Wednesday, December 19, 2018

இளைஞர்கள் சிந்திக்க

வணக்கம் நண்பர்கள் அனைவருக்கும் .
மனிதர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி
மனித வெறியர்கள் சுயநல மதத்தத்தலைவர்கள் ,
துணை ஜாதிகள் , அரசியல் வாதிகள் இன -மத -ஜாதி -பேதங்களை மட்டுமல்ல கடவுளையும் வீர சைவம் , சைவம் ,லிங்கக்கட்டி சைவம் ,வடகலை ,
தென்கலை , புரொட்டஸ்டண்ட் ,கத்தோலிக் ,சுன்னி சியா , லெப்பை , மதம் மாறியவர்கள் ,என அப்பாவி
மக்களை கூறுகளாக்கி வசதியாக வாழ்கிறார்கள்.
இதை அறிவுள்ள தொண்டர்கள் மூடத்தனமாக ஏற்று அடிவாங்குதல் ,கொலை செய்தல் ,மத இன
காக்க தற்கொலை ,போராட்டம் என அமைதியற்ற நிலை.தலைவர்கள் குளிர்சாதன அறை , குளிர் கால
வே.சாதனை மகிழுந்து இதை மக்கள் சிந்திக்க வேண்டும். பெரியார் அனைத்து மத மூடநம்பிக்கைகள் பற்றி சாடி இருந்தால் அவர் பூஜிக்கப்படவேண்டிய ஈ. வே .ரா.
கபீர்தாசர் உண்மையான சிந்தனை யாளர்.
ஹிந்து ,இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு பாடு பட்டவர்.பிறப்பால் அந்தணர்.
வளர்ப்பால் முகமதி யர் .
இரண்டு மதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
-அவர் சொல்கிறார் :- வேதம் ,குரான் படிக்கிறார்கள்.பூஜை,தொழுகை யில் ஈடுபடுகிறார்கள் . ஆனால் கடவுளை அறியவில்லை. மனித நேயமற்ற நிலையில்
ஏழைகள் மீது இரக்கமற்ற நிலையில்
ஊழல் ,லஞ்சம் 40%வாக்கில் ஆளும் கட்சியினர்
இதை சிந்திக்கா நாட்டுமக்கள் .இதை வறிய கவிஞர்கள் ,ஞானிகள் , சித்தர்கள் சொல்லி வருகின்றனர். சிந்திக்க வேண்டிய இளைஞர்கள்
சிந்திக்க வேண்டும்.
மத ,இன ,ஜாதி கலவரங்களில் ஈடுபடாமல்
மனித ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.
வையகம் வாழ்க .
வையகம் ஒருகுடும்பம் .
இதில் பங்காளிப் பகை , மதவெறி , மாற்றான் மனைவி மகனை கடத்தல், மாற்றாள் கணவனைக் கொன்று மனைவியாக ஏற்று காதல் மஹால் கட்டுதல், மாற்று மத ஆலயங்கள் நாச மாக்குதல் ,
துப்பாக்கி கலாச்சாரம் , குழந்தைகளை குண்டு துளைத்து இரக்கமின்றி கொலை .
இதன் விபரீதங்களை சிந்தித்து
வையகத்தை அன்பு ,அஹிம்சை ,அறச்செயல்களில்
ஈடுபடுத்துதல் தான் இளங்கலை ,முதுகலை ,
முனைவர் பட்டம் பெற்றோர் செய்யும் உயர் பணி .
நாடு தான் முக்கியம் .

No comments: