Monday, October 5, 2015

அங்கே தான் அமானுஷ்ய சக்தி

என்ன உலகம் என்று
அலுத்துக் கொள்பவர்கள்
உலகை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்


மற்றவர் மூளை இயக்க ஒருவர்
பாட ஒருவர் ஆட்டுவித்து புகைப்படம் எடுக்க ஒருவர்
இத்தனைக்குப்பின் ஒரு ரஜினி

விஜய் கட் அவுட் பால்
ஆண்டவன்
கல் சிற்பி பூ மாலை அலங்காரம்
அர்ச்சகர் தர்மகர்த்தா
நன்கொடையாளர்

ஒப்பிட்டால்
கட்அவுட் பால்
ஆட்சி அரசியல்
புகழ்
பலரின் உழைப்பால்
ஒருவருக்கு கிடைப்பது
அங்கே தான் அமானுஷ்ய சக்தி
ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாட
கூட்டம்
 —
ஆட்சி ஆளர்கள் ஆன்மீக வாதிகள்
நாட்டுக்காகவே அனைத்தையும்
தியாகம் செய்து ஏழ்மை நிலையில்
உள்ளவர்கள்
நாட்டையே சுரண்டி ஆடம்பர வாழ்வு
வாழ்பவர்கள்
இறைவனே சரணாகதி என்று
வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள்
சித்தர்கள் யோகிகள்
முற்றும் துறந்தவர்கள்
அதேநேரம் ஆடம்பர ஆஷ்ரமவாசிகள்
அவர்கள் ஏமாற்றுவார்கள் என்று
தெரிந்தே கூடும் கூட்டம்
ஓட்டளிக்கும் கூட்டம்
உண்மை பேசுபவர்கள்
நிலை
லஞ்சம் வாங்குவோ் நிலை
ஆராயந்தால்
அனைவருக்கும் ஒரே மாதிரி நிலை தான்
சொந்த நிலை
நொந்த நிலை
எதுவுமே கூட வராத நிலை
அதை உணர்ந்தால்
வாழ்க்கை இன்பமே
இருக்கும் வரை சுகமே

No comments: