Saturday, December 1, 2018

பணம்

காசேதான் கடவுளடா ,
அரசமரத்தடி பிள்ளயார்   ஏழைகள் இடம்.
வைரக்கிரீடம் வைத்தாலே அங்கே கூட்டம் .
ஆயிரம் கொடுத்தால் அண்மை  தரிசனம்
பொது தரிசனம் விரட்டல் தரிசனம் .
மூலஸ்தானத்துக்கு இரண்டடி முன்னாள் ரூபாய் நீட்டினால்
விரட்டா தரிசனம்.
அகவை 70 ,பணமே ஆண்டவன் அருள் என்றால்
அந்த அருளே வேண்டாம் .
விழுந்தாலும் பல கோடி உண்டியில் 

அவசரமாக செல்ல தூய கழிப்பிடமில்லை.
ஆலய மதில் சுவர் சுற்றி மூத்திர நாத்தம்
பழனி யில் பேருந்து நிலையம் இறங்கினால்
பழம் -பால்-பன்னீர்  மணக்கவில்லை ,
சிறுநீரே  மணக்கிறது.

No comments: