Monday, February 4, 2019

பக வா ன் பக் தி

காலை வணக்கம் .

பகவான் பாதம் பணிந்து வணக்கம்.
பாரினில் பல ஞானங்கள்
பகவானின் ஞானம் அறிவதரிது ,
உடனடி  பயனறியா
 பயன் தரும் ஞானமல்ல .
பரிந்துரை ,கையூட்டு ,ஊழல் ,
உடனடி பயனறிந்து வாழும் இத்
தொல்லுலகில் பக்கவிளைவில்லா ,
தீர்வு பகவானின் அருளே.
பதவிகள் இருந்தும்
பல கோடி சேர்த்தும் ,
பகவானருள் இன்றி
படும்பாடு பெரும்பாடாகும் .
பாடு  பகவான்  புகழ் பாடு
பாரினில் பெறுவாய்
பக்க விளைவில்லா 
நிலைத்த மன-நிறைவு.

மருந்தில்லா வாழ்வு ,
பிணியில்லா வாழ்வு
மன நோயில்லா வாழ்வு ,
மன  சஞ்சலமற்ற வாழ்வு.
மடியும் வாழ்வின் மரண ஓலம்
மாற்ற மனித அறிவின் அறிவியல்.
பதவிநலம், பண நலம் ,உயர் நலம் ,
பகவானருளால் பெரும் ஞானம்
அறிவியில் உலகம் அதிர்ச்சி  அடையும்.
மருத்துவர் உலகம்   மறுத்து அனுப்பிய
தீரா  நோய்கள் ,மரண முடிவுகள்
 ஜபம் மாற்றும், தியானம்  வெற்றி பெறச்
செய்யும் ஜகத்தின் விந்தை தான்
சூக்ஷ்ம அறிவு.

No comments: