Thursday, December 18, 2014

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.






ஆறுமுகம்  நாம்  காணும் ஆசைமுகம்

அன்புமுகம் ;அருள்முகம்;

அறுபடை வீட்டினில் ஆறுமுகம்

அன்பருக்கு அருளும் நன் நெஞ்சம்.

வடக்கே இருந்து வந்து ,

தென்னகம் காக்கும்  கலியுக தெய்வம்.

தேனும் தினைமாவும் விரும்பும் பிரசாதம் ,

பஞ்சாமிர்தம் அவனுக்கு  பிடிக்கும் .

பாலாபீஷேகப் பிரியனவன் ,

பாலமுருகனவன்  பழனியிலே.

தகப்பன் ஸ்வாமியவன் சுவாமி மலையினிலே.

அருணகிரி பிழைபொறுத்து

திருப்புகழ்  படவைத்த தமிழன்பன்.

தாயைப்பாட மறுத்த பொய்யாமொழியை
முட்டையைப்  பாடவைத்த முருகனவன்.

கிருபானந்தவாரியாரின் அருட் கடவுள்,

பாம்பன் சுவாமிகளுக்கு காட்சி

அளித்த  மயூரநாதன் .

அவனியில் அவன் லீலை சூர சம்ஹாரம்.

அவன் மெய்ப்பதம் போற்றுவோம் ,

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.



No comments: