.

தீயன  ஒழித்து  நல்லவை ஒளிர 

தீபத் திருநாள் இது.

வணிகர்களுக்கோ இது வசந்தகாலம்.
இனிப்பு காரா வணிகம் 
எண்ணெய் ,பல சரக்கு வணிகம்,
ஆடை ஆபரணங்கள் ,
திரைப்பட அரங்குகள் 
பேருந்து சிற்றுந்து தொடருந்துப் 
பயணங்கள்.
இதிலே மழலைகளுக்கோர் மகிழ்ச்சி ,
உற்றார் உறவினர் நண்பர்கள் 
சந்திப்பு நிகழ்ச்சி ,
ஆலயங்களில் ஆனந்தம் ,
எங்கும் ஒளிமயம் ,வெடிச்சத்தம்.
இந்த மகிழ்ச்சியான நாளில் 
பாரதமற்றும் வெளிநாட்டில் வாழும் 
அனைவருக்கும் 
நல்லதே நடந்து ,மன ஆசைகள் நிறைவேற 
 இறைவனைப் பிரார்த்தித்து  -எனது 
இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் . 






Thursday, October 16, 2014

ஆண்டவனும் ஆண்டவர்களும் --அன்பு தான்.

ராமர் ஆண்ட நாடு ,
அவர் ஆண்டவனின் அவதாரம்.

கிருஷ்ணன் ஆண்ட நாடு ,
அதுவும் ஆண்டவன் அவதாரம்.

புண்ணிய பூமி பாரதம் ,
 வேதமும் பண்பும் ஒழுக்கமும் 

அமைதியும் ,சத்தியமும் கடமையும்
 தியாகமும் அஹிம்சையும் 

வையகம் வாழவும் ,
வையகம் ஒரு குடும்பம் 
,வந்தவர்கள் 

தெய்வம்  என்ற தத்துவம் 
அவனிக்கு அறிவித்த நாடு.

அகில உலகமும் அறிவைத்தேடி ,
ஆன்மிகம் தேடி ,
அமைதி தேடி வந்தநாடு.

ஆஸ்தி  அறிந்து ஆக்கிரமிக்க வந்தவர்கள்
 அகிலத்தில்.

ஆன்மிகம் தெய்வீகம்
 அந்த அரக்க இரக்கமற்றவர்களைப்

பொறுத்து மன்னித்து அழகு  சிலைகளை

அலங்கோலப் படுத்தியவர்களையும் 
ஆண்ட அனுமதித்த ஆண்டவன் நாடு.

கைலாயத்தில் சிவனும் ,

தென்னாட்டில் அவன் அருந்தவப் புதல்வனும் 

ஆட்சி செய்யும்  நாடு.

ஆன்மீகத்தில்  இணைந்த 
இணைக்கின்ற 
இணைக்கும் நாடு.

ஆண்டவன் இல்லை என்ற  அரசர்கள் ,

ஆண்டவனின் வரம் பெற்று ஆண்டவர்கள்,


ஆண்டவனையே அழிக்க  ,அதன் 

விளைவாக அழிந்த அசுரர்கள்,

ஆண்ட நாடு.

ஆண்டவன்  ஆண்டவர்களின் 

பெருமைகளுக்காக  
வியத்தகு ஆலயங்கள் ,

சீரிய சிற்பக்கலைகள்,

கலியுகத்திலும்  கோடிரூபாய்களும் 

தங்க வெள்ளி  கட்டிகளும் 
தான தர்மங்களும் 

மன முவந்து   காணிக்கையாக  கொட்டும் 

பக்தியில் சிறந்த நாடு.

முற்றிலும் துறந்த துறவிகளை 

ஆடை இன்றியும் ,அரைகுறை ஆடைகளுடனும் 

பைத்தியக்காரன் போன்று சுற்றும் 

ஆன்மீகவாதிகளை  சரணடையும் நாடு.

ஊழலால் ஆட்சி செய்தாலும் 

ஆண்டவனிடம்  அவர்களைக்காப்பாற்ற 

மொட்டை ,காணிக்கை,யாகம் செய்யும் நாடு.
ஆண்டவனிடம் நீதி கேட்கும் ஒரு சிறு கூட்டம் ,
ஆண்டவர்களின்,  ஆளுபவர்களின்   தவறுகளை

தண்டனையிலிருந்து காப்பாற்ற   தண்டமிடும் கூட்டம்.

மகாபாரதம் தான் ,
கௌரவர்கள் அணியிலிருந்தே 

பாண்டவர்கள் நலம் விரும்பும்  கூட்டம்,

ஆண்டவன் எவர் பக்கம் ,

மன நிம்மதி மன சாந்தி மன மகிழ்ச்சி 

இதுவே வேண்டும் .

ஆண்டவன் ஆண்ட நாடு ,
ஆன்மீக சக்தி  ஆளும் நாடு.




.

Wednesday, October 15, 2014

இறைவனைத்தேடி

இறைவன்  எங்கே ?

ஆஷ்ரமத்திலா?

ஆலயத்திலா?

சாமியார் மடத்திலா?

ஜோதிடர்கள்  சாஷ்திரத்திலா?

நேர்மையான  உண்மையான  

தியானத்திலா?

மந்திரங்களிலா ?

ஹோம  யாகங்களிலா ?

இவைகளை ஆராய்ந்து பார்த்தால் 

தங்கக் குடம் கொடுத்த தங்க காரிகையும் ,

சாய் பாபா காலில் விழுந்த  தயா வும்  கனியும் 

இடியாப்பச்  சிக்கலிலே.

யாகம் நடத்திய அசுரர்களும் வதைக்கப்பட்டனர்.

ராமர் போன்ற கடவுளையும் விதி விடவில்லை.

ஆகையால்  
நேரடியாக இறைவனை வழிபட்டு உயர்ந்தவர்கள் 
பட்டியலைப் பார்த்தால் அவர்கள் 
இன்றும் உலகில்  வாழ்ந்து ஆன்மீகத்தில் 
மனித தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்.

௧. ஆதி கவி வால்மீகி, காளிதாசர்,ஆய்சி புத்தர்,மகாவீரர்,சங்கரர்,ரமண மகரிஷி,அரவிந்தர், 
பைகம்பர் முஹம்மது நபி, ஏசுநாதர் ,
சீரடி சாய் பாபா .
இறைவனை உண்மையில் ,உள்ளத்தில் ,
கடமையில் நேர்மையில் ,பரோபகாரத்தில் ,
மனித நேயத்தில் 
ஒருமனதுடன் தியானத்தில் தேடவேண்டும்.
இராமலிங்க அடிகளார்,பட்டினத்தார் பாம்பன் ஸ்வாமிகள் என்று பட்டியல் நீளும்.

இறைவனைப் போற்றுவோம்.

ஆன்மீக நெறியில் செல்வோம்.


அது சத்தியம் ,அன்பு,நேர்மை,பொறுமை ,கடமை.மனிதநேயமும் மனிதர்களுக்கான சேவையும் .

Monday, October 6, 2014

iraiyanbu. காதலாகிக் கசிந்து உருகி என்று இருப்பதே இறையன்பு.

அன்பு   ஹிந்தியில்  ப்ரேம் ,ப்யார்  இதை கபீர் இரண்டரை எழுத்து என்கிறார் .

இஷ்க்  என்ற சொல்லும்  இரண்டரை எழுத்து .

        இந்த இரண்டரை எழுத்துஅன்பு  பற்றித்   தெரியாதவர்கள்  பண்டிதர் ஆக முடியாது என்பது அவர் கருத்து.
 

 காதல்  என்பதில் மூன்றாவது நபருக்கு இடமில்லை

.இருவருக்கு இடையில் உள்ளது  மட்டுமே அன்பு.


ஒரு ஆண்டவனுக்கும்  பக்தனுக்கும் இடையில்  காதல் இருக்கவேண்டும்.

காதலாகிக்  கசிந்து உருகி  என்று   இருப்பதே  இறையன்பு.

 இதில்   ஆசை,பேராசை ,பொறாமை, இருக்கக் கூடாது.

எதையும் கேட்கக்  கூடாது.

 இதில் அபிராமபட்டர் ,ஆண்டாள் ,மீரா ,நந்தனார்,கண்ணப்பநாயனார் ,மற்றும் பல  நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு உண்டு.

 இப்படிப்பட்ட  தெய்வீக அன்பு புறப்பற்று இல்லா அகப்பற்று கொண்ட அன்பு

அது ஏற்படவே ஆண்டவன் அருள் வேண்டும்.

அப்படிப்பட்ட  எதையும் எதிர்பார்க்கா அன்புகொண்ட அடியார்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மதம் ஹிந்துமதம்.