Tuesday, February 13, 2018

காஞ்சி சிவாலயங்கள்.

காலை வணக்கம்.
ஓம் நமஹ சிவாய.
பகவானை வழிபடுகிறோம் .

பாவமும் செய்கிறோம்.
பயம் பகவானிடம் உள்ளதா ?

என்றால் 

சனாதன தர்மத்தில் இல்லாததுபோலும் 

இருப்பதுபோலும் இரட்டை வேடம் தான்.

சுயநலம் பகவானின் மீதுள்ள

பயத்தைப் போக்கிவிடுகிறது என்பது ஒரு பக்கம்.

பொது நலம் இறைவனின் மீதுள்ள 

அச்சத்தை அதிகரிக்கிறதா ?என்றால் 

அதுவும் புரியவில்லை. 

உண்மையான தொண்டர்களின் மனவருத்தம் ,

பராமரிக்காத ஆளாயங்களின் நிலை, 

அங்குள்ள அறிய கலைப் பொக்கிஷங்கள், 

தெய்வீக அலைகள்,

இன்னும் பராமரித்தால் தெய்வத்தின் 

அருள் எவ்வளவு கிட்டும்?

இன்னும் அனைவரும் சிறப்பாக வழி பட்டால் 

எவ்வளவு சக்தி கிடைக்கும் ?

ஏன் இந்துக்கள் ஒன்று பட்டு இந்த பொக்கிஷங்களைக் 

காக்க ஒற்றுமையாக பாடுபடவில்லை.
சுயநலமா?

பொருளாதாரமா ? 

பொறாமையா? 

வேற்றுமைகளா?

ஜாதி சம்பிரதாய உட் பூசல்களா ?

முழு அக்கறை ஏன் இல்லை?

அலட்சியம் ஏன்?

கடவுளிடம் நம்பிக்கை இல்லையா ?

 அறிய தெய்வீக ஸ்தலங்களை  ஏன்  பாதுகாக்க வில்லை.
௧௪௮ சிவாலயங்கள்

காண்பிக்கப்படும் என்றார்கள்.

அப்பர் இறைப்பணிக் குழு

இச்செயலைச் செய்கிறது.

பாராட்டுக்கள் .
காலை ஏழு மணிக்கு 

காஞ்சி மாநகரத்தில் உள்ள

சிவலிங்கங்கள் தரிசனம் செய்ய

ஆரம்பித்தோம்.

இரவு ஏழு மணிவரை தரிசனம். 

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள்.

சிவாலயங்கள் பார்த்தோம்.

அங்குள்ள சிவனின் மகிமைகள்,

சிவ வழிபாடு மிகவும் 

சிறப்பாக இருந்தது.
காஞ்சிமாநகரம் ஒரு சுற்றுலா நகரம்.

இத்தனை சிவாலயங்கள் பக்தி சிரத்தையுடன் 

பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த சிவாலயங்களைச் சுற்றி
வீடுகள். 

தூய்மையற்ற

பராமரிப்பு.

ஆனால் பக்தர்கள் எதையும் பேசவில்லை.

நேராக செல்வது இறைவனை வழிபடுவது,

தரிசித்த சிவனின் பெயரை

குறி த்துக்கொள்வது,

யாரும் ஓம் நமஹ சிவாய என்று

இறைநாம கோசங்கள் எழுப்பவில்லை .

ஆனால் அமைதி வழிபாடு.

இதில் சில ஆலயங்களில் 

பெண்கள் தான் தீபாராதனை .

அனைத்துக் கோவில்களும்

வீட்டிற்குள் இருப்பது போல் சுற்றிலும் வீடுகள்.

அந்த அப்பர் இறைப்பணி மன்றம்
பன்னிரண்டு ஆண்டுகளாக
 இந்த இறைதரிசனம் செய்யும் ,

செய்விக்கும்

பணியைச் செய்துவருகிறது.

இத்தனை கோயில்கள்
.
சில வீடுகளுக்குள்.

சில கடைகள் வளாகத்தின் நடுவில்.

சில ஆலயங்கள் முன் இஸ்லாமிய

சகோதரர்களின் கடைகள்,
கார் மெக்கானிக்கல் செட்.
சிவராத்திரி அன்று நான் தரிசித்தது

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள். 

இன்னும் தரிசிக்காத ஆலயங்கள் எண்பத்தெட்டு. 

இந்த நூற்றி நாற்பத்து எட்டு ஆலயங்களின் 

பெயர்கள் அச்சடித்த பிரதிகள் 

சுற்றுலாவில் கலந்து கொண்ட 

அனைவருக்கும் அளிக்கப்பட்டன. 

கலந்து கொள்ளாத பக்தர்களுக்கும் 
வழங்குகிறார்கள்.
காலையில்   ஆரோக்கியமான சிற்றுண்டி.

கேசரி,இட்லி,பொங்கல்.
ஹிந்து மதப் பற்றாளர்கள், 
இந்து முன்னணி என்று

இந்து மதத்திற்குப்போராடும் பல குழுக்கள்,

ஏன் இந்த நலிந்த நிலையில் உள்ள 

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களைப் 

பிரபலப்படுத்தவில்லை?
சைவ வைணவ  வேறுபாடா ?
ஜாதி-சம்பிரதாயங்களா ?

ஆக்கிரமித்தவர்கள் மீதுள்ள பயமா?

அரசியல் கட்சிகள் மீதுள்ள பயமா ?

நிச்சயமாக ஆலயங்கள் 
கட்டிய காலங்களில் 

இந்த ஆக்கிரமிப்பு,
 சுற்றி இல்லங்கள் ,

கடைகள் இருந்திருக்காது. 

சில  புதிதாக  தோன்றியதாகவும்

இருக்கலாம்.

ஹிந்து மதத்தின் ஆழ்ந்த பற்று ,

பக்தி, சிரத்தை உள்ளவர்களில் 

எத்தனை பேருக்கு இந்த முக்கியமாக

பிரபலமில்லா சிவாலயங்கள் பற்றி தெரியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உள்ள
 இந்த குட்டி குட்டி சிவாலயங்கள் பற்றி தெரியும் என்பது தெரியவில்லை..

(நாளை தொடரும்.......)


Friday, January 19, 2018

ஆடம்பரங்கள் தேவையா ?

     இன்றைய  உலகில்  பணம் ,பணம் , பணம்.

காரணம்    வீண்  ஆடம் பரமே .

திருமணம் வெளிஉலகில்  தன்  செல்வாக்கை காட்ட.
 ஆனால்   இதற்காக  கடன் வாங்குவோர் மன நிலை ?

பலர்  திருமணம் செய்ய யாசகம் .

   பக்தி --அதற்கு யாசகம்.

திருப்பதி செல்ல உண்டியல்.
அய்யப்ப  பக்தர்கள் உண்டியல்.
பஜனை உண்டியல்.
   இப்படி ஆடம்பரங்கள் தேவையா ?
புரியா    நிலை.

  சித்தர்கள், ஞானிகள்  மறைவிற்குப்பின் தான்
அவர்களின்  நினைவு  ஆடம்பரமாக .

Thursday, January 4, 2018

அ தெ ன்ன  மன சா ட் சி?
 ஆண்டவன் அருளே!
நல்ல நே ரம்  மட்டும்  இல்லை.
கெ ட் ட  நே ரம் உண்டு.
சு ப சி லவு கள்
மட்டும் அல்ல
வீ ண் வி ரயங் களு ம்
உண்டு.
ஆண்டவன் படை ப் பி ல்
மலரு ம உண்டு.
மு ள் ளு ம்  உண்டு.
நல்ல எண்ணங்கள்
தீ ய  எண்ணங்கள்
பலம், து ர் பலம்
நீ தி, அநீதி
அந்த  சூ க்ஷு மம்
அறி ந் தவன்
அந்த விஷ்வ நா த னே.

Wednesday, January 3, 2018

நு ண் அறி வு

அ தெ ன்ன  மன சா ட் சி?
 ஆண்டவன் அருளே!
நல்ல நே ரம்  மட்டும்  இல்லை.
கெ ட் ட  நே ரம் உண்டு.
சு ப சி லவு கள்
மட்டும் அல்ல
வீ ண் வி ரயங் களு ம்
உண்டு.
ஆண்டவன் படை ப் பி ல்
மலரு ம உண்டு.
மு ள் ளு ம்  உண்டு.
நல்ல எண்ணங்கள்
தீ ய  எண்ணங்கள்
பலம், து ர் பலம்
நீ தி, அநீதி
அந்த  சூ க்ஷு மம்
அறி ந் தவன்
அந்த விஷ்வ நா த னே.

Tuesday, January 2, 2018

தியானயோகம் --கீதை -௪.


     தியான யோகப்பயிற்சி

 செய்வதால்  
மனது 
அலைபாயாமல் 
பிரம்மத்திலேயே
அடங்கி  இருக்கும்.
ஆத்மாவால்  ஆத்மா  கண்டு
மகிழுறும்.
தியான யோக நிலையில்
புலன்களுக்கு தென்படாத,
ஞானத்தால் கிரகித்து
அனந்த சுகத்தை அறியமுடியும்.
அந்த பிரம்மானந்த  சுகத்தை    அறிந்த பின்    அவன்   புலன்கள்  அந்த பரபிரம்மத்தில்   நிலைத்துவிடும்.
அவன்  மனம்  எவ்வித  சஞ்சலமும்  அடையாது.   அந்த பிரம்ம

சொரூபத்தில்    எவ்வித  லாபத்தையும்
மனம் அசைபோடாது. துன்பத்திலும்
இன்பத்திலும் ஒரே   உணர்வையே   உணரும்.  இந்த நிலையை அடைவதே
யோகமாகும் .  அதனால் மன உறுதியுடன்    யோகத்தைப்  பயிலவேண்டும்.
 இப்படி தியான யோக  நிலையை அடைய    ஆசைகள்  அனைத்தையும்
அறவே    விட்டு விட  வேண்டும்.
 ஐம்புலன்களின்  அனைத்து நுழைவாயில்களையும்   அடக்க வேண்டும். இவ்வுலக நினைவுகள்
அறவே     இருக்கக்   கூடாது.
மனம் ஆழ்கடல் அமைதியாக வேண்டும்.  மனம் ஒரு நிலையை அடைய    வேண்டும்.
தானே பிரம்மமான பேரின்ப நிலையை அடைபவனே  யோகி. அப்படிப்பட்ட  

யோகிக்கே பேரின்ப நிலை ஏற்படும்.
 மனது, ஐம்புலன்களால்  எவ்வித பாவங்களையும்   செய்யாத நிலை  தான்  யோக நிலை. இந்நிலை அடைந்தவன்  பிரம்ம  ஞானம்    பெற்று
பேரானந்தத்தை எளிதில் பெறுகிறான்.


ஓம் நமசிவாய. இன்றைய சிந்தனைக்கு

ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய  ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ.
ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய  ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய.
 நல்ல மனம் வசப்பட  வே ண்டும்.
 சி ந்த னை  ஒன் றே  வே ண்டும்.
சி வனை யே  நி னை க்க வே ண்டும்.
மனம் வசப்பட வே ண்டும்.
 மெ ய்  ஞா னம்  பெ ற வே ண்டும்.
ஆத்மா  பர மா த் மா
ஐக்கிய மா க  வே ண்டும் .
வையகச்  சி ந்த னை கள்
வை கரைப்  பனி போல்
மறைய வே ண்டும்.
ஞா ன  ஒளி  வே ண்டும்.
அஞ்ஞான இருள்  ஒழி ய வே ண்டும்.

Monday, January 1, 2018

இன்றைய சிந்தனைக்கு

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய சிந்தனைக்கு

நாடு தான் நமக்கு மட்டுமல்ல .
நம் எதிர்கால சந்ததியினருக்கும்.

நல்லாட்சி அமைய தொகுதியில்
இல்லாமல் வெளியில் எங்கோ
இருந்து வந்து போட்டியிடும் .

நடிகை நடிகர்கள் கட்சிகள் என்றும்,
பணம் வாங்கி ஓட்டுப் போடுவதும்
தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.

நமக்குத்தெரிந்த நம் தொகுதியில்
இருக்கின்ற சேவை மனப்பான்மை

ஆன்மிகம் மிகவும் சிறந்த
நுண்ணிய ஞானம்.

ஆனால் அதில் இன்றைய காலங்களில்
மிகவும் ஆடம்பரமாக ,ஏழை எளிய
மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்
உதவாத வீண் ஆடம்பரமாக மாறிவருகிறது.
ஆலயங்கள் தூய்மை என்பது
ஆலயங்களின் வெளிப்புறமும்
இருக்கவேண்டும்.
ஆலயங்களில் அவசர தரிசனம் ,
குறுக்குவழி தரிசனம் என்றெல்லாம்
இல்லாமல் ஆலயம் செல்லும் நாளில்
தெய்வ சிந்தனைகள் மட்டுமே வேண்டும்.

இன்றைய நாளில் ஆலய தரிசனம்
ஆழ்மன தியான தரிசனமாக இல்லை.
வசதியாக தங்க வேண்டும்.
சாப்பாடு சாப்பிட வேண்டும் .
தூங்கவேண்டும்.
கடைக்குச் செல்லவேண்டும்
என்பதிலேயே மன அலைகள்.
இறைவனின் நாம ஜபமும் இல்லை.
இறைவனின் நினைப்பும் இல்லை.
சுற்றுலா ஆலய தரிசனம்
வெறும் பார்வை தான்.
அனைத்து ஆன்மீக உயர்ந்த
சிந்தனையாளர்கள்
சொல்வது கலியுகத்தில்
நாம ஜெபமே உயர்ந்தது என்கின்றனர்.
ஆனால் வால்மீகி ,துளசி ,
நபிகள் நாயகம் அனைவரும்
இறைநாம ஜெபத்தால்
ஞானம் பெற்றவர்கள்.
ஆகையால் இறைவனத்தேடி
நாம் செல்லாமல்
இறைவன் நம்மிடம்
வரும்படி பிரார்த்தனை
செய்யவேண்டும்.