லிங்கபுராணம்
பகுதி 24
ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற பராக்கிரமத்தைப் பெற்ற ஜலந்தரன் வரங்கள் பெற்றவுடன் அகந்தை கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். இந்திரனை ஓடச்செய்து தேவர்களை வென்றான். அடுத்து அக்கினி, இயமன், நிருதி, வாயு, குபேரன் ஆகியோர்களை வென்று தன் வயப்படுத்திக் கொண்டதுடன் வைகுந்தம் சென்றிட, திருமால் கருடன் மீதேறி அவனுடன் போர் செய்தார். ஆனால், அசுரனை ஈசன் ஒருவனாலேயே அழிக்க முடியும் என்றறிந்து மாயையால் இருளைத் தோற்றுவித்து அந்த மாயையில் மறைந்து விட்டார். அடுத்து, அவன் பார்வை கயிலாயத்தின் மீது பட சிவனாரையும் எதிர்க்க முற்பட்டான். அப்போது சிவபெருமான், ஜலந்தரா, நீ சொன்னது அனைத்தும் சரியாக இருக்கலாம். ஆனால், நான் கண்கூடாகக் காணவில்லை என்று கூறித் தன் கால் கட்டைவிரலால் பரமேச்வரன் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அசுரனிடம் அதை எடுத்துத் தலைமீது வைத்து அவன் பிரதாபத்தை நிரூபிக்குமாறு சொன்னார். அவன் மிகவும் ஏளனமுடன் இலகுவில் வட்டத்தைப் பெயர்த்து விட்டான். ஆனால், அதை மேலே உயர்த்துவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் முயற்சி செய்து அதனைக் கழுத்துக்கு நேராகக் கொண்டு வர, அது சக்கராயுதமாக மாறி அவன் கழுத்தைத் துண்டித்தது. அசுரன் உடல் பூமியில் சரிந்தது. அவனுடைய மனைவியர் அங்கு வந்து அவன் உடலை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினர். அப்போது சிவனார் அவர்களிடம், ஜலந்தரன் என் கையால் இறந்ததால் உத்தம லோகத்தை அடைந்துள்ளான் என்று கூறி அவனுடைய மனைவியர்களையும் அவனுடன் சென்று மகிழ்ந்திருக்குமாறு கூறி அருளினார்.
தொடரும்🙏🙏
No comments:
Post a Comment