Friday, May 5, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம் முப்பது.

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம்  முப்பது.

        தாயிடம்  ஆசிபெற்று   லக்ஷ்மணன்
  ஜானகியின் இருப்பிடத்திற்குச் சென்றான்.
 ராமரையும் சீதையையும் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தான். சீதையையும்  ராமனையும்  வணங்கினான்.
மூவரும் ஒன்றாக  அரண்மனையை அடைந்தனர்.

 ஆண்டவன் நன்றாக படைத்து  விஷயத்தைக் கெடுத்துவிட்டார்.
அவர்களின்     உடல்     மெலிந்து  விட்டது.
மனதில் வேதனை தெரிகிறது.
முகத்தில் வருத்தம் தெரிகிறது  என்று    நகர மக்கள்  தங்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
தேன்    எடுத்த  பிறகு  தேனீக்கள்
கலக்கமடவதுபோல்   கலக்கமடைந்து
 காணப்படுகின்றனர்.
அரண்மனை      வாயிலில்   மிகப்பெரிய கூட்டம்  கூடியது.

எல்லையில்லா  துன்பத்தில்   அனைரும்  கையை  பிசைந்து
கொண்டிருந்தனர்.
இறக்கையில்லா   பறவைகள் துடிப்பதுபோல் கலக்கத்தில்  இருந்தனர்.

ராமர் வந்திருக்கிறார்  என்ற  செய்தி அறிந்து  அமைச்சர்  அரசரை தூக்கி உட்காரவைத்தார்.

அரசர்  சீதையுடன் ராமரைப் பார்த்து கலக்கமடைந்தார்.







 கொண்டிருந்தனர்.
தலையில்   அடித்துக்கொண்டு  வருத்தப் பட்டுக்கொண்டிருந்தனர். i

No comments: