Saturday, August 31, 2013

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இறைவன்  என்பவன் தனிப்பட்ட ஆற்றலுடையவன்.

அவனின்றி அணுவும் அசையாது என்பர்.

நமது சனாதன தர்மத்தில்  இறைவன் அவதாரம் எடுத்து துன்பங்களைப்  போக்குவார் என்று கூறப்படுகிறது.

சிவனின் திருவிளையாடல்கள் ,விஷ்ணுவின் தசாவதாரம்  என்றெல்லாம்

பெரியபுராணம் ,விஷ்ணு புராணம்  விரிவாக விளக்குகிறது.

கடவுள் பற்றி விளக்கும் போது த்வைத்துவம் ,அத்வைத்துவம் ,விஷிஸ்டாத்வைத்துவம்  என்று  மூன்றாச்சாரியர்கள் ஸ்ரீ சங்கரர் ,மத்வர் ,ராமானுஜர்  விளக்கி உள்ளனர்.

இப்பொழுது  பல பாபாக்கள் தங்களுக்கு பாலாபிஷேகம் ,தங்கக்க்ரீடம் ,மலர்க்க்ரீடம் ,மலர் அர்ச்சனை செய்து தன்னை சிவன்,அம்மன்,விஷ்ணு போன்ற  தெய்வங்களின் அவதாரமாக கூறிக்கொண்டு பொன்னும் பொருளும்  கோடிக்கணக்கில் சேர்த்துவருகின்றனர்.

இவர்களில் போலிகள் சிலர் இருக்கின்றனர் என்பதறிந்தும் மக்கள் ஏமாறும் வராய்   ஏமாறட்டும்    என்ற ஹிந்து அமைப்புகள் போக்கு

இந்துமத ஒற்றுமைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இந்துக்களுக்கு கிட்டும்.

அன்பே ஆண்டவன்.

No comments: