Sunday, November 26, 2017

ஸ்ரீ பகவத் கீதை --கர்மயோகம் --௨.

c
ஸ்ரீ பகவத் கீதை --கர்மயோகம் --௨.

இவ்வுலகில்  செயலாற்றாமல்
ஒருவரும் இருக்க முடியாது .
இயற்கை மனிதன் வாழ    சில 
குணங்களை அளித்துள்ளது.
சில செயல்கள் தானாக அனிச்சையாக
இயங்குகின்றன,  சில இச்சைக்காக
அல்லது
 இயற்கைக்    கழிவுகள் ,
சுவாசித்தல் , இரத்த  ஓட்டம்  என்று
இயற்கை  இயக்கங்கள் .
சும்மா இரு என்றாலும் கர்மங்கள்
  இயற்கையாகவே   இயங்குகின்றன .
இயக்க   வைக்கின்றன .

ஐம்புலன்களை    அடக்கிவிட்டேன்
 என்றாலும்
மனத்தால் அடக்கமுடியாமல்
எண்ணிக்கொண்டிருந்தால்
அது ஜிதேந்திரியம்    அதாவது  புலன்களை வென்று
விட்டோம் என்பது  மெய்யல்ல. அது பொய்யே.

மனத்தால்  அடக்க வேண்டும். கர்மேந்திரியங்களைக்கொண்டு
செயலாற்றவேண்டும்.
மனதை    அடக்காமல்
  புலன்களை   அடக்குபவன்
 பொய்யான    நடத்தை  உள்ளவனே.

ஆகையால்  மனதை  வென்று
  செயல்களைப்    புரிபவனே ,
உயர்ந்தவனாவான்.
 மனதில்   நல்ல எண்ணங்கள்   வேண்டும் ,
ஐம்புலன்களை  ஒழுக்கமாகப்
பயன்படுத்தவேண்டும்.
அன்றாட  செயல்களைச்    செய்ய  வேண்டும்..
கடன்கள் இயற்கை .
இச்சை ,அனிச்சை
இவைகளை  இயல்பாக
சத்திய தர்மத்துடன்   செய்ய  வேண்டும்.

No comments: