Tuesday, December 31, 2024

வா ல்மீகி இராமயணம் --பாலகாண்டம்

 1. பாலகாண்டம்

2.அயோத்தியா காண்டம்
3.அரண்யகாண்டம்
4.கிஷ்கிந்தா காண்டம்
5.சுந்தரகாண்டம்
6.யுத்தகாண்டம்
7. உத்தரகாண்டம்




  வால்மீகி இராமாயணம்.
                            1.பாலகாண்டம்.

மஹரிஷி  வால்மீகி ஆஸ்ரமத்திற்கு ஒரு நாள் தேவரிஷி நாரதர் வந்தார். அவரை வால்மீகி நன்கு உபசரித்து நலம் விசாரித்தார்.பிறகு நாரதரிடம்  இந்த காலத்தில் இவ்வுலகில் அதிக குணமுள்ள,வீரமுள்ள,அறமுள்ள,உண்மை பேசுகின்ற,உறுதிமொழியில் உறுதியாக இருக்கின்ற மனிதன் யார் என்று நாரதரிடம் கேட்டார். அப்பொழுது நாரதர் இக்‌ஷவாகு குல மன்னன்  இராமனின் குணத்தை வர்ணனை செய்தார். இராமனின் புண்ணிய கதையைக் கேட்டு தேவரிஷி நாரதரை தக்க மரியாதையுடன் அனுப்பிவைத்தார்.

    தேவரிஷி சென்ற பிறகு மஹரிஷி வால்மீகி தன் சீடன் பரத்வாஜுடன் தமசா நதித் துறையில் குளிக்கச் சென்றார்.அப்போது  காமலீலையில் ஈடுபட்டிருந்த கொக்கின் இணைகளில் ஒன்றை ஒருவேடன் அம்பெய்தி கொன்றுவிட்டான். அந்த காட்சியைக் கண்ட மஹரிஷி வேதனைப்பட்டார். உடனே ஒரு சுலோகத்தின் மூலம் சாபமிட்டார்–”வேடனுக்கு இந்த தீய செயலுக்காக அமைதி என்றுமே கிடைக்காமல் போகட்டும்.” தன் வாயில் இருந்து சுலோகமாக வெளிப்பட்டதைக் கண்டு மஹரிஷி தானே ஆச்சரியப் பட்டார். அப்பொழுது பிரம்மன் அவர் முன் தோன்றி என்  தூண்டுதலால் தான் இந்த வரிகள் உங்கள் வாயில்இருந்து வந்தன என்றார். மேலும் இராமரின் குணல் 24ஆயிரம் சுலோகங்கள்,500 சர்கங்கள்,ஏழு காண்டங்கள் உள்ளன.

  இக்‌ஷவாகு குலத்தின் தசரதர் ஆட்சியில் அயோத்தியாவில் மக்கள் செல்வச் சிறப்புடன் வாழ்ந்தனர். அனைத்து அறங்களையும் அறிந்த சான்றோன் மஹாராஜா தசரதர். ஆனால் மக்கட்பேறு இல்லை என்று மிகவும் மனவேதனைப் பட்டார். வசிஷ்டர் முதலிய அந்தணர்களின் ஆலோசனைகளை ஏற்று மக்கட்பேறுக்காக  புத்திர காமேஷ்டி வேள்வி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்தினார். அதே காலத்தில் இராவணன் மூலமாக துன்பங்களை அனுபவித்த தேவர்களுக்கு விஷ்ணு பகவான் தான் மனித அவதாரம் எடுத்து இராவணனின் மகன்கள், பேரன்கள், அமைச்சர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரையும் போரில் கொன்றுவிடுவதாகவும்,11000 வருடங்கள் இந்த நிலவுலகை பராமரிப்பேன் என்று ஆறுதல் அளித்தார். 

  வேள்வியின் விளைவாக அக்னி குண்டத்திலிருந்து ஒரு தெய்வீக மனிதர் பாயாசத்துடன் தோன்றினார். அதை குடித்து மூன்று ராணிகளும் குழந்தைப் பேறு பெற்றனர். கௌசல்யா ராமனையும், கைகேயி பரதனையும், சுமத்திரை லக்‌ஷ்மணன்,சத்ருகன்னையும் ஈன்றனர். ராஜா நான்கு புத்திரர்களுக்கும் பெயர் சூட்டும் சடங்கை சிறப்பாக நடத்தினார். பகவான் விஷ்ணு ராஜா தசரதனின் மகனாக அவதரித்தார்.அவருடைய உதவிக்காக பிரம்மாவால் வெவ்வேறு தேவதைகள் வானரங்களாக இந்த பூமியில் அவதரித்தனர்.

  இந்த நான்கு அரசகுமாரர்களும் வேதங்கள், தாய்-தந்தை பணிவிடை செய்தல், வில்வித்தை ஆகியவற்றை  மிகவும் ஈடுபாடுடன் பயின்றனர். ஒருநாள் மஹரிஷி விஸ்வாமித்திரர்
அரக்கர்களிடமிருந்து தான் நடத்தும் வேள்வியைக் காப்பாற்ற
ராஜா தசரதரின் அவைக்கு வந்தார். ராஜா தசரதர் ரிஷியின் மனவிருப்பத்தைக் கேட்டார், விஸ்வாமித்திரர் தன் வேள்வியின் பாதுகாப்பிற்காக அவருடைய மூத்தமகன் ஸ்ரீராமரை தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.இதைக் கேட்டு மஹாராஜா தசரதர் மௌனமானார்.பிறகு மஹரிஷியின் விளக்கத்திற்குப் பின் ராமனையும் இலக்குமணனையும் வேள்வியின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். அந்த சமயம் ராமனின் வயது 16 ,
  மஹரிஷி விஸ்வாமித்திரர் பல தெய்வ சக்தியுள்ள ஆயுதங்களை வழங்கினார்,வனத்திற்கு செல்லும் வழியில் தாடகா என்ற அரக்கி எதிரில் வந்தாள். அவளைப் பெண் என்று வதம் செய்ய இராமர் தயங்கினார். ஆனால் மஹரிஷியின் கட்டளையை ஏற்று  கொடூரமன கெட்டவளான தாடகையை வதம் செய்தார். பிறகு ஸ்ரீராமர் சுபாஹு முதலிய  அரக்கர்களைத் தன் அம்பால் நூறு மைலுக்கு அப்பால் விழவைத்து விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காப்பாற்றினார்.
  வேள்வி முடிந்தபின் மஹரிஷி விஸ்வாமித்திரர் ராமனையும்  லட்சமணனையும் மிதிலையின் அரசரின் தர்மம் நிறைந்த வேள்வியில் கலந்து கொள்ளவும் விசித்திரமான வில்லைக் காட்டவும் அழைத்துச் சென்றார். வழியில் சோணபத்திர நதிக்கரையில் இரவில் ஓய்வெடுக்கும் போது அனேக கதைகளை விளக்கி ஞானத்தை வழங்கினார். மிதிலையை அடைந்ததும்  மஹரிஷி விஸ்வாமித்திரர்  கௌதம மஹரிஷியின் மனைவி அஹில்யா சாபம் பெற்ற கதையையும் சொன்னார். ஸ்ரீராமரின் தர்ஷனத்தால் அஹல்யா சாபவிமோசனம் பெற்றார்.
  மிதிலாபுரியில் மஹரிஷி விஸ்வாமித்திரர் மிதிலை மன்னர் ஜனகருக்கு  ராமனையும் லட்சுமணனையும் அறிமுகப் படுத்தினார். அதற்குப் பிறகு  ராஜா ஜனகர் சீதை கிடைத்த கதையைக் கூறினார். தான் வயலை உழுதபோது கலப்பையின் முன் பகுதி உழுத பூமியில் இருந்து ஒரு பெண் குழந்தை கிடைத்த்தது,கலப்பை மூலம் இழுக்கப்பட்ட கோட்டில் இருந்து கிடைத்ததால்  குழந்தையின் பெயர் சீதை என்று சூட்டினோம் என்றார்.  சிவதனுஷைப் பற்றிஜனகர் விஸ்வாமித்திரரிடம் கூறும் போது இந்த சிவதனுஷ்  பகவான் சிவன் மூலம் தக்‌ஷணின் வேள்வியை அழித்த பிறகு தேவர்களுக்கு கொடுத்த வில் .அதை தேவர்கள் ராஜா ஜனகரின் முன்னோர் மஹாராஜ் தேவராத்திடன் கொடுத்துவைத்தனர். இந்த வில்லில் நாண் ஏற்றும் வீரனுடன் சீதையை மணம் முடிப்பதாகக் கூறினார். ஸ்ரீராமர் இந்த வில்லில் நாண் ஏற்றினால் ராமருடன் சீதையை மணம் முடித்துவைப்பதாகவும் கூறினார். மஹரிஷியின் அனுமதி பெற்று சிவதனுஷை எடுத்து நாண் ஏற்றுவதற்காக நிமிர்த்து பிடிக்கும் போது வில்லின் நடுப்பகுதி உடைந்துவிட்டது.
    ஜனகர் தன்னுடைய அமைச்சர்களை ஸ்ரீராமர் சீதை திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தீர்மானத்தைக் கூறி அவர்களை அழைத்துவர அனுப்பினார். தசரதர் ராஜா ஜனகரின் செய்தியைக் கேட்டதுமே மிக மகிழ்ச்சி அடைந்தார்.பிறகு ரிஷி-முனிகள் மற்றும் தன் குழு கூட்டத்துடன் நான்கு நாள் பயணித்திற்கான ஏற்பாடுகளைச் செய்து  மிதிலையை அடைந்தார். மிதிலையை அடைந்ததுமே ஜனகர்க்கையை ஏற்று ஸ்ரீராமருக்கு சீதையையும்,லட்சமணனுக்கு தனது இரண்டாவது மகள் ஊர்மிளாவையும் திருமணம் செய்துதருவதாக சங்கல்பம் செய்தார்.மஹரிஷி விஸ்வாமித்திரர் மூலமாக பரதனுக்கும் சத்ருகனுக்கும் ஜனகரின் தம்பி குஷத்வஜனுடைய மகள்கள் மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்த்தி ஏற்பாட்டை ஜனகர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். நான்கு சகோதர்ர்களின் திருமணத்திற்குப் பிறகு மஹரிஷி விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்திற்குப் பறப்பட்டார். ராஜா தசரதர் தன் நான்கு மகன் களையும் மருமகள்களையும் அழைத்துக் கொண்டு அயோத்தியாவிற்குப் புறப்பட்டார்.
 
    சிவதனுஷை உடைத்ததால் பரசுராமர் மிகவும் கோபம் அடைந்தார். வழியில் ராமரை போருக்கு அழைத்தார். விஷ்ணுதனுஷில் நாண் ஏற்றி ராமரின் பலத்தைக் காட்டும்படி கூறினார். ஸ்ரீராமர் தன் சத்திரிய தர்மப்படி பரசுராமரின் கையில் இருந்த வில்லையும் அம்பையும் வாங்கி அதில் நாண் ஏற்றினார்.அப்போது பரசுராமர் ஸ்ரீராம் விஷ்ணுதான் என்பதைத் தெரிந்துகொண்டார். ஸ்ரீராமர் பரசுராமரிடம் அவர் விரைவாக போக்குவரத்து வந்து போவதைப் பற்றி கேட்டபோது பரசுராமர் கஷ்யப் முனிவர் எனக்கு பூமியை தானமாகக் கொடுக்கும் போது நான் பூமியில் இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். ஆகையால் நான் விரைவாக மஹேந்திர மலை திரும்ப ஆணையிடுங்கள். பரசுராமரின் வேண்டுதலின் படி தன் குறிதவறா அம்பின் மூலம் ஸ்ரீராமர் பரசுராமர் தன் தவ்வலிமையால் வெற்றிபெற்ற ஒப்பில்லா உலகை அழித்துவிட்டார்.

 அரசர் தசரதருடன்  ராமர்,அவருடைய சகோதரர்கள்,மற்றும் வந்த நான்கு மருமகள்கள் அனைவரையும் அயோத்யா நகர மக்கள் சிறப்பாக வரவேற்றனர். நான்கு சகோதர்ர்களும் தங்கள் தங்கள் மனைவியுடன் இருந்து தன் தந்தைக்கு சேவை செய்தனர். சில காலத்திற்குப் பிறகு பரதனின் மாமா கேகேய நாட்டு இளவரசர் வீரன் யுதாஜித் அயோத்யாவந்தார். பரதனும் சத்ருகனனும் தன் மாமா யுதாஜித்துடன் தங்கள் தந்தை,அன்னைகள் மற்றும் சகோதர்ர்கள் அனுமதி பெற்று தன் தாத்தாவீட்டிற்குச் சென்றனர். ஸ்ரீராமருக்கும் சீதாவிற்கும் மிகவும் தெய்வீகக் காதல் இருந்தது. சீதா எப்பொழுதும் தன் கணவன் ஸ்ரீராமனை விரும்பினாள் ஸ்ரீராமரும் சீதாவை மட்டும்  விரும்பினார்.


Thursday, December 19, 2024

கடவுள்

 வணக்கம்.


भगवान कौन? கடவுள் யார்?

மனிதன் கடவுள்.

 மனிதனைப்

 படைத்தவன் கடவுள்.

 அவனுக்கு ஞானம் தருபவன் கடவுள்.

 உடல் வலிமை 

தருபவன் கடவுள்.

 வாழ்நாள் நிர்ணயிப்பவன் 

கடவுள்.

 ஆனால் 

 அவன் படைத்த மனிதன் 

 கண்டுபிடிப்புகளால்

 உடனடி உதவுவதால்

 அவன்தான் மனிதன்.

 கபீர் தாஸர்  கடவுளை உனக்குள் தேடு என்கிறார்.

பூவில் மணம் போல் 

கஸ்தூரி மான் வயிற்றில் 

கஸ்தூரி போல்

கடவுள் உனக்குள் இருக்கிறார் என்கிறார்.

 உன்னைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் 

 உன் செயல்களைப் பற்றியும் சிந்தித்தால் 

உன் சுகத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் யார் என்பது யார் என்பது புரியும்.

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா ?

 கடவுள் நடுநிலை உள்ளவர்.

  ஆதிசங்கரர் அருளிய வாக்கின் படி 

 அத்வைதம்.

  தீய எண்ணங்கள்  வரும் 

 போது அதை விட்டு விட வேண்டும்.

 அதற்கும் இறைவன் அருள் வேண்டும்.

 தர்மர் சூதாட்டம்.

 இராவணன் சீதை மோகம்

 இதெல்லாம் அவர்கள் அறிந்தே செய்த தவறு.

  இந்த தவறான நடத்தைகளுக்கும் இறைவனே பொறுப்பு.


சே. அனந்த கிருஷ்ணன்.சென்னை.

Tuesday, September 10, 2024

ஆன்மீகம்

 திருடன்.

 பணக்கார வீட்டில் திருட முடியாது.

 கஷ்டப் பட்டு ஆசைப்பட்டு 

 சிறுகச் சிறுக சேர்த்து 

 நகை ஆசையால்  

 போட்ட சங்கிலி

 அதைத்தான் பிரித்துச் செல்ல முடியும்.

 மெய்யோ  பொய்யோ

 சில சுய நல காவல் துறையும் 

 உடைந்தை.

 பணக்கார வீட்டில் திருட்டு 

 உடனடி  நடவடிக்கை.

  அப்படியே இலக்கியத் திருட்டு.

 அதுவும் ஏழை 

எழுத்தாளர்கள் திருட்டு.

 

  இதுவும் நிரூபிக்க  முடியாது.

  அரசியல் ஊழல் அதுவும்  சட்டப்படி முடியாது.

 ஆனால் 

 இறைவன் தண்டனை நிச்சயம்.

 இளைஞர்கள் மனம் கெடுக்கும் திரைப்படம்.

 அரை குறை ஆடை.

 உடலின்ப வெறி தூண்டும் காட்சிகள்.

 அதற்கு முதுமையில்  தண்டனை 

 வறுமை.

 நிம்மதியில்லா இல்வாழ்க்கை.

 கர்ம வினை.

 திறமை என்பது 

 கர்ம வினை முற்பிறவி வினை.

 சஞ்சய் காந்தி அல்ப ஆயுசு.

 ராஜீவ் பிரதமர் அல்ப ஆயுசு.

  ராஹுல் ராஜீவ் போன்று பிரதமர் ஆக முடியவில்லை.

 ஸ்டாலின் உதயநிதி வினைப்பயன்

 அழகிரிக்கு இல்லை.

 ஏபிஎஸ் இபிஎஸ்  இருவரில் 

 இபிஎஸ் ஐந்தாண்டு முதல்வர்.

 முயற்சி ஒரே மாதிரி வினைப்பயன் தான் பதவி.

    இதெல்லாம் ஆண்டவன் எழுதி படைத்த படைப்புகள்.

 புலி சிங்கம் அதன் குணம்

  இயற்கை.

 ஞானம் என்பது இறைவன் அளிப்பது.

 சங்கீதம் கற்காமல் இனிய குரல்.

 ஓவியம் கற்காமல்  சிறந்த 

 சாலை ஓவியங்கள்.

 முயற்சி மேல் முயற்சி 

 பத்தாம் வகுப்பு மஹாவிஷ்ணு 

 ஞானம்   பேராசிரியருக்கு கிடைக்காது.

 சித்தர்  பார்வை  பட்டால் முன்னேற்றம்.

 இந்த ஆன்மீகம் பேசினால் 

 கைது அடக்குமுறை .

இந்த ஆற்றல்  இறைவன் அளிப்பது.

 மஹாவிஷ்ணுவிற்கு 

 இன்று சிறை யோகம் இதுவும் கர்ம வினை.

 இந்த இறை மந்தம் அறியத் தான் பிரம்ம ஞானம். பிரம்மானந்தம்.

  மீண்டும் பழனி கணக்கன்  பட்டி சித்தர்.

 அவரை பார்க்க செல்லாத மேதைகள் கிடையாது.

 அழுக்கு சாமியார் அவர் பார்வைக்காக நிற்கும் பட்டதாரிகள் .

 இது தான் ஆன்மீக சக்தி. தெம்வ சக்தி.

 கடவுளுக்கு உருவம் கிடையாது.

 இன்று சோனியா விற்கு ஆந்திராவில் ஆலயம்.

 ஜெயலலிதா ஆலயம் 

 எம்ஜிஆர் ஆலயம் 

 மோதி ஆலயம் 

 குஷ்பு ஆலயம் 

 இவை பல ஆண்டுகளில் பெருகினால் அது ஆண்டவன் ஆலயம் ஆக முடியாது.

    தெய்வம் என்பது வள்ளுவர் 

 திருககுறள் போல்

 வேண்டுதல் வேண்டாமை இவான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல்.

 நடுநிலையாக உள்ளவர் இறைவன்.

 மனித ஆலயங்கள் 

 அந்தந்த கட்சி சார்புள்ளவை.

 சனாதன தர்மப்படி

இயற்கை தான் கடவுள்

 நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் பஞ்ச பூதங்கள்.

 சிந்திக்க . நல்ல தை நினைக்க.

சே. அனந்த கிருஷ்ணன்.

Wednesday, July 24, 2024

வலி பெயர் வலி

 பெயர் வலி.

சே. அனந்த கிருஷ்ணன் வணக்கம்.

 தலைப்பு++++காதல் வலி.

 ++++++++++++++

 காதல் என்பது காத்தல். காத்திருத்தல் ஏக்கம். அந்த காதல் வெளிப்படுத்துவதில் தயக்கம்.

 தயக்கம்  பல காரணங்கள்.

 பணம்,ஜாதி,மதம். பதவி பல காரணங்கள்.படிப்பு தடையாக முடியாது. பொதுவாக உடல் இன்பக் காதல் வேறு. ஆழ்மனக்காதல் வேறு.

 ஒருதலைக் காதல் வேறு. இரு உள்ளம் கலந்த காதல் வேறு.

 இப்படி காதல் பற்றி பல நினைவுகள் எண்ணங்களுடன் சென்ற கருப்பாயி 

 அழகாக இருந்தாலும் கல்லூரியில் படித்தாலும் தன் பெயரால் தாழ்வு மனப்பான்மை. தன்னுடன் படித்த 

 ஜிதேந்திரன் பெயரிலேயே ஒரு சாதித்துவம். காதல். அவனுக்கும் ஒரு காதல். இருவருக்கும் கண்கள் சந்தித்தன. உள்ளங்கள் ஏங்கின.

 ஆனால் காதல் சொல்லத் தடை கருப்பாயி ஜிதேந்திரா பெயர்தான்.

 வலியுடன்  தயக்கத்துடன் பிரிந்தனர்.

 சிதேந்திரன் சியாமா  என்ற பெண்ணை திருமணம் செய்தான்.

 அதன் பொருள் கருப்பாயி என்று புரியவில்லை. கருப்பாயி வெள்ளையப்பன் திருமணம் .

 ஆனால் தமிழ் பெயரல்ல.  சுவேதா ராஜ் . வெள்ளை அரசன் பொருள் புரியவில்லை. காதல் வலி இருவருக்குமே. பெயரில் என்ன என்றாலும் தமிழ் பெயர் வலி ஏற்படுத்தும். மூப்பனார் தான் கருப்பையா ? இந்த வலி மாறுமா?

 நடைமுறையில் இல்லை.


சே. அனந்த கிருஷ்ணன்.

जीवन शरण

 [24/07, 9:26 am] sanantha.50@gmail.com: नमस्ते वणक्कम्।

एस.अनंतकृष्णन का।

--------------------

 अस्थाई जीवन।----

+++++++++++




लोग समझते हैं 

पद हैं अधिकार है।

 अंगरक्षक है,

 पर न जानते

 अंगरक्षक ही काल बनेगा।

प्रधान मंत्री को भून डालेगा।

 बम बनकर आएगा,

 शरीर को छिन्न-भिन्न कर देगा।

 कौन सुरक्षित है,अगजग में।

 द्वारका समुद्रतले,

 धनुष्कोटी केवल उजड़े  हैं।

 पूम्पुकार का पता नहीं।

 किले राजमहल उजड़े पड़े हैं।

 मिथ्या शरीर मिथ्या जगत।

 कृष्ण के रहते महाभारत में 

 कितने अधर्म वध,

 रामायण में कपट संन्यासी वेश,

 फिर भी आज कदम कदम पर पाखंड।

 न कोई यहाँ सुरक्षित आराम।

 करोड़पति भले ही वातानुकूलित कमरे में हो,

 वह भी बूढ़ा बन जाता है,

 धन जवानी न दे सकती।

 यम सबकी आँखों मेँ धूल झोंक आ जाता है, हा हाकर मच जाता है।

 सुनामी, मुकुट विषैला कीटाणु 

  न जाने डिंगु, जाने अंजाने रोग।

 केंसर,हार्ट अट्टेक।

 धनी से फुटपाथवासी हँसता है

 निश्छल निष्कपट सहज स्वाभाविक आनंद।

 मीठी नींद सड़क पर।

 अपना अपना भाग्य, 

‌अपना अपना राग 

 अपनी अपनी डफ़ली।

 यही है सांसारिक जीवन।

 चंद दिनों के मेहमान।

 एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक 

 सौहार्द सम्मान प्राप्त हिंदी सेवी।

[24/07, 10:52 am] sanantha.50@gmail.com: இறைவன் 

 அவனை வழிபட்டு 

 அவனுக்கு பயந்து 

 வாழ்ந்த 

 பக்தி வாழ்க்கையே

 பேரானந்தம்.

 பரமானந்தம்.

 அதற்கு ராம் பக்தர் தியாகராஜர்

 பல ராம் பக்தர்கள் 

  வாழ்ந்த காலம்.

 இறைவன் அருள் 

 பெற்ற காளிதாசர்

 அருணகிரி 

 துளசிதாசர் 

 கபீர் சூர்தாசர்

 ஆண்டாள் மீரா

 இவர்கள் என்றும் இருப்பார்கள்.

 கருணை நிதி பெற்றவர்கள்.

 இந்த ஆழ் மன பக்தி 

 ஆங்கில மயக்கத்தில் 

 பொருளாதார வளர்ச்சி 

 அருளாதாரம் மறந்து 

 பொருள் +தாரம் -வாழக்கை.

 பெற்றோர்கள் ?

 பொருள் +தாரம்

   சற்றே அருள் ஆதாரம் பெற

 ஆண்டவனை சரணடைவோம்.

Thursday, July 11, 2024

இறைவன்

 ஆன்மீகம் என்பது மனிதசக்திக்கு அப்பால் இருக்கும் ஒரு சக்தியை  வழிபடவேண்டும்.

 அது பஞ்ச தத்துவங்கள்.

 அவை இயற்கையில் 

 இறைவனால் படைக்கப்பட்டவை.

 முஸ்லிம் கங்கை

 கிறிஸ்தவ ஆகாயம் 

 ஹிந்து காற்று 

 புத்தர் அக்னி நிலம் 

 மாவீரர்  நிலம் 

  சீக்கிய சீலம் 

 என்றெல்லாம் கிடையாது.

 இந்த ஐந்து தத்துவங்களும் 

  தாவரங்கள் விலங்குகள் புழுக்கள்  பறவைகள் புல் பூண்டு செடி கொடி என்று அனைத்திற்கும் பொது.

 சுனாமி கொரானா பூகம்பம் புயல் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே என்று கூறமுடியாது.

  இவை அனைவருக்கும் இன்னல் தருபவை.

  இந்த ஐந்து தத்துவங்களும் ஒரே இறைவனுக்கு ஷா கட்டுப்பட்டவை.

 இவைகளை மாசு படுத்துவது ஏரிகள்  மூடப்படுவது 

நதிகளின் அகலம் குறைப்பது.

 புகைமண்டலம் எழுப்புவது

 கழிவு நீரை நதிகளில் சேர்ப்பது

மலைகளை தரைமட்டம் ஆக்குவது

 காடுகளை அழிப்பது 

 இவை எல்லாம் இறைவனை இயற்கையை அவமதிப்பது .

 அந்த பஞ்சதத்துவங்கள்

 சீற்றம் அடைந்தால்

 மனிதன் அறிவியல் அழிந்து விடும்.

  ஆகையால் இயற்கை போற்ற வேண்டும்.

 மோடி கோயில் 

 சோனியா கோயில் 

 குஷ்பு கோவில் 

 ஜெயலலிதா எம்ஜிஆர் கோவில் 

 என்று கட்சி வளர்ச்சிக்காக சுயநல ஆலயங்கள்.

 ராமர் கிருஷ்ணர் காலம் போன்றவை.

 இராமர் காளி துர்க்கை சிவன் உபாசகர் அல்லா  ஏசு  என்று  மனித இனத்தைப் பிரித்து 

 மனித நேயமற்ற சூழலை உருவாக்கி

 இனப்படுகொலை 

 தான் மதங்கள்.

 தர்மம்  என்பது  அறம்.

 அறம் பொதுவானது.

 மதம் மாறக்கூடியது.

 மதம் பல பிரிவுகளாக 

 கருத்து வேறுபாடுகள் உடையதாக மாறும்.

 சிவனுக்கு பல ஆதீனம்.

 ஆதினங்களுக்குள் சண்டை.

 விஷ்ணு ஏசு அல்லா பல பிரிவுகள்.

 இவை சுயநல அகங்கார கும்பல்கள்.

  காற்று இல்லை என்றால் மத வேறுபாடின்றி அனைவருக்கும் மூச்சு திணரும்.

தண்ணீர் தாகம் அப்படியே.

 கடல் நீர் உப்பு.

 அது மதம் சார்ந்து இனிப்பாக மாறாது.

 கரும்பு இனிப்பு.

 மதம் சார்ந்து கசப்பாக மாறாது.

 பாலைவனம் மதம் சார்ந்து சோலைவனம் ஆகாது.

 அனைத்தும் ஒரே கடவுள் கட்டுப்பாட்டில்.

 மனிதன் படைத்த ஆலயங்களில் காட்சிகள் மாறும்.

 இறைவனின் இயற்கை மாறாது.

 இயற்கை சீற்றங்கள் மனிதனின் உடனடி பயன் பெறும் முயற்சியால் ஏற்படுவை.

 அறம் /தர்மம் வளர்ப்போம்.

 மதம் மனித மனக் குழப்பம்.

 மனித ஒற்றுமைக்குக்கேடு.

  போலிகள் அனைத்து யுகங்களிலும் உண்டு.

 சிந்திக்க இறைவன் இயற்கை அளித்த கருத்துக்கள் சிந்திக்க.

 சே. அனந்தகிருஷ்ணன்.

Wednesday, July 10, 2024

Hindi

 தமிழ் இலக்கியம்

 நிறைந்த செம்மொழி.

 மிகவும் பழமையான மொழி.

உலகின் தொன்மையான மொழி.


 ஹிந்தி வரலாறு அறிந்து கொள்ளுங்கள். 

 தமிழ் இளைஞர்களே!


       ஹிந்தி கடி போலி என்ற பெயரில் 

 இரண்டரை மக்கள் டில்லி மீரட் ஆக்ரா பகுதிகளில் பேசப் பட்ட  மொழி.


 அது ஹிந்தி யாக வளர்ச்சி பெறத் தொடங்கியது 1900 கி.பி.

 அதாவது 124ஆண்டுகளான மொழி.

 இன்று உலகில் மூன்றாவது 

பெரிய மொழி.

 தமிழகத்தில் 15000ஹிந்தி பரப்புனர்கள்.

 இரண்டு லட்சம் மாணவர்கள்.

 தமிழக அரசு ஆதரவின்றி படித்து வருகின்றனர்.

 பொது மக்கள் ஹிந்தியை ஆதரித்து பேசியும் வருகின்றனர். 

கவிப் பேரரசர் கண்ணதாசன்  ஹிந்தி மயிலே ஆடு.

 தாயகம் உன்னைத் தாங்கும்

 என்று  கவிதை பாடியுள்ளார். முத்தமிழ் காவலர் 

கி. ஆ. பெ விஸ்வநாதன் அவர்களும் இறுதி காலத்தில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று 

கூறியுள்ளார். பேராசிரியர் 

 சாலமன் பாப்பையாஅவர்களும்

ஹிந்தி அவசியம் பற்றி கூறியுள்ளார்.


 ராமேஸ்வரம் கன்னியாகுமரி போன்ற ஸ்தலங்களில் சங்கு வியாபாரிகள் ஹிந்தி பேசு கின்றனர்.

   1900 த்திற்கு முன்னால் இருந்த ஹிந்தி இலக்கியம்  ஹிந்தி அல்ல.

 வித்யா பதி  மைதிலி மொழி 

 துளசிதாசர் அவதி மொழி 

 மீரா சூர்தாஸ் வ்ரஜ பாஷை.

 கபீர் கலப்பட மொழி.


    1900ஆண்டுதான் பாரதேந்து  ஹரிச்சந்திரர் கடிபோலியில் இலக்கியம் படைத்தவர்.

 அவர் தன் தோஹையில் 

 தாய்மொழி முன்னேற்றமே 

அனைத்து முன்னேற்றத்திற்கும் 

 ஆணிவேர் என்று கூறியுள்ளார்.


  பாரதத்தில் பத்துக் கோடி தமிழர்கள்.

 அதில் 40%திராவிடக்கட்சி எதிர்ப்பு.

   பாஜகவின்   செயல்பாடு 

தமிழின் பெருமையைசெங்கோல்  பாராளுமன்றத்தில் வைத்து பெருமை படுத்தியது பாராளுமன்றத்தில் தமிழ் இலக்கியங்கள் பேசுவது புறநானூறு திருக்குறள் புகழப்படுவது என தமிழ் புகழ் வடநாட்டு மக்கள் தமிழ் அறியத் தூண்டு கிறது.

 ஹிந்தி பழம் பெரும் மொழி என்று கூறவில்லை.

 அதன் பெரும் வளர்ச்சி வியக்கத்தக்கது.

 இதை தமிழ் இளைஞர்கள் புரிந்து தெளிய வேண்டும்.

  தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு 

 தமிழ் பேசுவது அழகல்ல என்ற மன நிலை தமிழகத்தில் மட்டுமே.

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பெருமை அல்ல.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.


சே. அனந்த கிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

 ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.

 

 

 


  

Friday, April 19, 2024

tபக்தியும் பாரதமும்

ஓம் நமஹ சிவாய.பாரதம் --பாரினில் பக்தியில் மேன்மையான பாரதம் பக்தி என்பது புரிவது எளிது அதில் நம்பிக்கை ஏற்படுவது எளிதல்ல.காரணம் மனிதன் உடனடி பலன் பெற நினைப்பவன் இந்த உடனடி என்பது பக்தியில் முடியுமா?அதை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க புரிய தெளிய இறைவனைத் தேடுகிறோம். 
     சனாதன தர்மம்  சத்தியத்தின் தர்மம்.அறம்என்பது வேறு.மதம் என்பது வேறு.அறம் அகில உலகிற்கும் பொது.தர்ம சிந்தனை அகில உலகிற்கும்  பொது.வையகம் வாழ மனிதநேயம் ஏற்பட தர்மம்.
மதம் சுயநலமானது.அதில் இறைவனை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும்,இந்தவிதமான மந்திரங்கள் ,வணங்கும் முறை,வணங்கும் நேரம்,உருவ வழிபாடு,அபிஷேகம்,பூமாலை,
சாம்பிராணி,கற்பூரம்,விளக்கு,மெழுகு வர்த்தி அர்ச்சனை ஆராதனை என்ற நெறிமுறையுடன்  கட்டுப்பாடான பக்தி.
     
  அதனால் மதம் மனிதனைப் பிரிக்கிறது.குரான்,பைபிள்,புராணங்கள் மனிதனை மனிதனாக்க
இறை தூதர்களால் ,ரிஷிகள்,முனிவர்களால் ஏற்படுத்தப் பட்டவை.
   இறைவனால் ஏற்படுத்தப்பட்டது தர்மம்.அறம்.ஓளவையார் திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் அறம் காணலாம்.
  அறம் செய விரும்பு என்றால் அது மதமல்ல.மனிதர்களுக்கான 
பொது செயல்.இது தான் பக்தி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் அறம்.ஔவையார் ஈவது விளக்கேல். இது பொது.
இட்டார் பெரியோர்,இடாதார் இழி குலத்தோர். பொது நெறி.

     பக்தி நடுநிலை. மதம் குறுகிய வழி முறை.தர்மம் பரந்தநிலை.
தர்மம் காற்று.தர்மம் தண்ணீர்.தர்மம் நெருப்பு.தர்மம் பூமி.தர்மம் ஆகாயம். பஞ்ச தத்துவங்கள்.இவை அனைத்து மதத்தினருக்கும்
தேவை.அனைத்து தாவரங்கள்,விலங்குகள் இவை இன்றி உயிர் வாழமுடியாது. இதை உணர்ந்து விருப்பு வெறுப்பு இன்றி அன்பு செலுத்துவது பக்தி.
இராமலிங்க அடிகளார் காட்டிய நெறி சமரச சன்மார்கம்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ

இது தான் பக்தி.

தொடரும்






Friday, March 8, 2024

பக்தி

பக்தி என்பது ஆடம்பரமல்ல. ஆழ்மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடவேண்டும். சர்வவியாபியான ஆண்டவன் ஆனந்தக் கூத்தனே. உலக மாயை இன்னல்கள் அளிப்பதும் அவனே. இன்னல் வந்தால் தானே இறைவனை மக்கள் நினைக்கிறார்கள். கபீர் தாசரின் ஈரடி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும். துன்பத்தில் அனைவரும் இறைவனை வழிபடுகின்றனர். இன்பத்தில் இறைவனை நினைப்பதே இல்லை. இன்பத்திலும் நினைத்தால் துன்பத்தில் ஏற்படாது. இராமலிங்க அடிகளார் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும். உனை மறவா திருக்கவேண்டும். மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வில் வாழவேண்டும். இது தான் பிரார்த்தனை. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.

Saturday, February 3, 2024

ராமர் கபீர் எண்ண அலைகளில் ராமர்

 வணக்கம்.

அயோத்தி இராமர்  ஆலயம்  இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 
கபீர்தாசர் பார்வையில் இராமர்  முவ்வுலகிலும் உயர்ந்தவர்.
 ஒரு இராமர் தசரதரின் மகன்.
ஒரு இராமர்  அனைத்து உலகிலும் இருப்பவர்.
ஒரு இராமர் அனைவருக்கும் அன்பானவர்.
ஒரு இராமர் மூஉலகிலும் வியக்கத்தக்கவர்.
 மூன்று இராமரை உலகம் அறியும்.
நான்காவது இராமரின் இரஹசியம் யாரும் அறிவதில்லை.கபீர்.

 ராம்,ராம் என்பதே கபீரின் குரு மந்திரம்.

தசரத ராமர்  உடல் உருவம் உள்ளவர்.

 கபீருக்கு  இரண்டு  இராமர்கள். 
ஒருவர்  வைஷ்ணவ  இராமர். 
மற்றவர் இராமர்.
வைஷ்ணவ இராமர் நாம  ஜபம் செய்விப்பவர்.
இராமர்  முக்தி அளிப்பவர்.

இராமரும் ரஹீமும் ஒருவரே. இரண்டு என்பது பிரமையே.
கபீரின் இராமர் மதசார்பற்றவர்.
அவர்ஒருவர் ஆனால் உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.