Saturday, April 28, 2018

ஆலயங்கள்

  ஆலயங்கள் 


  ஆலயங்கள் என்பது 

   மனதிற்கு அமைதி தருவது.

மனதின் துன்பங்களை மறக்க  ஆலயம் செல்கிறோம்.

அமைதியான தியான மண்டபம். 
இன்றைய  ஆலயங்கள் முழு பய பக்தியுடன்  உள்ளனவா ? சிந்தித்துப்பாருங்கள்.எத்தனை ஏற்றதாழ்வுகள்.
 சில உயர்ந்த இனம், ஜாதியைச் சேர்ந்தவர்களே  ஆலயத்திற்குள்  பிரவேசிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது. மகிழ்ச்சியே.
ஆனால் கட்டணங்கள், சிறப்பு தரிசனங்கள்,
இலவச தரிசனம்  என்று பிரிக்கிறார்கள்  .
பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆலய நுழைவாயிலில் அமைதி இழக்கின்றனர்.
பிச்சைக்காரர்கள், தடுத்து வாணிகம் செய்யும் நடைபாதை வாணிகர்கள், அர்ச்சனைத்தட்டில் காசு விழுந்தால்  விபூதி என்ற  நிலை.
கடைகள், கடைக்காரர்களின் அழைப்புகள், 
ஆலயங்களில் சாந்தி எங்கே ?



No comments: