மாயை உலகம்
— எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை
அன்பே ஆண்டவன்,
அறிவே ஆண்டவன்,
சத்தியமே சர்வேஸ்வரன்.
சத்திய ஹரிச்சந்திரன் பட்ட இன்னல்கள்,
பக்தி தியாகராசர் அனுபவித்த வறுமை —
பக்தர்களின் சோதனை முடிவில்லா பாதை.
ஊழல்வாதிகள் கையூட்டு வாங்கி
சுகபோகத்தில் மிதக்கிறார்கள்;
தீயவர்களுக்கு இரக்கம் இல்லை.
தேர்தலில் பணம் ஓடுது,
ஏழைகள் நீதிக்காக
நீதிமன்றம் போக முடியாத நிலை.
சாதி சலுகைகள், மதிப்பெண் சலுகைகள்,
வயது சலுகைகள் —
நியாயம் எங்கே? சமம் எங்கே?
ஆண்டவன் பெயரில் ஏமாற்றம்,
ஆலயம் சுற்றி ஆயிரம் ஊழல்,
வியாபாரம் ஆனது பக்தி வழி —
ஆலயமா அது, கடைத்தெருவா அது?
மாயை நிறைந்த உலகம் இது,
அநியாயம் எல்லை கடக்கிறது.
ஆண்டவன் எப்போது அவதரிப்பார்?
நீதி நேர்மை நிலைநாட்ட தாமதம்.
ஆனால்...
உண்மை மறையாது,
மாயை நீங்கும் நாள் வரும்.
ஆண்டவன் நியாயம் நிலைநிற்கும் —
அன்பே மீண்டும் விளக்கும் உலகம்.
No comments:
Post a Comment