Tuesday, February 13, 2018

காஞ்சி சிவாலயங்கள்.

காலை வணக்கம்.
ஓம் நமஹ சிவாய.
பகவானை வழிபடுகிறோம் .

பாவமும் செய்கிறோம்.
பயம் பகவானிடம் உள்ளதா ?

என்றால் 

சனாதன தர்மத்தில் இல்லாததுபோலும் 

இருப்பதுபோலும் இரட்டை வேடம் தான்.

சுயநலம் பகவானின் மீதுள்ள

பயத்தைப் போக்கிவிடுகிறது என்பது ஒரு பக்கம்.

பொது நலம் இறைவனின் மீதுள்ள 

அச்சத்தை அதிகரிக்கிறதா ?என்றால் 

அதுவும் புரியவில்லை. 

உண்மையான தொண்டர்களின் மனவருத்தம் ,

பராமரிக்காத ஆளாயங்களின் நிலை, 

அங்குள்ள அறிய கலைப் பொக்கிஷங்கள், 

தெய்வீக அலைகள்,

இன்னும் பராமரித்தால் தெய்வத்தின் 

அருள் எவ்வளவு கிட்டும்?

இன்னும் அனைவரும் சிறப்பாக வழி பட்டால் 

எவ்வளவு சக்தி கிடைக்கும் ?

ஏன் இந்துக்கள் ஒன்று பட்டு இந்த பொக்கிஷங்களைக் 

காக்க ஒற்றுமையாக பாடுபடவில்லை.
சுயநலமா?

பொருளாதாரமா ? 

பொறாமையா? 

வேற்றுமைகளா?

ஜாதி சம்பிரதாய உட் பூசல்களா ?

முழு அக்கறை ஏன் இல்லை?

அலட்சியம் ஏன்?

கடவுளிடம் நம்பிக்கை இல்லையா ?

 அறிய தெய்வீக ஸ்தலங்களை  ஏன்  பாதுகாக்க வில்லை.
௧௪௮ சிவாலயங்கள்

காண்பிக்கப்படும் என்றார்கள்.

அப்பர் இறைப்பணிக் குழு

இச்செயலைச் செய்கிறது.

பாராட்டுக்கள் .
காலை ஏழு மணிக்கு 

காஞ்சி மாநகரத்தில் உள்ள

சிவலிங்கங்கள் தரிசனம் செய்ய

ஆரம்பித்தோம்.

இரவு ஏழு மணிவரை தரிசனம். 

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள்.

சிவாலயங்கள் பார்த்தோம்.

அங்குள்ள சிவனின் மகிமைகள்,

சிவ வழிபாடு மிகவும் 

சிறப்பாக இருந்தது.
காஞ்சிமாநகரம் ஒரு சுற்றுலா நகரம்.

இத்தனை சிவாலயங்கள் பக்தி சிரத்தையுடன் 

பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த சிவாலயங்களைச் சுற்றி
வீடுகள். 

தூய்மையற்ற

பராமரிப்பு.

ஆனால் பக்தர்கள் எதையும் பேசவில்லை.

நேராக செல்வது இறைவனை வழிபடுவது,

தரிசித்த சிவனின் பெயரை

குறி த்துக்கொள்வது,

யாரும் ஓம் நமஹ சிவாய என்று

இறைநாம கோசங்கள் எழுப்பவில்லை .

ஆனால் அமைதி வழிபாடு.

இதில் சில ஆலயங்களில் 

பெண்கள் தான் தீபாராதனை .

அனைத்துக் கோவில்களும்

வீட்டிற்குள் இருப்பது போல் சுற்றிலும் வீடுகள்.

அந்த அப்பர் இறைப்பணி மன்றம்
பன்னிரண்டு ஆண்டுகளாக
 இந்த இறைதரிசனம் செய்யும் ,

செய்விக்கும்

பணியைச் செய்துவருகிறது.

இத்தனை கோயில்கள்
.
சில வீடுகளுக்குள்.

சில கடைகள் வளாகத்தின் நடுவில்.

சில ஆலயங்கள் முன் இஸ்லாமிய

சகோதரர்களின் கடைகள்,
கார் மெக்கானிக்கல் செட்.
சிவராத்திரி அன்று நான் தரிசித்தது

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள். 

இன்னும் தரிசிக்காத ஆலயங்கள் எண்பத்தெட்டு. 

இந்த நூற்றி நாற்பத்து எட்டு ஆலயங்களின் 

பெயர்கள் அச்சடித்த பிரதிகள் 

சுற்றுலாவில் கலந்து கொண்ட 

அனைவருக்கும் அளிக்கப்பட்டன. 

கலந்து கொள்ளாத பக்தர்களுக்கும் 
வழங்குகிறார்கள்.
காலையில்   ஆரோக்கியமான சிற்றுண்டி.

கேசரி,இட்லி,பொங்கல்.
ஹிந்து மதப் பற்றாளர்கள், 
இந்து முன்னணி என்று

இந்து மதத்திற்குப்போராடும் பல குழுக்கள்,

ஏன் இந்த நலிந்த நிலையில் உள்ள 

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களைப் 

பிரபலப்படுத்தவில்லை?
சைவ வைணவ  வேறுபாடா ?
ஜாதி-சம்பிரதாயங்களா ?

ஆக்கிரமித்தவர்கள் மீதுள்ள பயமா?

அரசியல் கட்சிகள் மீதுள்ள பயமா ?

நிச்சயமாக ஆலயங்கள் 
கட்டிய காலங்களில் 

இந்த ஆக்கிரமிப்பு,
 சுற்றி இல்லங்கள் ,

கடைகள் இருந்திருக்காது. 

சில  புதிதாக  தோன்றியதாகவும்

இருக்கலாம்.

ஹிந்து மதத்தின் ஆழ்ந்த பற்று ,

பக்தி, சிரத்தை உள்ளவர்களில் 

எத்தனை பேருக்கு இந்த முக்கியமாக

பிரபலமில்லா சிவாலயங்கள் பற்றி தெரியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உள்ள
 இந்த குட்டி குட்டி சிவாலயங்கள் பற்றி தெரியும் என்பது தெரியவில்லை..

(நாளை தொடரும்.......)


No comments: