Tuesday, December 12, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் -கீதை -௪.

           இவ்வுலகில்  ஞானிகளால் 
 பண்டிதன் என்று  புகழப்படுபவன்,
ஆசையற்றவன்.
 அவனது செயல்கள்
ஞானாக்னியால்    எரிக்கப்பட்டவை.
 எவ்வித உறுதிமொழி
யும்  ஏற்கப்படாதவை.
 அத்தகையோர்  வினைப்பயனை 

எதிர்பாப்பதில்லை.
 யாரையும்  சார்ந்திருப்பதில்லை.
 அத்தகையோர்    செய்யும்  கர்மம்  கர்மமாக  ஏற்றுக்கொள்ளப்  படுவதில்லை. 

ஆசிரியர்  நன்கு எழுதிய  மாணவனுக்கு
அதிக  மதிப்பெண் தருகிறார்.
  சரியாக  எழுதாத மாணவன்
குறைந்த மதிப்பெண் பெறுகிறான்.
அதிக மதிப்பெண்   பெற்ற  மாணவனின்
   பெற்றோர்கள்  மகிழ்கிறார்கள்.
குறைந்த     மதிப்பெண் பெற்ற 
மாணவனின்   பெற்றோர்கள்
வருந்துகிறார்கள். 
இதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல.
 மகிழ்வு ,வேதனைக்கு    ஆசிரியரின்
 கர்மா பொறுப்பல்ல,

No comments: