Tuesday, December 5, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --9


உலகில்  உயர்ந்தவர்கள்,
சான்றோர்கள் ,
மகான்கள் செய்கின்ற ,
சொல்கின்ற, 
 சான்றளிக்கின்ற
உயர் செயல்கள் ,
எண்ணங்கள்
யாவும் உலகத்தினரால்
பின்பற்றப்படுகின்றன.
அனைவரும் மகான்கள்
ஆவது எளிதல்ல.
அதற்கு இறைவனின்
 கருணை வேண்டும்.
உயர்ந்த எண்ணங்கள்,
கருத்துக்கள்
வெளியிடுவது எளிது.
அதையே நாம் பின்பற்றுகிறோமா ?
காந்தியடிகள்
எந்த ஒரு செயலையும்
தானே செய்வார்.
அதைப்பார்த்து 
மற்றவைகள் செய்வார்கள்.
அவர் செய் சொல்லாதே
என்றே அனுசரித்தார்.
சாலையில்  உள்ள மலத்தின்
அசிங்கத்தைஅவரே கூடையில்
எடுத்து சுத்தம் செய்தார்.
 அவர் மாகான் .
கிருஷ்ணருக்கு  MOOVULAKILUM
கடமை ஏதும் கிடையாது .
அவருக்கு எந்த இலக்கையும்
அடையும்
தேவையும் இல்லை.
இருப்பினும் அவர் செயல்
ஆற்றிக்கொண்டே  இருப்பார்.
இறைவன் தன்னுடைய
கடமையை
செயலை சரிவர
செய்யவில்லை என்றால்
மக்களும் எதுவும்
செய்யமாட்டார்கள்.
மரணம் ,நோய் ,  இளமை , மூப்பு ,
என்ற கர்மங்களை
இறைவன் இடைவிடாது
 செய்வதால்  தான்
மனிதர்களும் கர்மங்களில்
ஈடுபடுகிறார்கள்.
இயற்கையே  இறைவன் என்றால்
சூரியன் THAN  கர்மாவை
கடமையைச் செய்கிறான்.
வருணன் மழைபோழிவிக்கிறான்.
வாயு பகவான் காற்று வீசுகிறான்.
கோடை, வசந்தம்குளிர் ,இலையுதிர்
காலம் என்று   செயலாற்றி
 கடமையைச் செய்கின்றது.
இப்படி மனிதர்களும்
தன்  கர்மங்களை
கடமையைச் செய்யவேண்டும்.
இறைவன் தன் கடைகளைச்
செய்யாமலிருந்தால்
இவ்வுலகமே செயலற்று அழிந்துவிடும்.

பற்றுள்ள  மனிதர்கள் மட்டுமல்ல
ஞானிகளும் தங்கள்
 கடமைகளைச் செய்யவேண்டும்.

No comments: