Tuesday, December 12, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை

     பாவத்தை அடையாதவர் யார் ? என்பதை பகவான் கூறுகிறார் --
ஆசையற்றவன்,
 பற்றற்றவன் ,
புலன்களையும்  மனதையும் அடக்கியவன்.
 செல்வங்களைத் துறந்தவன் ,
உடலால் கர்மங்களைச்செய்பவன்  ,பலனை எதிர்பார்க்காதவன் ,
எதிர்பாராமல் கிடைப்பதில் மகிழ்பவன்,
பொறாமை   இல்லாதவன் , வெற்றி -தோல்விகளைச் சமமாக நினைப்பவன் ,
நடுநிலையாளன் ,கடமையை வேள்வியாகச் செய்பவன்,
ஞான வேள்வியில் அனைத்தையும்
பிரம்ம   ஸ்வரூபமாக  நினைப்பவன் ,
ஐம்புலன்களை  அடக்குதல்,
ஐம்புலன்களிலும்  இறைவனையே காண்பவன் , கேட்டால் இறைவனின் செய்திகள், பார்த்தால் அங்கிங்கெனாதபடி  எங்கும் எதிலும்
பகவானே .
 வள்ளுவர்  கடவுள் வாழ்த்தில் -

பொறிவாயில்  ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்  என்கிறார்.

மனதை ஆத்மாவிற்காகவே   ஒதுக்குதல் , அடக்குதல்,

திரவிய யக்ஞம் , தபோ யக்ஞம் ,யோக  யக்ஞம் .
இந்த வேள்வியில் தன்னிடம் இருப்பதை எடுத்து வழங்குதல்.
ஞானத்தைக்  கொடுத்தால் ஞானம் வளரும் , திரவியம்   கொடுத்தால்  திரவியம் கிடைக்கும், ,
இந்த ஞான   வேள்வி  யின் யதார்த்தம் இதுதான்.

No comments: