Saturday, June 22, 2013

மண்னும் பொன்னும் ஒன்றே.


அன்பு  என்றால் என்ன?

இதை கபீர்தாசர்  ஹிந்தியில் இரண்டரை எழுத்து என்கிறார்.

ப்ரேம் ,இஷ்க் ,ப்யார்  என்ற ஹிந்தி வார்த்தைகள் 

அன்பைக்குரிக்கும். காதல் என்பதைக்குறிக்கும்.

அன்பு.காதல்  இரண்டரை எழுத்தே .


पोथी पढी -पढी जग मुआ ,पंडित भया  न कोय.
ढाई अक्षर प्रेम का ,सो पढ़े पंडित होय.    

என்கிறார் கபீர்.

 நூல்கள்  படிப்பதால் யாரும் மேதை யாவதில்லை.

அன்பிற்கு இரண்டரை எழுத்து அதை படிப்பவன் மேதை ஆகிறான்.

இது கபீர்  அன்பைப்பற்றி கூறுகிறார்.

இந்த அன்பு இறைவன் மேல்  இருக்கவேண்டும் .

மனிதர்கள் மேல் அன்பு வைத்தாலும் ,
இறைவன் மீது  அன்பு வைத்தாலும் 
எதையாவது அவர்களிடம் இருந்து
 எதிர்பார்த்தால்  மிஞ்சுவது துன்பமே.
இந்த அன்பு எதையும் எதிர்பாராமல் 
இருக்கவேண்டும்.
இது நிரந்தரமாக இருக்கவேண்டும்.

இதை சத்திய சாய்பாபா கூறும்போது  
நாம் இன்று ஒரு இறைவனை வழிபடுகிறோம்.
இன்றைய எனது பேச்சில் ராம மகிமை என்றால் 

ராமா ,ராமா என்று இங்குள்ள  பக்தர்கள்  கூறுவர்.

மாலையில் மற்றொரு தேவி உபாசகர்
 உபன்யாசம் கேட்டால் மனது  தேவியைநாடும்.
நண்பர்கள்,உற்றார் உறவினர்கள் 
இந்த இறைப்பற்றையும் அன்பையும் 
வெவ்வேறு நாமங்களில் ,வெவ்வேறு உபாசன முறைகளில் 
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
பல ஆஷ்ரமங்கள். பல ஆலயங்கள். பல மதங்கள்.

இந்த இறைவனின் மேல் உள்ள உண்மை அன்பு என்பதை மாற்றி.
அதில் ஒரு மன சஞ்சலம்.
*********
 இதைப்பற்றி நான் மிகவும் சிந்தித்தேன்.
இறைவன் மேல் உள்ள பற்று  இறைவனின் நாமங்களால் 
எப்படி எல்லாம் சஞ்சலப்படுகின்றது.

ஒரு ஜோதிடரிடம் தங்கள் குடும்பத்தின் துன்பம்
 தீர ஆலோசனை கேட்டார் ஒருவர்.
ஜோதிடர் சோழி உருட்டினார்.
ஜாதகம் பார்த்தார் .
பின்னர் உங்கள் மூதாதையர் செய்த குல தெய்வ வழிபாடு 
நீங்கள் செய்யவில்லை என்றார்.
தெய்வங்கள் பல. அதில் குலதெய்வம் பற்றி சிந்திக்காத குடும்பம் அது.
இப்பொழுது இறைவனை வழிபடவேண்டும்.
குலதெய்வம் எது என்பதில் குழப்பம்.

வீட்டில் உள்ளோரை விசாரித்தால் .
நாம எல்லாக் கோயிலுக்கும் தானே போறோம்.
பாட்டி  முருக,முருகா என்றே சொல்லுவார் என்று ஒருவர்.
மற்றவர்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு தெய்வம் கூற 

குல தெய்வம் எங்கே?யார்?எப்படி வழிபாடு செய்யவேண்டும் ?
என்ற பிரச்சனை தீர ஒரு ஜோசியரைத் தேட ஆரம்பித்தனர்.

இறுதியில் ஒரு கிராமதேவதை என்ற முடிவிற்கு வந்தனர்.

அது எங்கே? என்ற தெளிவு வரவில்லை.

இப்படி தெளிவில்லா பக்தி.

மற்றொரு ஜோதிடர் நீங்கள் வழிபட்ட கோவில் சரிதான்.

அங்குள்ள கோயிலில் கிழக்குப்பக்கத் தூணில் மேற்குப்பாத்த 

ஒரு அம்மன் சிலை உள்ளது..அது தான் அந்தக்  கோயிலைக்காக்கிறது.

அதை வழிபடவில்லை. அதை மீண்டும் சென்று வழிபட்டு வாருங்கள்  என்றார்.


இப்படி இறைவனை வழிபடுவதில் எத்தனை ஐயங்கள். குழப்பங்கள்.

இதற்கு ஒரு  பழமொழி 

मन चंगा तो कठौती  में गंगा.

மனத் தூய்மை இருந்தால்,

வீட்டுக் கிண்ணத்தில் உள்ள நீரில்

 கங்கை இருப்பாள். 

 இதற்கு ஒரு உண்மை  சம்பவம்.

 இந்திக் கவிஞர் ரைதாஸ்  ஒரு காலணி செய்யும் தொழிலாளி.

அவர் கங்கைக்கரையில் இந்த தொழில் செய்துவந்தார்.

தினந்தோறும் கங்கையில் நீராட வரும் அந்தணர்,

ஒரு நாள் ரைதாசிடம் ,

நீ கங்கையில் ஸ்நானம் செய்ய வில்லையா?என்றார்.

அதற்கு நான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் ,

எனது பக்தி தூய்மையானது என்றார்.

பின்னர்,அந்த அந்தணணிடம்  ,

கங்கை அம்மாவிடம் நான் சொன்னதாகச் சொல்லி 

 ஒரு வெகுமதி பெற்றுச் செல் என்றதும் 

அவ்வாறே அந்தணன்  நதியில் சென்று கேட்டதும் கங்கா தேவி 

 விலை மதிப்பில்லா ஒரு   கால் சலங்கை அளித்தாள்.

சுய நலமுள்ள  அந்தணன் மீண்டும் ரைதாசைப் பார்க்காமல் 

அந்த சலங்கையை தம் மனைவியிடம் கொடுத்தான்.

மனைவி மகிழ்ந்து ,

இந்த அபூர்வமான  சலங்கையை   அரசரிடம் கொடுத்தால்,

மகிழ்வார் என்றாள்.

அரசனின் மனைவி சலங்கையில் அதிகம் ஆசை கொண்டு 

 மற்றொரு சலங்கை வேண்டும் என்றதும் 

அந்தணன்  வேறுவழி இன்றி

 ரைதாசை மீண்டும் வேண்டினான்.

 அந்த காலணி தொழிலாளி

 மீண்டும் கங்கையிடம் பெற்றுச்செல் என்றார்.

அந்த உண்மையான இறைப்பற்று இருந்தால்.

கொடுக்குற தெய்வம் கூரையைப்பிய்த்துக் கொடுக்கும் 

என்ற தீவிர அன்பு,பக்தி இருந்தால் 

இறைவனை வழிபடுதலில் சஞ்சலம் இல்லாமல் இருந்தால்,

இயற்கையை நாம் வழிபட்டால்.

இறவன் அருள் நமக்குக் கிட்டும்.

துருவனின் பக்தி,பிரகலாதன்,கண்ணப்பன்,நந்தனார் ,விட்டல்தாஸ் 

எத்தனையோ பக்தர்கள்   இறைவன் மேல் மட்டும் அன்பு வைத்தவர்கள்.

பல சோதனையிலும் சாதனைகள் புரிய ,

குறைந்த பக்ஷம் நமது  வட்டத்தில் 

இறைவன் மேல் மட்டுமே அன்பு வைக்க வேண்டும்.

लाली मेरे लाल की ,जित देखो तित लाल.
लाली देखन मैं गयी ,मैं भी हो गयी लाल.

என் அன்பரைப் பார்க்க நான் சென்றேன்.

அங்கிங்கேனாதபடி எங்கும் அவரே காட்சி அளித்தார்.

நான் அன்பரைக் காணச் சென்றால்  நானே அன்பராகிவிட்டேன்.

கபீர் தன்னை பெண்ணாகவும்

 இறைவனைக் காதலனாகவும்

 எண்ணி  பாடிய  தோகை இது.

இப்படி இறவன் மேல் உள்ள காதல் ஒன்றாக ஐக்கியமாக வேண்டும்.

ஆண்டாள் போல்,மீரா போல்.

இவ்வித  பக்தியில் இறைவன் சக்தி மட்டுமே .

நாம பேதம்  வேண்டாம்.

இறவன் ஒருவனே.

மண்னும் பொன்னும் ஒன்றே.

அதனால் உருவாக்கப்படும் பண்டங்கள் வேறு.

ஆதி  மூலம் ஒன்றே.

அன்பே ஆண்டவன்.















Friday, June 21, 2013

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

நாத்திகம்  பேசும்  நாத்தீகர் களே!

இயற்கைப் பேர் அழிவிலிருந்து  பக்தர்களை ஆண்டவன் காக்க வில்லை

என்ற குற்றச்சாட்டு.

உண்மை -பொய் ,நியாயம் -அநியாயம்  நல்லது-கெட்டது

அறியும் அறிவு படைத்த பகுத்தறிவு படைத்த மனிதன்

இயற்கையை அழித்து  இன்னல் தேடிக்கொண்டால்  யார் குற்றம்.

திருடாதே  தண்டனை கிடைக்கும் என்றால் திருடி தண்டனை பெற்றால்  யார் குற்றம்?

மாற்றான் மனைவி /கணவன்  மேல் ஆசைப்பட்டு ,

கள்ளக்காதலனுடன் சேர்ந்து /காதலியுடன் சேர்ந்து கொலை செய்தால் யார் குற்றம்.

இருவருமே இறைவனை வழி படுவோர்தான்.

ஊழல்   அரசியல்  வாதிகளை வளர்த்துவிடும் மக்கள்,

பசுமை வயல்களை வீடுகளாக .பொறியியல் கல்லூரிகளாக

மாற்றும்   குற்றம் யார் குற்றம்?

ஏறி-குளங்கள்.மலைகள் காணாமல் போவது யார் குற்றம்.

பகுத்தறிவு பிரசாரம் செய்யும் நாட்டில் ,தந்தை பெரியார் பிறந்த நாட்டில்.

ஆண்டவனுக்கு பாலாபிஷேகத்தை வீண்,அதை ஏழைக்குழந்தைகளுக்கு

கொடுக்கலாமே  என்ற தலைவரைப் பின்பற்றி

தனிக்கட்சிகள் தொடங்கி  நாற்பத்து நான்கு ஆண்டுகள்

மாறி-மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி உள்ள நாட்டில்

நடிக-நடிகை கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்கள்

கோயில் கட்டும் வெறியர்கள் உள்ள நாட்டில்,

ஆலயங்களின் தெப்பக்குளங்கள்  வறண்டு கிடக்கும் நாட்டில்

ஆலயங்களின் சொத்துக்களை அமுக்கி வாழும் நாட்டில்.

உண்டியல் பணத்தை   கொள்ளை இடும் நாட்டில்,

ஆண்டவன் காப்பாற்றவில்லை என்பது பகுத்தறிவு வாதமல்ல.

இயற்கைச் சீற்றத்திற்கு சட்டத்திற்குப் புறம்பான

அரசியல் மற்றும் சுநல வாதிகளே காரணம்.

 இறைவனல்ல. இறைவனல்ல. இறைவனல்ல.

பழனி வையாபுரிக் கண்மாய்  பாதி பேருந்து நிலையமானது ,

கிரி வீதி கடம்பவனம் அழிந்து ,பழனி ஒரு

வணிக ஸ்தலமாக மாறுவது,

பேருந்து நிலையம் இறங்கினால்  பன்னீர் ஜவ்வாது வாசனை போய்

சிறுநீர் ,சாக்கடை துர்நாற்றம்.


இறைவன் ஏன் காப்பாற்றவில்லை என்றால்.

ரோப் கார் அங்கு நடக்கும் அராஜகம் ஆண்டவனுக்கே பொறுக்காது.

இறைவானா?இயற்கையா ?

மனிதனின் தவறா ?  பகுத்தறிவு மன சாட்சியுடன் சிந்திப்பீர்.

இயற்கை செயற்கையானால் இயற்கையின் சீற்றம் உலக அளிக்கும்.

விஞ்ஞான  உலகின் வெளிப்படை  சூத்திரம்.

வன போஜனம் ,வன மஹோத்சவம் என்பது போய்

வன அழிப்பு  ,

பகுத்தறிவுப் பாசறைகள் இதைப்பற்றி பேசுமா?

ஆண்டவன் ஆண்டவன் என்ற ஒரே இல்லை கோசம்.

இவர்கள் பிரச்சாரத்தினால் கட் அவுட் பாலாபிஷேகம்.

இதைப்பற்றி பேசா பகுத்தறிவுப் பிரசாரம்

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

Thursday, June 20, 2013

.உன் குழந்தை நான். காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.

அன்பே ஆண்டவன் 
அன்பு என்றாலே கொடுப்பதே.

பெறுவதற்காக  அன்பு
 என்றால் சுயநலமே.
இறைவனிடம் செலுத்தும் அன்பு ,
அவன் கருணைக்காக.

அதையும் நாம் ஒரு வேண்டுகோளாக இருக்கக் கூடாது.

நீ  படைத்த  உடல்.!புகழோ, இகழ்ச்சியோ,
ஏற்றமோ  , தாழ்வோ,

வறுமையோ ,வளமோ , எல்லாமே 

இறைவன் செயல்.

துன்பமும்  இன்பமும்  நீ தருபவையே!

உன் குழந்தை  நான்.

எனக்கு வரும் சிறுமையும் பெருமையும் 
ஆரோக்யமும் நோயும் 
அனைத்தும் உன்னால் எனக்கு வரக்கூடியவை.
அல்லது தீரக்கூடியவை.

நான் உன்னிடம்  அன்பும் ,பக்தியும் செலுத்துகிறேன்.

என்னை உலகில்  படைத்த நீ,
எப்படி என்னை ஆட்டிப்படைத்தாலும் 

பக்தியும் உன் மீது அன்பு செலுத்துவதும் என் கடன்.

உன் குழந்தை  நான்.
காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.




Friday, April 26, 2013


 மனிதன்    மிருகம்  தான்.

அவனுக்கு மிருக குணம் தான்.

அவனை மனித குணமாக மாற்ற

ஒரே மார்க்கம் பக்தி தான்.

ஆனால் , அந்த மார்க்கம் பல வழிகளில்

மக்களை சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது.

காரணம்    நாத்திகவாதமா? இல்லை.

ஆத்தீகர்களின்  ஆணவம்.சுயநலம்.

ஆடம்பர வாழ்க்கை.

ஆண்டவனின் அருளுள் பெற  பூஜைகள்.

சிறப்பு வழிபாடுகள்.

வேள்விகள். சடங்குகள்.
மடாலயங்கள்.
ஆஷ்ரமங்கள்.
தங்கம் வைரம் நவரத்தினங்கள்.

ஆனால் ஆன்மீக ஆதி வழிகாட்டிகள்
 வாழ்ந்த வாழ்க்கை
வெள்ளி சிம்மாசனத்தில் அல்ல.
பாலா/தேனா /பன்னீரா/ அல்ல.
 அருகம்புல்,துளசி,வில்வம் எருக்கு என்று
எளியோருக்கும் கிடைக்கும் எளிய பொருட்கள்.
அவையும்  ஆரோக்யத்துடன்  இணைந்தவை.

இன்று வெளிநாட்டு வாசனைப்பொருள்கள்.

மின்சார சரவிளக்குகளால் ஆனா இறை உருவங்கள்.

ஆபாச ஆட்டங்கள்,இசைகள்,
தெய்வீகப்பாடல் பாடும் போதே பக்திப்பாடல் போதும்;
திரைப்படப்பாடல் பாடு என்று கூச்சல் குழப்பம்.
இறைவனை துரிதமாக வழிபட முக்கியபிரமுகர்கள்,
மிகமிக முக்கியப்பிரமுகர்கள்,
நுழைவுக்கட்டணம்.
அதிலும் தில்லுமுல்லுகள்.
அங்குள்ள கடைகளில் உள்ள அதிக விலை .
சில்லறைத் தட்டுப்பாடு.
,இயற்கை உபாதிகளுக்குப் படும்  அவஸ்தைகள்.
ஏமாற்றும் பேர்வழிகள்.

ஆடம்பர பக்தி ;

காதலாகிக் கசிந்துருகி கண்ணீர்மல்கி
என்ற இறைவழி  பாடு எங்கோ சென்று,
பணமே  இறைவன் என்றே
ஆஸ்திகர்கள்  இறைவரம் பெற
பொருளற்ற பொருளாதாரம்
என்று ஊழல் ,கையூட்டு ,கறுப்புப்பணம்
கனகக் கோயில்கள்.




Friday, April 12, 2013

யாரே அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!

 இவ்வுலகில்  பிறந்த மனிதர்கள் ,

இறைவனின் அபூர்வ ஆற்றல் அறிந்தும்,

இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல்,

இன்னல்களை இரு கரங்கொண்டு  வரவேற்கின்றனர்.

  இப்படித்தான் .  எப்படி ?

இறைவன் அளித்த   அறிவை,

நல்வழி தீவழி  என்று புரியும்

அறிவை அறவழியில் பயன் படுத்தாமை.

அவன் அளித்த  ஆற்றலைக்கொண்டு,

நேர்மையற்ற வழியில் செல்லுதல்.

ஒரு அரசு அதிகாரி,

ஆட்சி செய்யும் அமைச்சர்கள்,

தங்கள் அளவுக்கு மீறி கைஊட்டம்

ஊழல்  புரிந்தால் தான்

இவ்வுலக வாழ்க்கை என்றே

வாழ்கின்றனர்.

பணம் சம்பாதித்து   சுகமான வாழ்க்கை

வாழ்ந்தாலும்  அளவுக்கு மீறி

சம்பாதிக்கின்றனர்.

விளைவு?

மன நிம்மதி இன்றியே வாழ்கின்றனர்;

மன சாக்ஷி   அவர்களை மகிழ்விக்காது.

குவியும் செல்வம் தங்கள் செல்வங்களுக்குப்

பயன்படுமா?அவர்களை ஆனந்தமடையச்செய்யுமா ?

அப்பொழுது தான் சாத்தனின் சக்தி வேலை செய்யும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

அமைதியற்ற நிலை.

ஒருவர்  குவித்த பணம்  மற்றவர்களுக்கு

யாருக்கோ பயன் படும்.

இந்த நிலையை  அவ்வையார் பாடுகிறார்

பாடு பட்டுத் தேடி  என்கிறார்--அரும்பாடு பட்டு ,
அதாவது அவன் படும்   பாடு
அந்த செல்வத்தை பல தலைமுறைக்கு சேர்த்து

அதற்காக பல நீதி-அநீதி முறைகளைப் பின்பற்றி,

அந்தப்பணம்  யார் அனுபவிக்கிறார்கள்?

பணத்தைப் புதைத்து வைப்பவர்கள்,

கேடு கேட்ட ம்மநிதர்கள் என்கிறார்.

கூடிவிட்டு  ஆவிதான் போன பின்

இந்த செல்வங்களை யார்தான் அனுபவிப்பார்கள் .

இறைப்பற்றுடன் அவன் அளிக்கும்  பதவியை ,

அதிகாரத்தைப் பலருக்கும் பயன் படுத்த வேண்டும்;

கடமை செய்யாமல் ஊழல் புரிவோர்  பாவிகள்.

அவர்கள் செல்வம் யாருக்குப் பயன்படும்?

ஒருவருக்கும் பயன் படாது.

தீயவழியில்  சேர்த்த பணமே துன்பத்திற்குக்  காரணம்;

விபத்து  நோய்களுக்குக் காரணம்,

அந்திம காலத்தில்
 பல வேதனைகளை
அனுபவிப்பதற்குக்  காரணம்.

ஆண்டவன் அளிக்கும் பதவிகள் மனிதனுக்கு

ஆண்டவன் வைக்கும் பரிசோதனை.

ஆண்டவன் அளிக்கும் செல்வம் ஒரு பரிசோதனை.

அதில் தோற்றவர்களுக்கு  நிம்மதி இருக்காது.

அவனால் வேதனைப்படும் ஆத்மாக்கள் சபிக்கும்;

அது  புரியாமல் தீய வழியிலேயே மனிதன்

பணம் சம்பாதிக்கிறான்.-விளைவு ?

எத்தனை கோடீஸ்வரர்களுக்கு  வாரிசுகள் இல்லை.

இறுதிகாலத்தில் புத்திர சோகத்துடன் இறக்கின்றனர்.

பலவிதமான துன்பங்கள்;நோய்கள்;மனதில் வேதனைகள்;

பாடலை பாருங்கள்:

பாடுபட்டுத் தேடிபணத்தைப்
 புத்தைத்துவைத்த கேடுகெட்ட மானிடரே -!-கேளுங்கள்

கூடு விட்டு ஆவிதான் போன பின்

 யாரே  அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!








Friday, April 5, 2013

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா?

உலகில்  மனிதன் அறிவுடன் பிறந்தாலும் அந்த அறிவுத்திறன் வேறுபடுவது
விந்தையிலும் விந்தை.  அது தான் இன்றைய அறிவியல் உலகில் எத்தனை பெரியார்கள் தோன்றினாலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆலயங்களின் உண்டியல் நிரம்புகிறது. அர்ச்சகர்கள் மகிழ்கிறார்கள்.
அதே சமயம் விபத்துக்கள்,கொலை,கற்பழிப்பு,லஞ்சம்,ஊழல் ,தற்கொலை,கொள்ளை,வழிப்பறி,கலப்படம்,எடை குறைவு (பொருள்),கருப்புப்பணம்,கறுப்புச்சந்தை,தேர்வுத்தாள்,தேர்வு மையம் அனைத்திலும் ஊழல்.

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா? பெருகிய அறிவு தீய வழியில் செல்கிறதா?    

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind  என்ற வாழ்க்கையில் தான் அனைவரின் நிலை. சாமியார்களும் நிம்மதி இல்லை.அவர்களும் பல ஊழலில் சிக்குகின்றனர் . இவைகளை கலியுக தர்மம் என்பதா?மக்களின் சயநலம் என்பதா? அறிவு  தீய வழியில் செல்கிறதா ?ஆண்டவனின் லீலை என்பதா?

எனது சிந்தனையில் அதர்மத்துக்குத் துணைபோகிறவர்கள் அதிகம்.

இதற்காக  நாம் மனித ஆற்றலுக்கு அப்பால் இயக்கும் இறைவனை வழிபடுவோம்.

சிரத்தை;பக்தி.

நமது   மனம் என்பது கடல் அலை போன்று ஓயாமல் சிறிய-பெரிய பழைய-புதிய  எண்ணங்களால் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இதை நிலைப்படுத்த  சாதரணவர்களால்    முடியாது.  விளையாட்டு வீரர்கள் மனம் 

ஒருநிலைப்படுத்துவார்கள் .கேரம் விளையாட்டில் வெல்பவர்கள் அடிப்பான் ,காயின் ,அந்த குழி  மூன்றையும் ஒரே கவனமாகப்  பார்த்து அடிப்பார்கள்.
மன நிலைப்பாடு இல்லாதவர்கள் கண்ணை மூடி எதையோ அடிப்பார்கள் அடிப்பான் எதிலோ மோதி ஒருகாயின் விழுந்துவிடும்.
 இதை குருட்டா ன்போக்கு /மாட்டடி  என்பர். மன ஒருமைப்பாடு உள்ளவர்கள் கேரம் விளையாட்டில் எப்பொழுதும்  வெல்வர். அதிகம் பேசமாட்டார்கள். குருட்டான் போக்கில் தடால் அடி அடிப்பவர்கள்  வெல்ல முடியாது. அவ்வாறே மன சஞ்சலம்  இல்லாதவர்கள்  தான் எதிலும் வெல்ல முடியும்.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் /இறை பக்தியில் ஈடுபடுபவர்கள் 
கவனம் சிதறாமல் இருப்பார். அபிராம பட்டர் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

தேவியின்  தியானத்தில்  மூழ்கி இருந்த அபிராமி பட்டருக்கு அரசன் வருகை தெரியவில்லை. அரசருக்கு கோபம் .அன்று முழு இருட்டு. அமாவாசை.மன்னர்    கேட்க அவர் தேவியின் தியானத்தில்  பௌர்ணமி என்று சொல்ல ,அதை நிரூபிக்கவேண்டிய இக்கட்டில் இருந்து தேவி காப்பாற்றிய கதை அபிராமி அந்தாதி படிப்போருக்குத் தெரியும்.

அவ்வாறே நியுடன் முதலியோருக்கு வைத்த உணவை மற்றவர்கள் சாப்பிடுவார்கள். இவர்களிடம் கேட்டால்  ஆராய்ச்சியில்  ஈடுபட்டமணம் பசி அறியவில்லை. நான் சாப்பிட்டகிவிட்டது என்பர். இதுதான்  மன ஈடுபாடு.

புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு  பலர் மனம் பல கற்பனையில் மூழ்கும். எப்பொழுதும் கையில் புத்தகம் இருக்கும். மதிப்பெண் வராது. சிலர் படிக்கும் நேரம் குறைவாக இருக்கும் .மதிப்பெண்கள் அதிகம் எடுப்பார்கள் .

  சிலர் படிக்கவே  மாட்டார்கள். அதிகமாக மதிப்பெண்கள் பெறுவார். பால கங்காதர திலகர் வகுப்பறையில் எதையும் குரிப்பெடுக்கமாட்டா. ஒருமுரு ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. எழுதிவிட்டாயா ? என்று கோபமாக கேட்டார்.
உடனே திலகர் எழுதிவிட்டேன் என்றார். எங்கே?ஆசிரியரின் அடுத்த வினா?

திலகர் தன தலையில் அடித்து இங்கே என்றார். ஆசிரியர் படி என்றார். ஆசிரியர் கூறியவற்றை அப்படியே கூறினார்.
இது ஒருவகையான தியானம்.

 நம்மில் பலருக்கு கவனச் சிதறல்கள் அதிகம். அதனாலேயே  நாம் தோல்வியைத் தழுவுகிறோம்.
அது  எப்படி ?நமக்குத் தெரியாது.

அதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தியானத்தில் ஈடுபடவேண்டும்.

அந்த தியானம் வால்மீகி,அருணகிரிநாதர் போன்று ஏற்படவேண்டும்.

ரமணமஹரிஷி  மௌன சாமியார். அவர் வரலாறு  அவர் மன ஒருமைப்பாடு 
நாம் காணும் இன்றைய சாட்சி. 

இவ்வாறான ஒருமைப்பாடான பக்தி  நாம் பெற மனதை அலைபாயவிடாமல் ஆழ் கடல் போன்று   வைக்க ஒரே வழி  தியானம்.இறையன்பு;இறைப்பற்று;
சிரத்தை;பக்தி.