Tuesday, February 20, 2018

பக்தி --இன்றைய சிந்தனைகள்

இன்றைய இறை அனுபவம் /சிந்தனைகள் .
_________________________________________
இறைவனிடம் கையேந்துங்கள்
இல்லை என்று சொல்வதில்லை. 
நாம் முழுவதுமாக இறைவனை
விசுவசிக்க வேண்டும் .
மனிதனின் பலமே விஸ்வாஸத்தில் தான்.

  என் தாயார்  எண்பத்தைந்து வயது.
 பல விதநோய்கள். எனக்கும் அப்படியே.

பிரார்த்தனை மற்றும் அருளால்  வாழ்கிறோம்.

அம்மா  சிறுநீர் கழிக்க முடியாமல்
 மிகவும் சிரமப்பட்டார்.
 நேற்று இரவு என் தங்கையிடம்
கட்டாயம்  மருத்துவரிடம் அழைத்துச் செல்   என்று கூறியுள்ளார். இரவு பன்னிரண்டு மணி.

  தங்கையும் அம்மாவும்  தனியாக உள்ளனர்.
இரவு பிரார்த்தனை செய்து   தங்கை தூங்கி விட்டார்.
அம்மா வின் உடல்  திடீரென்று வளைத்துநிமிர்ந்துள்ளார்.
உடனே ஒருமாதமாக  சிறுநீர் கழிக்காதவர்  சிறுநீர் குடம் குடமாக கழித்து   காலையில்  எழுந்து எப்பொழுதும் போல் இயல்பாக  மாறிவிட்டார்.

  ஒரு திரைப்பட பாடல் ,
யானையின் பலம்  எதிலே  தும்பிக்கையிலே,
 மனிதனின் பலம் எதிலே நம்பிக்கையிலே .
நம்மிடம் இறைவனின் மீது நம்பிக்கை உள்ளதா ?
என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.
இறைவனின் மீது உண்மையான பக்தி இருந்தால்
அன்பு இருந்தால் திடமான நம்பிக்கை இருந்தால் தான் குரு கிடைப்பார்.
நம்மில் பலர் குரு கிடைத்தால் தான்
இறைவனின் அருள் கிடைக்கும் என்று
எண்ணுகிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.
நாம் பிறக்கிறோம்.
அழகாக , சிவப்பாக , சிரிப்புடன். அழுகையுடன். கருப்பாக , அசிங்கமாக .
அந்த பிறந்த குழந்தையின் சிரிப்பு ,அழுகை ,
நிறம் , கைகால் அசைவுகள் ,உருவம் பார்த்து
நம்மில் பலர் விமர்சிப்பார்கள்.
அப்பொழுது இறைவன் படைப்பின் ரகசியம் வெளிப்படும்.
அந்தக் குழந்தை சிரிப்பு தெய்வீகம் .
அது பேய் மாதிரி அழுகுது.
அந்தக் குழந்தை அழுவதும் அழகு.
வீர் வீரனு கத்துது.
அந்தக்குழந்தையைப் பார்த்தால்
தூக்கி கொஞ்சனும் போல இருக்கு.
அந்த குழந்தை ரொம்ப புத்திசாலி.
அது சிரிப்பில் கள்ளத்தனம் தோனுது.
இப்படி பிறந்த குழந்தை ஆறு மாதத்தில்
பார்வையாளர்களிடம் ,உறவினர்களிடம்
கொஞ்சலுக்கும் , பேச்சுக்கும் ஏச்சுக்கும்
ஆளாகிறது.
பாரு ,அப்பா மாதிரியே அறிவு / திருட்டுப் பார்வை.
இதனால் தெய்வீகமாக தெய்வ அருளுடன் பிறக்கும்
நாம் இறைவனைக் காண , இறைவன் அருள் பெற ,
சத் குரு பெற , நல்ல நண்பர்கள் பெற, நல்ல சூழல் அமைய , முதலில் இறைவனிடம் மட்டுமே பக்தி , நட்பு , காதல் ,அன்பு , சிரத்தை வைக்கவேண்டும்.
ஞானிகள் வாழ்க்கை வரலாறு முதலில் சாமியார்களையோ ,ஆஷ்ராமங்களை யோ
தேடிச் செல்லவில்லை என்பதே சத்தியம்.
இறைவனின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட
ஆதி சங்கரர் . ரமண மகரிஷி, பிரஹலாதன் ,
கண்ணப்பர் , துளசி தாசர் ,கபீர் , ரைதாஸ் ,
பக்த துக்காராம் , நந்தனார் ,துருவன் போன்றவர்கள் இறைவனின் முழு அருள் பெற்றது
தன் சுய இறை அனுபவத்தால் தான்.
பின்னர் இறைவன் அருளால் உயர்ந்த குரு ,ஞானம் ஆகியவை கிட்டும்.
ஆஷ்ரமங்கள் பணமும் ,நகையும் பொருளும்
வழங்குவோருக்கே முதலிடம் அளித்து ஆசி வழங்கும் . குருவின் ஆசி என்று ஐயாயிரம் ,பத்தாயிரம் ,லக்ஷம் என்று வழங்கி பெறுகிறார்கள்.
சில ஆஷ்ரமங்களில் ஆயுள் சந்தா கொடுத்தால்
முதல் தரிசனம் . ஆசிகள். அங்கு சமத்துவம் இல்லை என்பதே சத்தியம்.
ஆகையால் இறைவனிடம் நேரடி பக்தி ,
தியானமே மற்ற நல வழிகாட்டிகள் கிடைக்க
புகழ் , எண்ணம் போல் வாழ்க்கை அமைய
இறைவனை வழிபட இடைத்தரகர்கள் வேண்டாம்.
நீங்கள் அமைதியாக வழிபட வேண்டுமா,
அழகான குரலில் பாடி ஜபம் செய்யவேண்டுமா ,
தியானம் செய்ய வேண்டுமா
என்ற சுய உணர்வுகள் இயற்கையாகவே வரும்.
பெரியார் , கருணாநிதி போன்றவர்கள் ஒழிந்து
வீட்டுப்பெண்கள் மூலம் இறை அருள் பெறுகிறார்கள் என்பதே சத்தியமான நடவடிக்கை.

No comments: