மாயை மற்றும் உண்மை 🌞
சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 2
வையகம் வாழ்க — ஜய் ஜகத்!
என்று முழங்கும் வேதம்,
அதே வேதம் சொல்லும் —
“ஜகத் மித்யா, ப்ரம்ம சத்யம்.”
உலகம் பொய்யானது,
அதில் வாழ்பவன் உண்மையை தேடும்.
ப்ரம்மம் — காணாத கதிர்,
அதிலே விளையும் மாயை — ஒளியின் நிழல்.
மாயை — உடனடி ஆனந்தம்.
பொய்யால் வரும் சுகம்,
நொடியிலே மாறும் துன்பம்.
குடிகாரனின் போதை போல்,
சில மணிநேர அமைதி, ஆயுள் முழுதும் வலி.
பெண் சுகம், பொருள் ஆசை,
மண வாழ்க்கை, பிள்ளை ஆசை —
எல்லாம் மாயையின் பல வண்ணம்.
தனம் தண்ணீராக கரையும்,
உறவுகள் காற்றில் கரையும்.
பல்லி புலி போல் மறைந்து தாக்கும்,
பச்சோந்தி போல் நிறம் மாறும் மாயை.
சிங்கம் போல் கர்ஜிக்கும்,
மான் போல் பாசம் காட்டும்.
வண்டு போல் மயங்க வைக்கும் உலகம்.
சிரித்துக் கொல்லும் அரசியல்,
மொழி விளையாட்டில் ஆட்சி பிடிக்கும் வஞ்சகம்.
தவம் செய்து ஆண்டவனை அடிமைப்படுத்த நினைக்கும் பக்தர்கள்,
வேதம் உச்சரிக்கும் போலி சாமியார்கள்.
ஆஸ்ரமம் என்ற பெயரில் ஆசையின் அரண்மனை.
உண்மை எது?
பொய் எது?
அறியாமல் ஏமாறும் மனிதன் —
அவனே மாயையின் விளையாட்டு பொம்மை.
மதவாதிகள் “சைத்தான்” என்று சொல்லும்,
அது ஒரே பெயரில் பல வடிவம்.
அனைத்து மதங்களிலும்,
அனைத்து கட்சிகளிலும்,
உட்பிரிவால் பிறக்கும் வெறுப்பு —
அது தான் மாயையின் நெருப்பு.
உண்மை என்னவென்றால் —
அனைத்திலும் ஒரே ஆதாரம்,
அதே ஆன்மாவின் ஒளி.
மாயை அதன் திரை,
உண்மை அதன் வெளிச்சம்.
No comments:
Post a Comment