Monday, April 3, 2017

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஏழு

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஆறு

      கூனி  கைகேயியை பலிகடா ஆக்கிய பின்  தன்  கபடம் என்ற  கத்தியை மீண்டும் கூர்மை ஆக்கினாள்.
ராணி கைகேயி உடனே வரக்கூடிய கஷ்டங்களை சகிக்க தயாராக இல்லை.  மான்குட்டி பசுமையான   புல்லை அச்சமின்றி மேய்வதுபோல் தனக்கு வரும் ஆபத்தை  உணராததுபோல்  கைகேயியும் கூனியின் பேச்சில்
மயங்கி தன் விபத்தை உணரவில்லை.

 கூனியின் பேச்சுக்கள் ,  கேட்பதில் மென்மையானவை.
ஆனால் அதன்  விளைவுகள்  பயங்கரமானவை .
விஷம்  கலந்த  தேன்  போல்    அவளது கபட நாடகம்.
 கூனி சொன்னாள்---அம்மா! நீ எனக்கு ஒரு கதை சொன்னாய்.  நினைவு இருக்கிறதா ?

   உன்னுடைய இரண்டு வரங்கள் அரசரிடம்  சேமிப்பாக உள்ளது.  இன்று அந்த வரங்களைக்  கேட்டு  உன் என்னத்தை நிறைவேற்றிக்கொள்.  ஒருவரத்தால் மகனுக்கு பட்டாபிஷேகமும் , ஒருவரத்தால் ராமனுக்கு வனவாசம் கேள்.
சக்களத்தியின் எல்லா ஆனந்தத்தையும் நீயே அடைந்து கொள்.

   முதலில் ராமனின் மீது சத்தியம் வாங்கிய பின் வரங்களைக்  கேள். அப்பொழுதுதான் அவர் சொன்ன வாக்கை மீறமாட்டார் .  இன்று இரவுக்குள் முடிக்கவில்லை என்றால்
வேலை கெட்டுவிடும்.
நான் சொல்லுவதை உயிரைவிட மேலானதாகக் கருதவேண்டும்.
பாவி கூனி மேலும் சொன்னாள்--
 கோவமான பவனத்திற்கு செல்லுங்கள்.
எல்லா வேலையையும் மிகவும் எச்சரிக்கையுடன் செய்யவும்.
அரசரை உடனே  நம்ப வேண்டாம். அவர் சொல்வதைக் கேட்க வேண்டாம்.  ராணி கூனியை  உயிர் போன்ற பிரியமானவள் என்று நினைத்து அடிக்கடி  அவளை புகழ்ந்தாள்.
 உலகில் உன்னைப்போன்ற என்னுடைய நலம் விரும்பி யாரும் இல்லை. மூழ்குபவளுக்கு நீ உதவியாக வந்துள்ளாய்.

நாளை கடவுள் என்னுடைய மன விருப்பத்தைப் பூர்த்தி செய்தால்   உன்னை நான் என் கண்மணிபாப்பா ஆக்கிக்கொள்வேன்.
இவ்வாறு அடிமையை  புகழ்ந்து விட்டு கைகேயி  கோவபவனுக்குச் சென்றாள்.
கலஹம்  விதை. கூனி  மழைகாலம். கைகேயியின் தீய அறிவு
நிலமாகிவிட்டது. அதில் கபடம் என்ற  நீர் ஊற்றி ,
முளை கிளம்பிவிட்டது. இரண்டுவரங்கள்   அந்த முளை கிளம்புதலில்   இரண்டுவரங்கள் இரட்டை இலைகள்.முடிவில் இதில் துன்பம் என்ற பழம் உண்டாகும்.
 கைகேயி  கோபத்தின் எல்லா உருவமாகி  தூங்கினாள்.
அவளுக்கு ஆட்சி  துஷ்ட புத்தி யால் நஷ்டமாகி விட்டது.
அரண்மனையும் நகரமும் ஆடம்பரமாக இருந்தது.
இந்த தீய சூழ்ச்சியை யாரும் அறியவில்லை.

No comments: